எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.15 - முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக சட்ட சபையின் சிறப்புக்கூட்டம் இன்று கூடுகிறது. முதல்வர் ஜெயலலிதா இதற்கான அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட சிறப்புத் தீர்மானம் அப்போது கொண்டுவரப்படும் என்றும் அறிவித்திருந்தார். முல்லைப்பெரியாறு பிரச்சனையில் தமிழக அரசியல் கட்டிகள் அனைத்தும் ஒரே நிலைபாட்டில் இருப்பதால் இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படவுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்பது தமிழகத்தின் நிலையாகும். ஆனால் இதை மறுக்கும் கேரள மாநில அரசு அங்கு புதிய அணையைக் கட்ட முயற்சிக்கிறது. இதற்கு அம்மாநில சட்டசபையில் தீரமானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் முல்லைப்பெரியாறு அணை மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்றும் அது கூறிவருகிறது.
இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது. இந்த பிரச்சனை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கேரளாவில் பல இடங்களில் தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. அதற்குப் பதிலடியாக தமிழகத்திலும் இங்கொன்றும், அங்கொன்றுமாக கேரள மாநிலத்தலைவர்களின் வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடந்ததும், தமிழக போலீசார் தலையிட்டு அதை அடக்கினர்.
கேரள மாநில அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை அடுத்து தமிழகம் கேரள மாநிலங்களுக்கு இடையே எல்லைப்பகுதிகளில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கேரள எல்லையான குமுளி பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த சில நாட்களாக முற்றுகைப் போராட்டம் நடத்தினர். குமிளி, கூடலூர், லோயர் கேம்ப் நோக்கியும், கேரள எல்லைச் சோதனைச் சாவடி நோக்கியும் செல்ல முயன்ற பொதுமக்களை போலீசார் கலைத்தனர். இதனால் பொதுவாக தேனி மாவட்டம் முழுவதும் பதட்டம் ஏற்பட்டது.
இதையொட்டி முதல்வர் ஜெயலலிதா பொதுமக்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இப்பிரச்சினையை விஞ்ஞான பூர்வமாகவும், தர்க்கபூர்வமான முறையிலும் கையாள மாநில அரசை அனுமதிக்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டதுடன் கேரள மக்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார். கேரள அரசு வீணான வதந்திகளைப் பரப்பி வருவதாகவும், இதனால் அணைப் பகுதியில் பதட்டம் ஏற்படுவதாகவும், இருமாநில உறவுகளில் எத்தகைய பிரிவினை சக்திகளுக்கும் இடம்தரக்கூடாது என்றும் முதல்வர் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்த கேரள அரசின் மனு மீது நீதிபதிகள் கடும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.
நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்று கேரள அரசு கோரியிருந்தது. இந்த மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு கீழே குறைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியது. இது கேரள அரசுக்கு பலத்த அடியாகும். இதே நேரத்தில் அணைப்பகுதிக்கு மத்திய பாதுகாப்புப் படையை அனுப்ப வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு தனது நிலையை அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இருமாநில அரசுகளும் அமைதிகாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கோரியுள்ளனர். உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பால் கேரள எல்லைப்பகுதியில் சிறிது பதற்றம் குறைந்துள்ளது.
இச்சூழலில் ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா அறிவித்தப்படி இன்று சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் காலை 11.00 மணிக்கு கூடுகிறது. தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் சிறப்புத் தீர்மானத்தை அரசு கொண்டுவரவுள்ளது. இந்த தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சிகளும் தங்களது கருத்துக்களை எடுத்துக்கூற உள்ளன.
சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தையொட்டி தி.மு.க. இன்று (வியாழன்) நடத்த உள்ள மனித சங்கிலிப் போராட்டத்தை முன்கூட்டியே நடத்துகிறது.
முல்லைப்பெரியாறு பிரச்சனையில் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலையில் உள்ளன.
ஆகவே அரசின் இந்த சிறப்புத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறவுள்ளது. இதன் மூலம் தமிழகம் ஒரே குரலில், ஒரே நிலையில் உள்ளது என்பதை அனைவருக்கும் உணர்த்தும், சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது உச்சநீதிமன்றத்தில் தமிழக்ததின் நிலையை மேலும் வலுப்படுத்தும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
நடிகை மனோரமா மகன் பூபதி மறைவு
23 Oct 2025சென்னை, மனோரமா மகன் பூபதி நேற்று முன்தினம் சென்னையில் காலமானார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-10-2025.
23 Oct 2025 -
இன்று முகூர்த்த தினம் எதிரொலி: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
23 Oct 2025சென்னை, சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று முதல் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
-
செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரத்தில் சட்டப்பேரவையில் தவறான தகவல்: அமைச்சர் மீது இ.பி.எஸ். குற்றச்சாட்டு
23 Oct 2025சென்னை: செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று சட்டமன்றத்தில் தவறான தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளதாக அ.தி.மு.க.
-
ஸ்ரேயாஸ்-ரோகித் வாக்குவாதம்
23 Oct 2025அடிலெய்டில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
-
முதல் முறையாக ஐஸ்லாந்தில் கொசுக்கள் கண்டுபிடிப்பு
23 Oct 2025ரேக்ஜாவிக், ஐஸ்லாந்தில் முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கொசுக்கள் இல்லாத நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து இழந்துள்ளது .
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து உயர்வு: குளிக்க - பரிசல் இயக்க தடை
23 Oct 2025தர்மபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
நெல்லின் ஈரப்பத அளவை ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வருகை தமிழக அரசின் கோரிக்கை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை
23 Oct 2025டெல்லி: நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வரவுள்ளது.
-
தேவர் குருபூஜையில் பங்கேற்க வரும் 30-ம் தேதி பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
23 Oct 2025சென்னை: தேவர் குருபூஜையை முன்னிட்டு வரும் 30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார். அங்கு உள்ள தேவர் சிலைக்கு
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: அமைச்சர்
23 Oct 2025சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
தொடர் சரிவில் தங்கம் விலை
23 Oct 2025சென்னை: தங்கம் விலை நேற்று குறைந்து விற்பனையானது.
-
டெல்லியில் 4 ரவுடிகள் என்கவுன்ட்டர்
23 Oct 2025புதுடெல்லி, பீகாரை சேர்ந்த 4 ரவுடிகள் டெல்லியில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் துணை ஜனாதிபதி
23 Oct 2025சென்னை, கோவையில் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
-
தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக திருப்பதியில் ரூ.4 லட்சம் மோசடி
23 Oct 2025திருப்பதி, திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி நடைபெற்ற நிலையில், இடைத்தரகர் அசோக்ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.
-
பீகார் சட்ட சபை தேர்தல்: இன்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிப்பு
23 Oct 2025பாட்னா, பீகார் தேர்தலில் இன்டியா கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ.யின் எப்.ஐ.ஆர். நீதிமன்றத்தில் தாக்கல்
23 Oct 2025கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்த எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
புகாரின் மீது வழக்குப்பதியாமல் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம் ஐகோர்ட் மதுரைக் கிளை கருத்து
23 Oct 2025மதுரை: புகாரை வாங்கி வைத்துக் கொண்டு வழக்குப்பதிவு செய்யாமல் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு சமம் என்று ஐகோர்ட் மதுரை கி
-
வடகிழக்கு பருவமழை எதிரொலி: தமிழ்நாட்டில் 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிப்பு
23 Oct 2025சென்னை, வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழகத்தில் உள்ள 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்பட்டது.
-
தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு ஒப்புதல்: மத்திய அரசுக்கு நயினார் நன்றி
23 Oct 2025சென்னை, தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து நயினார் நாகேந்திரன் வரவேற்பு அளித்துள்ளார்.
-
வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
23 Oct 2025சென்னை: வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்கிறார். அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
-
மேற்கு வங்க மாநிலத்தில் ஆயிரம் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!
23 Oct 2025கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் 1,000 வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
ஆஸ்திரேலியா அணியிடம் ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா
23 Oct 2025அடிலெய்டு: அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்றுள்ளது.
-
ஆசியான் உச்சி மாநாடு: காணொளி மூலம் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு
23 Oct 2025புதுடெல்லி: ஆசியான் உச்சி மாநாடுட்டில் பிரதமர் மோடி காணொளி மூலம் பங்கேற்கிறார்.
-
நிவாரண பணிகள் பற்றி பேச அருகதையில்லை: இ.பி.எஸ். மீது அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
23 Oct 2025சென்னை: நிவாரண பணிகள் பற்றி பேச இ.பி.எஸ்-க்கு அருகதை இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
இன்று 6 மாவட்டங்களில் கனமழை
23 Oct 2025சென்னை: தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


