எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, டிச.15 - முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக சட்ட சபையின் சிறப்புக்கூட்டம் இன்று கூடுகிறது. முதல்வர் ஜெயலலிதா இதற்கான அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட சிறப்புத் தீர்மானம் அப்போது கொண்டுவரப்படும் என்றும் அறிவித்திருந்தார். முல்லைப்பெரியாறு பிரச்சனையில் தமிழக அரசியல் கட்டிகள் அனைத்தும் ஒரே நிலைபாட்டில் இருப்பதால் இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படவுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்பது தமிழகத்தின் நிலையாகும். ஆனால் இதை மறுக்கும் கேரள மாநில அரசு அங்கு புதிய அணையைக் கட்ட முயற்சிக்கிறது. இதற்கு அம்மாநில சட்டசபையில் தீரமானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் முல்லைப்பெரியாறு அணை மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்றும் அது கூறிவருகிறது.
இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது. இந்த பிரச்சனை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கேரளாவில் பல இடங்களில் தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. அதற்குப் பதிலடியாக தமிழகத்திலும் இங்கொன்றும், அங்கொன்றுமாக கேரள மாநிலத்தலைவர்களின் வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடந்ததும், தமிழக போலீசார் தலையிட்டு அதை அடக்கினர்.
கேரள மாநில அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை அடுத்து தமிழகம் கேரள மாநிலங்களுக்கு இடையே எல்லைப்பகுதிகளில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கேரள எல்லையான குமுளி பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த சில நாட்களாக முற்றுகைப் போராட்டம் நடத்தினர். குமிளி, கூடலூர், லோயர் கேம்ப் நோக்கியும், கேரள எல்லைச் சோதனைச் சாவடி நோக்கியும் செல்ல முயன்ற பொதுமக்களை போலீசார் கலைத்தனர். இதனால் பொதுவாக தேனி மாவட்டம் முழுவதும் பதட்டம் ஏற்பட்டது.
இதையொட்டி முதல்வர் ஜெயலலிதா பொதுமக்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இப்பிரச்சினையை விஞ்ஞான பூர்வமாகவும், தர்க்கபூர்வமான முறையிலும் கையாள மாநில அரசை அனுமதிக்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டதுடன் கேரள மக்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார். கேரள அரசு வீணான வதந்திகளைப் பரப்பி வருவதாகவும், இதனால் அணைப் பகுதியில் பதட்டம் ஏற்படுவதாகவும், இருமாநில உறவுகளில் எத்தகைய பிரிவினை சக்திகளுக்கும் இடம்தரக்கூடாது என்றும் முதல்வர் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்த கேரள அரசின் மனு மீது நீதிபதிகள் கடும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.
நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்று கேரள அரசு கோரியிருந்தது. இந்த மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு கீழே குறைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியது. இது கேரள அரசுக்கு பலத்த அடியாகும். இதே நேரத்தில் அணைப்பகுதிக்கு மத்திய பாதுகாப்புப் படையை அனுப்ப வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு தனது நிலையை அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இருமாநில அரசுகளும் அமைதிகாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கோரியுள்ளனர். உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பால் கேரள எல்லைப்பகுதியில் சிறிது பதற்றம் குறைந்துள்ளது.
இச்சூழலில் ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா அறிவித்தப்படி இன்று சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் காலை 11.00 மணிக்கு கூடுகிறது. தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் சிறப்புத் தீர்மானத்தை அரசு கொண்டுவரவுள்ளது. இந்த தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சிகளும் தங்களது கருத்துக்களை எடுத்துக்கூற உள்ளன.
சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தையொட்டி தி.மு.க. இன்று (வியாழன்) நடத்த உள்ள மனித சங்கிலிப் போராட்டத்தை முன்கூட்டியே நடத்துகிறது.
முல்லைப்பெரியாறு பிரச்சனையில் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலையில் உள்ளன.
ஆகவே அரசின் இந்த சிறப்புத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறவுள்ளது. இதன் மூலம் தமிழகம் ஒரே குரலில், ஒரே நிலையில் உள்ளது என்பதை அனைவருக்கும் உணர்த்தும், சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது உச்சநீதிமன்றத்தில் தமிழக்ததின் நிலையை மேலும் வலுப்படுத்தும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க 18-வது நாளாக தடை
12 Jul 2025ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18-வது நாளாக நீடிக்கிறது.
-
மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு?
12 Jul 2025சென்னை : த.வெ.க. 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் : விசாரணையில் தகவல்
12 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
இந்திய அணி அதனை செய்திருக்க கூடாது: இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
12 Jul 2025லண்டன் : இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார்.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
இன்ஜின்கள் அணைக்கப்பட்டதால் விபத்து: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
12 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் அணைக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
துருக்கி அரசுடன் ஒப்பந்தம்: ஆயுதங்களை கீழே போட்ட குர்திஷ் பிரிவினைவாதிகள்
12 Jul 2025இஸ்தான்புல், துருக்கியுடனான சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈராக்கிய குர்திஷ் பிரிவினைவாதிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட தொடங்கியுள்ளனர்.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
-
இங்கிலாந்து ஜோடி சாம்பியன்
12 Jul 2025'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
யுனெஸ்கோ பட்டியலில் செஞ்சி கோட்டை: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
12 Jul 2025சென்னை : செஞ்சி கோட்டை தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்தையும், வீரம் செறிந்த வரலாற்றையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்
12 Jul 2025பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி.
-
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது கூட்டணியல்ல: தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சதித்திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Jul 2025சென்னை, அ.தி.மு.க. - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
கடந்த 10 நாட்களில் வெப்ப அலையால் 2,300 பேர் பலி
12 Jul 2025லண்டன், ஐரோப்பியாவின் பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் 2,300 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வ
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம்: விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு
12 Jul 2025மும்பை : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம் தொடர்பாக விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
சிறிய பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம்: வி.சி.க.வினருக்கு திருமாவளவன் அறிவுறுத்தல்
12 Jul 2025சென்னை, சிறிய பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று வி.சி.க.வினருக்கு திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.
-
16 நிபந்தனைகளுடன் த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி
12 Jul 2025சென்னை : த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு பைக் பேரணி, பட்டாசுகளுக்கு தடை போன்ற நிபந்தனைகளுடன் காவல் துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
-
பாரதிய ஜனதா கூட்டணிக்கு த.வெ.க. வர வாய்ப்புள்ளதா? / மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்
12 Jul 2025புதுடெல்லி : நாங்கள் பல கட்சிகளை ஒரே கூட்டணியில் கொண்டு வர முயற்சிக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்தார்.