எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராஞ்சி, மே 24 - ஐ.பி.எல். 50-வது லீக் போட்டியில் சென்னை-ஐதராபாத் அணிகள் மோதின. இதில் சென்னை அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றில் தக்கவைத்துக் கொண்டது. அந்த அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் 45 பந்துகளில் 90 ரன்களை அதிவிரைவாகக் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.
முன்னதாக டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஸ்மித் மற்றும் ப்ளெஸ்ஸிஸ் இருவரும் அதிரடியை தொடங்கின. 3 ஓவர்களில் 32 ரன்கள் அதிவேகமாக சேர 4-வது ஓவரில் ப்ளெஸ்ஸிஸ் 19 ரன்களுக்கு துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட் ஆனார். ரசூல் வீசிய 6-வது ஓவரில் தொடர்ந்து 3 சிக்ஸர்களை விளாசிய ஸ்மித், கரன் சர்மா வீசிய அடுத்த ஓவரிலும் ஒரு சிக்ஸ அடித்து அரை சதத்தை நெருங்கினார். அதே ஓவரில் அவர் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரை சதத்தை ஸ்மித் தவற விட்டார்.
அடுத்து ஹஸ்ஸி களமிறங்க, மறுமுனையில் ஆடிய ரெய்னா 4 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி ஓவர் வரை களத்தில் இருந்த தோனி - டேவிட் ஹஸ்ஸி ஜோடி, அணியை சிறப்பான ஸ்கோரை நோக்கி வழிநடத்தியது. 77 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் களத்தில் இணைந்த இருவரும் ஐதராபாதின் பந்துவீச்சை பொறுமையாக கணித்து ஆடினர். 68 பந்துகளில் 108 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் குவித்தனர்.
தோனி 39 பந்துகளிலும், ஹஸ்ஸி 33 பந்துகளிலும் அரை சதத்தைக் கடந்தனர். முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன் வீசிய 20-வது ஓவரில், சென்னையின் கேப்டன் தோனி 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களோடு 24 ரன்களைக் எடுத்தார். கடைசி 5 ஒவர்களில் மட்டும் 68 ரன்களை இந்த இணை அதிரடியாக சேர்த்தது. 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 185 ரன்களை சென்னை அணி குவித்தது.
186 என்ற கடின இழக்கொடு களமிறங்கிய வார்னர் முதல் ஓவரிலிருந்தே தனது பவுண்டரிக் கணக்கை துவக்கினார். மோஹித் சர்மா வீசிய அந்த ஓவரில் 2 பவுண்டரிகள் வர, தொடர்ந்து வந்த எந்த பந்துவீச்சாளரையும் சுதாரிக்க விடாமல் வார்னர் மைதானத்தின் அனைத்து மூலைகளுக்கும் பந்தை விரட்டினார். 25 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் அரை சதம் கடந்த வார்னர், ஹாஸ்டிங்ஸ் வீசிய 6-வது ஓவரில் 5 பவுண்டரிகளை அடுத்தடுத்து அடித்தார். மறுமுனையில் ஆடிய தவாண் தனக்கு ஆட வந்த வாய்ப்புகளையும் 1 ரன் எடுத்து வார்னருக்கு கொடுக்க, அவர் வெற்றி இலக்கை சீக்கிரம் எட்டும் முனைப்பில் தொடர்ந்து அதிரடியாக ஆடினார். 45 பந்துகளில் 90 ரன்கள் எடுத்தபோது (12 பவுண்டரி, 3 சிக்ஸர்) ஹாஸ்டிங்ஸ் வீசிய பந்து மட்டையில் பட்டு ஸ்டம்பை தாக்க வார்னர் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.
ஒரு ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் தேவைப்பட்ட நிலையில் வார்னர் விட்டதை தவாண் தொடர்ந்தார். 40 பந்துகளில் அரை சதத்தை எட்டிய தவாண் அணியை பாதுகாப்பாக வெற்றிப் பாதைக்கு வழிநடத்திச் சென்றார். ஓஜா (19 ரன்கள்), ஃபின்ச் (7 ரன்கள்), சாமி (0) ஆகியோர் தேவையின்றி ஆட்டமிழந்தாலும், கடைசி ஓவரில் 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் ஐதராபாத் அணி 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கைக் கடந்தது.
முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றில் ஆடுவதற்கான வாய்ப்பை ஐதராபாத் தற்போதைக்கு தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-11-2025.
19 Nov 2025 -
காசா அமைதி திட்டத்திற்காக ட்ரம்ப் வரைவு தீர்மானத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல்
19 Nov 2025நியூயார்க் : காசா அமைதி திட்டத்திற்கு ஐ.நா. அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
திருவண்ணாமலையில் மலையேற பக்தர்களுக்கு அனுமதி தரப்படுமா? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
19 Nov 2025தி.மலை, தீபத்தின் போது ஈரப்பதத்தை பொறுத்து மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா இல்லையா என முடிவு செய்யப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
-
சபரிமலை: கூட்ட நெரிசலில் பெண் பலி
19 Nov 2025சபரிமலை : சபரிமலை கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்தார்.
-
கோவையில் இயற்கை வேளாண் மாநாடு: விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியை விடுவித்தார் பிரதமர் மோடி
19 Nov 2025கோவை கோவையில் நடைபெற்ற இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியை விடுவித்தார்.
-
ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை இந்தியா வருகை
19 Nov 2025டெல்லி : ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் இந்தியா வந்துள்ளார்.
-
தனியார் வாகனங்களில் சிவப்பு, நீல நிற விளக்குகள் பயன்படுத்த கூடாது: தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை
19 Nov 2025தூத்துக்குடி, உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி சிவப்பு, நீல நிற ஸ்ட்ரோப் விளக்குகளை தனியார் வாகனங்களில் பயன்படுத்த கூடாது என்று எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
-
ஆடம்பரம் அல்ல; அவசியமானது: மதுரை, கோவை நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை தேவை : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
19 Nov 2025சென்னை : மெட்ரோ ரயில் என்பது ஆடம்பரம் அல்ல அவசியமானது என்று தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரை, கோவை நகரங்களுக்கு இது அவசியமான உள்கட்டமைப்புத் தேவை என்றும் அவ
-
மதுரையில் நிகழந்த சோகம்: நாய் குறுக்கே பாய்ந்ததால் சாலையில் விழுந்த தம்பதி, பேருந்து மோதி பலி
19 Nov 2025மதுரை : மதுரையில் நாய் குறுக்கே பாய்ந்ததில் மோட்டார் சைக்கிளில் இருந்து கணவனும், மனைவியும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர்.
-
கூகுள் மேப்பில் 10 புதிய அம்சங்கள் அறிமுகம்
19 Nov 2025வாஷிங்டன் : கூகுள் மேப்பில் 10 புதிய அப்டேட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
-
வருவாய் துறை ஊழியர்கள் புறக்கணிப்பு: தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் பாதிப்பு
19 Nov 2025சென்னை : வருவாய் துறை ஊழியர்கள் புறக்கணிப்பால் தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
-
மராட்டிய அரசியலில் பரபரப்பு: பா.ஜனதா- சிவசேனா திடீர் மோதல்
19 Nov 2025மும்பை : பா.ஜனதா- சிவசேனா இடையே திடீர் மோதலில் அமைச்சரவை கூட்டத்தை சிவசேனா மந்திரிகள் புறக்கணித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
-
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; தமிழக அரசாணை வெளியீடு
19 Nov 2025சென்னை, அரசு ஊழியர்களுககு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
ஆலங்குளம், கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு
19 Nov 2025சென்னை : ஒட்டப்பிடாரம், ஆலங்குளம், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தி.மு.க. நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
-
பாரதிய ஜனதாவில் இணைந்த பிரபல நடிகை ஊர்மிளா உன்னி
19 Nov 2025திருவனந்தபுரம் : பிரபல மலையாள நடிகை ஊர்மிளா உன்னி பா.ஜனதாவில் இணைந்தார்.
-
லெபனானில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு
19 Nov 2025சிடோன் : லெபனானில் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்தி வான்வழி தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சிங்கள ஆட்சியாளர்களுக்கு திருமாவளவன் கண்டனம்
19 Nov 2025சென்னை : இலங்கையின் ஒற்றை ஆட்சி முறைமையின்கீழ் தமிழ் மக்கள் ஒருபோதும் நிம்மதியாக வாழமுடியாது என்று தெரிவித்துள் வி.சி.க.
-
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு கோவையில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
19 Nov 2025கோவை : பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
-
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சருடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையா? பிரேமலதா பேட்டி
19 Nov 2025திண்டுக்கல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சருடன் கூட்டணி பற்றி பேசவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
-
கோவையில் பிரதமர் மோடியை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி
19 Nov 2025கோவை : கோவையில் பிரதமர் மோடியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்.
-
அல்பலா பல்கலை., குழும தலைவரை 13 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கும் அமலாக்கத்துறை
19 Nov 2025புதுடெல்லி : அல்பலா பல்கலைக்கழக குழும தலைவரை 13 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ளது.
-
அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்: சபரிமலை விரைந்த அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை
19 Nov 2025அரக்கோணம் : தொடர்ந்து அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டத்தை அடுத்து சபரிமலைக்கு அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை
19 Nov 2025புதுடெல்லி : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட் இடைக்கால தடையை விதித்துள்ளது.
-
குடும்ப பிரச்சினையை பிரதமரிடம் எடுத்து சென்ற லல்லு மூத்த மகன்
19 Nov 2025பாட்னா, எங்கள் குடும்ப பிரச்சினையை விசாரியுங்கள் என்று பிரதமருக்கு,லாலு பிரசாத் மூத்த மகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
ரூ.56 கோடி நிவாரண நிதி வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல்
19 Nov 2025நெல்லை, தமிழக அரசு அறிவித்த நிவாரண நிதியை வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


