தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் உள்ள 'முழு நேர ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி, நவ.18 - கலைஞர் டிவிக்கு ரூ214 கோடி பணம் சட்டவிரோதமாக கைமாறியது தொடர்பான அமலாக்கப் பிரிவின் வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் நாளை முதல் தினமும் விசாரணை நடைபெறும் என்பதால் கனிமொழி உள்ளிட்டோர் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டார்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு பிரதிபலனாக ரூ.214 கோடியை பல்வேறு நிறுவனங்கள் மூலம் கலைஞர் டிவிக்கு அளித்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து வாங்கிய பணத்தை கடனாக கணக்கு காட்டி கலைஞர் டிவி திருப்பி அளித்தது.
இந்தப் பணப்பரிமாற்றத்தில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றுள்ளது என்பது அமலாக்கப் பிரிவின் வழக்கு. இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, ராஜ்யசபா திமுக எம்.பி. கனிமொழி, தயாளு அம்மாள், ஸ்வான் நிறுவனத்தின் ஷாகித் பல்வா உட்பட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்களின் நிர்வாகிகள் என 19 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இக்குற்றப்பத்திரிகையை ஏற்று அக்டோபர் மாதம் குற்றம்சாட்டப்பட்ட அனைவர் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி ஓ.பி. சைனி பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த முறை விசாரணையின் கனிமொழி உள்ளிட்ட சிலர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. கனிமொழியின் வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. இதனால் கனிமொழிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பிக்க இருப்பதாக நீதிபதி சைனி அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பதறியடித்துக் கொண்டு நீதிமன்றத்துக்கு வந்த கனிமொழியின் வழக்கறிஞர் மன்னிப்பு கோரியதால் பிடிவாரண்ட் பிறப்பிப்பதை ரத்து செய்தார் நீதிபதி. இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நடைபெற்றது.
இன்றைய விசாரணையின் போது அமலாக்கப் பிரிவு கூடுதல் இயக்குநர் முதல் நபராக சாட்சியமளித்தார். அவர் தமது சாட்சியத்தின் போது, ஸ்பெக்ட்ரம் மூல வழக்கில் சிபிஐ துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதனடிப்படையில்தான் இந்த வழக்கு தொடரப்பட்டது. கலைஞர் டிவிக்கு ரூ214 கோடி சட்டவிரோதமாக, அன்னிய செலாவணி சட்டங்களை மீறி கைமாறியதற்கான முழு ஆதாரங்கள் அமலாக்கப் பிரிவிடம் இருக்கிறது என்று அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனரா? என்று நீதிபதி சைனி கேட்டார். அப்போது ஆ. ராசா மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த நீதிபதி சைனி, நாளை மறுநாள் முதல் இந்த வழக்கில் நாள்தோறும் விசாரணை நடைபெறும். கனிமொழி உள்ளிட்ட அனைவரும் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்தார். இதன் பின்னர் வழக்கின் விசாரணை நாளை மறுநாள் நடைபெறும் என்று நீதிபதி சைனி ஒத்திவைத்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குற்றம்சாட்டப்பட்டோரின் வழக்கறிஞர்களில் ஒருவரான விஜய் அகர்வால், நவம்பர் 19-ந் தேதி முதல் இந்த வழக்கில் நாள்தோறும் விசாரணை நடைபெறும் என்று கூறினார்.
இவ்வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் நேரில் ஆஜராக ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டது. இதனால் தயாளு அம்மாள் தவிர 18 பேரும் நாளை மறுநாள் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டை வறுவல்![]() 2 days 6 hours ago |
கருவேப்பிலை குழம்பு.![]() 5 days 2 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-06-02-2023.
06 Feb 2023 -
இந்திய அணியை எதிர்கொள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் தயாராக உள்ளனர் : ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ்
05 Feb 2023பெங்களூரு : இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
-
அதிகாரபூர்வ வேட்பாளரை கட்சியின் பொதுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
05 Feb 2023சென்னை : அதிகாரபூர்வ வேட்பாளரை பொதுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும் என்று ஓ. பன்னீ்ர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
குடிபோதையில் மனைவி மீது தாக்குதல்: கிரிக்கெட் வீரர் காம்ப்ளிக்கு நேரில் ஆஜராக பாந்த்ரா போலீஸ் நோட்டீஸ்
05 Feb 2023மும்பை : குடிபோதையில் மனைவியை தாக்கிய புகாரில் கிரிக்கெட் வீரர் காம்ப்ளி நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி பாந்த்ரா போலீஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
பொதுக்குழு உறுப்பினர்கள் சமர்ப்பித்த கடிதத்தை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க டெல்லி செல்கிறார் அவை தலைவர்
05 Feb 2023சென்னை : சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் சமர்ப்பித்த கடிதத்தை ஓரிரு நாளில் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க அ.தி.மு.க.
-
சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவை அவை தலைவர் நிராகரித்துள்ளார் : ஓ.பி.எஸ். தரப்பு வைத்திலிங்கம் கண்டனம்
05 Feb 2023சென்னை : அதிகாரப்பூர்வ வேட்பாளரை கட்சியின் பொதுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் தரப்பு வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்
-
ஈரோடு கிழக்கு தொகுதியில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.14 லட்சம் பறிமுதல்
05 Feb 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
பாலியல் குற்றவாளியான சந்தீப்பை கிரிக்கெட் பயிற்சி முகாமில் சேர்க்க கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
05 Feb 2023காத்மாண்டு : நேபாளத்தில் பாலியல் வழக்கில் குற்றவாளியான சந்தீப்பை கிரிக்கெட் பயிற்சி முகாமில் சேர்க்க கூடாது என கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.நேபாள நாட்டு கிரிக்
-
14 நாட்டு வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி : 13-ந் தேதி தொடங்குகிறது
05 Feb 2023சென்னை : தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) ஆதரவுடன் சென்னை ஓபன் ஏ.டி.பி.
-
அமெரிக்காவில் முதன்முறையாக சட்ட பத்திரிகை தலைவர் பதவிக்கு இந்திய - அமெரிக்கர் நியமனம்
06 Feb 2023நியூயார்க் : அமெரிக்காவில் இருந்து வெளிவரும் மிக பழமை வாய்ந்த சட்ட பத்திரிகையின் தலைவர் பதவிக்கு முதன்முறையாக இந்திய - அமெரிக்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
-
ரிஷி சுனக்கின் பொருளாதார திட்டங்கள் பிரிட்டனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் : முன்னாள் பிரதமர் லிஸி ட்ரஸ் விமர்சனம்
06 Feb 2023லண்டன் : பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து விலகிய லிஸி ட்ரஸ், தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கின் பொருளாதார திட்டத்தை விமர்சித்துள்ளார்.
-
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்தி.வேகப்பந்து வீச்சாளர் பங்கேற்பதில் சிக்கல்
05 Feb 2023நாக்பூர் : இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
-
டி20 உலகக்கோப்பையை இந்திய மகளிர் அணி கைப்பற்ற இது மிகவும் முக்கியம் - மிதாலி ராஜ்
05 Feb 2023புதுடெல்லி : ஐசிசி நடத்தும் மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் பிப்ரவரி 10 முதல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ளது.
-
பெண்கள் பிரிமீயர் லீக்: மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜூலன் கோஸ்வாமி நியமனம்
05 Feb 2023மும்பை : ஆண்களுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டு வருகிறது. இதே போல் பெண்களுக்கான ஐ.பி.எல்.
-
ஈராக்கில் பிரபல பெண் யூடியூபர் கவுரவ கொலை
06 Feb 2023திவானியா : ஈராக் நாட்டில் புகழின் உச்சியில் இருந்த பெண் யூடியூபரை அவரது தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கின் விசாரணை சூடுபிடித்துள்ளது.
-
பொம்மை நாயகி விமர்சனம்
06 Feb 2023யோகி பாபு நாயகனாக நடித்து தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் பொம்மை நாயகி. கதை, யோகி பாபு தன் மனைவி மற்றும் குழந்தையுடன் சராசரி வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
-
ரன் பேபி ரன் விமர்சனம்
06 Feb 2023ஆர்.ஜெ. பாலாஜி முதல் முறையாக கேலி கிண்டல், இல்லாமல் மிக சீரியஸாக நடித்துள்ள திரில்லர் படம் ரன் பேபி ரன்.
-
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி: பாராளுமன்ற இரு அவைகளும் இன்று காலை வரை ஒத்திவைப்பு
06 Feb 2023புதுடெல்லி : எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பாராளுமன்ற இரு அவைகளும் இன்று காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
-
அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி
06 Feb 2023ஏதேன்ஸ் : கிரீசில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
நான் கடவுள் இல்லை விமர்சனம்
06 Feb 2023எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரகனி, இனியா, சரவணன், சாக்ஷி அகர்வால், யுவன் மயில்சாமி உட்பட பலர் இணைந்து நடித்துள்ள படம் நான் கடவுள் இல்லை.
-
தி கிரேட் இந்தியன் கிச்சன் விமர்சனம்
06 Feb 2023மலையாளத்தில் வெளியாகின தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழில் இந்த படம் ரீமேக் செய்யபட்டுள்ளது.
-
அடுத்தடுத்து பயங்கர பனிச்சரிவு: ஆஸ்திரியாவில் 10 பேர் உயிரிழப்பு
06 Feb 2023வியன்னா : ஆஸ்திரியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.
-
தலைக்கூத்தல் விமர்சனம்
06 Feb 2023ஜெய்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கண்ணன் நாராயணன் இசையில் சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி உள்ள படம் தலைக்கூத்தல்.
-
சிம்ஹா நடிக்கும் வசந்த முல்லை
06 Feb 2023சிம்ஹா நடிப்பில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் படம் வசந்த முல்லை.
-
முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக கர்நாடக மாநிலம் மாறியுள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்
06 Feb 2023பெங்களூரு : முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக கர்நாடக மாநிலம் மாறியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.