முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்காவுக்கு கட்டாய விடுமுறை

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      ஊழல்
Image Unavailable

புது டெல்லி - சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்காவுக்கு கட்டாய விடுமுறையில் செல்லுமாறு உத்தரவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்கா ஊழல் வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அவரை விசாரணையில் இருந்து நீக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் பிரசாந்த் பூஷண் வழக்கு தொடர்ந்தார். சிபிஐ இயக்குனரை சந்தித்த 2 ஜி வழக்கில் தொடர்புடையவர்களின் வருகை பதிவேடு பட்டியலையும் கோர்ட்டில் ஒப்படைத்தார்.
இதையடுத்து சிபிஐ இயக்குனருக்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட் அவரை 2 ஜி வழக்கு விசாரணையில் இருந்து விலகி இருக்குமாறு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படையில் ரஞ்சித் சின்கா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
ரஞ்சித் சின்கா வருகிற டிசம்பர் மாதம் 2ம் தேதியுடன் சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்னதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதையடுத்து ரஞ்சித் சின்காவை கட்டாய விடுமுறையில் செல்ல உத்தரவிடப்படுகிறது. அதன் பிறகு அவர் 2 ஜி ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எந்த வகையில் உதவினார் என்று விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பணி ஓய்வு பெற இருக்கும் நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க இருப்பதால் ரஞ்சித் சின்காவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மத்திய உள்துறை இணை மந்திரி அனில் கோஸ்வாமி சிபிஐ சிறப்பு இயக்குனர் அனில் சின்காவுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். ரஞ்சித் சின்காவை தொடர்ந்து அனில் சின்காதான் மூத்த சிபிஐ அதிகாரியாவார். எனவே ரஞ்சித் சின்காவுக்கு பதில் அனில் சின்கா சிபிஐ இயக்குனர் பொறுப்பை ஏற்பார் என்று தெரிகிறது. இதற்கிடையே 2 ஜி வழக்கு விசாரணையில் இருந்த ரஞ்சித் சின்கா விலக்கி வைக்கப்பட்டதால் 2 ஜி வழக்கில் விசாரணை அதிகாரியாக சிபிஐ கூடுதல் இயக்குனர் ஆர்.கே. தத்தா நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தத்தா 1981ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவை சேர்ந்த அதிகாரியாவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து