முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கலிலியோவின் கைவிரல்

நவீன அறிவியலில் கலிலியோவுக்கு முக்கியமான இடம் உண்டு. வானியலின் தந்தை என்று போற்றப்படுபவர். சூரியன்தான் பூமியை சுற்றி வருகிறது என நெடுங்காலமாக நம்பப்பட்டு வந்த நிலையில், பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்பது உள்பட சூரிய மண்டலம் குறித்த பல்வேறு உண்மைகளை 15 ஆம் நூற்றாண்டிலேயே உலகுக்கு அளித்தவர். இதற்காக வாடிகன் திருச்சபையால் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மன உளைச்சல் மற்றும் கண்பார்வை இழந்து 1642 ஆம் ஆண்டு அவரது வீட்டிலேயே உயிரிழந்தார். அதன் பின்னர் 100 ஆண்டுகள் கழித்து 1737 இல்  அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு, சாண்டா குரோஸ் தேவாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஆண்டன் பிரான்செஸ்கோ என்பவர் கலிலியோவின் வலது கை நடுவிரலை எடுத்து பத்திரப்படுத்தினார். அந்த விரல் பதப்படுத்தப்பட்டு, இத்தாலியின் புளோரன்ஸ் அருங்காட்சியகத்தில் தற்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

விரைவில் அறிமுகம்

உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கிவரும் ‘யூடியூப்’ நிறுவனம் வீடியோக்களின் இடையே விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றது. இந்த விளம்பரங்கள் மூலம் வீடியோக்களை அப்லோடு செய்பவர்களும் வருமானத்தைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.இதேபோன்றதொரு வசதியினை பேஸ்புக் நிறுவனம் விரைவில் வழங்கவுள்ளது.

மூக்கின் நுகர்வு திறன்

மனித புலன்களில் பார்வை மங்கிப்போனால், அதைச் சரி செய்துகொள்ள கண்ணாடி போட்டுக் கொள்ளலாம். காது கேட்கும் திறன் குறைந்தால், ஹியரிங் எய்ட் வைத்துக் கொள்ளலாம். ஆனால், முகர்வுத் திறனை மேம்படுத்திக் கொள்ள அப்படி எந்தத் தொழில்நுட்பமும் இல்லையா என உங்களைப் போல எனக்கும் கேள்வி எழுந்தது. அதற்கும் பதில் தொழில்நுட்ப வடிவில் வந்துவிட்டது. ஷக் மெக்கின்லி என்ற பொறியாளர் / கண்டுபிடிப்பாளரின் முயற்சியில் உருவாகியிருக்கும் முகர்வு ரேஞ்சர் (Nasal Ranger) பார்ப்பதற்கு பைனாகுலர் போலவே இருக்கும் இந்த உபகரணம் நம்மைச் சுற்றியிருக்கும் வாசனை வடிவத்தை மேம்படுத்தி ஆல்ஃபேக்டரிக்கு அனுப்புவதன் மூலம் மெல்லிய வாசனைகளையும் கண்டறிந்து சேமித்துக் கொள்ளப் பயன்படுகிறது. உணவுப் பொருள் உற்பத்தி, வாசனைத்திரவிய உருவாக்கம், சுவாசிக்கும் காற்றின் தரம் போன்ற பல பிரிவுகளில் மேற்படி உபகரணம் உதவியாக இருக்கும்.

ஆயிரம் லிங்கம்

கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் சீர்சி என்ற ஊரிலிருந்து சுமார் 17 கிலோமீட்டர் பயணம் செய்தால், சால்மலா ஆற்றை அடையலாம். இந்த ஆற்றுக்குள் இருக்கும் பாறைகளில் ஆயிரம் (சஹஸ்ர) லிங்கங்கள் இருக்கின்றன. ஆற்று நீரோட்டம் உள்ள பகுதிகளில்தான் இந்த அத்தனை லிங்கங்களும் உள்ளன. இந்த லிங்கங்கள் அனைத்தும் ஆவுடையாருடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒருசில லிங்கங்களுக்கு முன்பு நந்தி சிலையும் செதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆயிரம் லிங்கங்களும் எப்பொழுது உருவாக்கப்பட்டது? யாரால் உருவாக்கப்பட்டது? என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இதே போல கம்போடியா நாட்டில் கபல்சியான் என்ற ஊரில் ஓடும் ஆற்றில்தான் ஆயிரம் லிங்கங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு சிவலிங்கம் தவிர, ராமர், கிருஷ்ணர், லட்சுமி போன்ற சுவாமி சிலைகளும் இருக்கிறது.

காகித பாட்டில், Paper bottle

1907  ஓர் விஞ்ஞான அதிசயம் நடந்தது. அதுதான் லியோ பேக்லேண்ட் என்பவர் பாலிமர் பேக்லைட் எனப்படும் பிளாஸ்டிக்கை கண்டறிந்த ஆண்டு. அதன் பிறகு அணு ஆயுதத்தை விட உலகையே அச்சுறுத்தும் ஒரு நச்சாக மாறும் என அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைக்கு உலகின் முக்கிய தேவை பிளாஸ்டிக்குக்கு ஒரு உடனடி மாற்று. இந்த சூழலில் நொய்டாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கண்டறிந்ததுதான் காகித பாட்டில். சுக்ஸி பாட்டில் மற்றும் மக்கும் கழிவுகளை கொண்டு இவற்றை 2 ஆண்டு ஆய்வுக்கு பின் வடிவமைத்துள்ளனர். எளிதில் மக்கக் கூடியதாகவும், கசிவுத்தன்மை அற்றதாகவும் இவை உள்ளதாக கூறப்படுகிறது. அப்பாடா எப்படியோ பிளாஸ்டிக்கிலிருந்து தப்பினால் போதும் என்கிறீர்களா.. அதுவும் சரிதான்.

விண்வெளியின் கருந்துளையிலிருந்து வெளிச்சம்

விண்வெளி அறிவியல் குறித்து உற்று கவனித்து வருபவர்களுக்கு தெரியும் பிளாக் ஹோல் என்பது குறித்து. பிரபஞ்சத்தில் அறியமுடியாத புதிரான அப்பகுதி குறித்து விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இன்னும் தலையை பிய்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மனித முயற்சிகளுக்கு அப்பால் விரியும் அதை நோக்கி பயணிக்கும் துணிச்சலும் ஆற்றலும் இன்னும் மனித இனத்துக்கு வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த சூழலில் தான் முதன்முறையாக பிளாக் ஹோலின் பின் புறத்திலிருந்து வெளிச்சம் வருவதை விண்வெளி வீரர்கள் கண்டுள்ளனர். சுமார் 1800 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலிருந்து இந்த ஒளி வநதுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அரிதான நிகழ்வு குறித்து நேச்சர் இதழிலும் அறிவியல் கட்டுரை ஒன்று வெளியாகி உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago