முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகின் முதன் எஸ்எம்எஸ்

உலகிலேயே முதன் முதலில் அனுப்பப்பட்ட எஸ்.எம்.எஸ் எதுவென்று பலருக்கும் தெரியாது. வோடோபோன் நிறுவனம்தான் முதன் முதலில் தன் வாடிக்கையாளர்களுக்கு இந்த எஸ்.எம்.எஸ் வசதியை அறிமுகம் செய்தது. அதாவது நெயில் பப்புவோர்த் என்பவர் தனது கணினி வழியாக ரிச்சர்ட் ஜார்விஸ் என்பவருக்கு ‘மேர்ரி கிறிஸ்துமஸ்’ (‘Merry Christmas’) என்கிற எஸ்.எம்.எஸ்-யை முதன்முதலில் அனுப்பினார். வோடோபோன் நிறுவனத்தின் அப்போதைய தலைமை அதிகாரிதான் இந்த ரிச்சர்ட் ஜார்விஸ் என்பவர் ஆவார். ஆர்பிட்டல் 901 மொபைலுக்கு இந்த எஸ்.எம்.எஸ்-யை அனுப்பி உள்ளார். இது சுமார் 14 கேரக்டர்களை கொண்டது. இந்த எஸ்.எம்.எஸ் 1992 ஆம் வருடம் முதன் முதலில் அனுப்பப்பட்டது. இதில் இன்னொரு சுவாரசியம் என்ன தெரியும் தற்போது இந்த எஸ்எம்எஸ் சுமார் 1.70 லட்சம் யூரோவுக்கு ஏலத்துக்கு வருகிறது என்பதுதான்.

வெள்ளை சர்க்கரை என்ற சீனியை கண்டுபிடித்த நாடு எது தெரியுமா?

நாம் அனைவரும் தினமும் பயன்படுத்தும் சுவையான பொருள் வெள்ளை சர்க்கரை எனப்படும் சீனி. கரும்பு, பீட்ரூட், பனை போன்றவற்றிலிருந்து தொடக்கத்தில் தயாரிக்கப்பட்ட சர்க்கரை வெள்ளை நிறத்தில் கிடையாது. பழுப்பு நிறத்திலேயே வந்தது. அதை வெள்ளையாக மாற்றியது யார் தெரியுமா... இந்தியர்கள்தான். வெள்ளை சர்க்கரையாக பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிப்பு நுட்பங்களை நமது இந்தியா தான் முதல் முதலில் உருவாக்கியுள்ளது. சர்க்கரை தயாரிக்கும் முறை இந்தியாவில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. தொடக்கத்தில் இந்தியாவில் இருந்து வந்த இந்த தொழில் நுட்பம் சீனா, பெர்சியா மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு பரவி இறுதியில் 13 ஆம் நூற்றாண்டில் மத்திய தரைக்கடலை அடைந்துள்ளது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை சர்க்கரை ஒரு அரிய பொருளாகவும் மிகவும் விலையுயர்ந்த பொருளாகவும் கருதப்பட்டுள்ளது.

அதிசய வானவில் கிராமம்

 ரெயின்போ வில்லேஜ் அல்லது வானவில் கிராமம் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா.. தற்போது உலகம் முழுவதையும் கவர்ந்துள்ள அந்த கிராமம் ஒரு முதியவரால் உலகத்தின் கவனத்தை பெற்றது என்றால் ஆச்சரியம் தானே.. அவர் பெயர் Huang Yung-fu, அந்த கிராமம் Taichung அமைந்துள்ள இடம் தைவான். 2 ஆம் உலகப் போர் கால கட்டத்தில் சீனாவிலிருந்து பிரிந்து வந்த சிலருக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட ராணுவ குடியிருப்புகள் அமைந்த இடம் தான் Taichung. அண்மையில் இதை இடித்து விட்டு மால் கட்ட அரசு முடிவு செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்து 97 வயதான Huang Yung-fu மட்டும் வெளியேற மறுத்து விட்டார். அதிகாரிகள் என்ன செய்வது என தெரியாமல் கையை பிசைந்தனர். ஆனால் அதிகாரிகளுக்கு எதிராக போராடும் வலிமையை இழந்து விட்ட முதியவர் Huang Yung-fu தன் கையில் எடுத்தது தூரிகையை. அந்த கிராமத்தின் அனைத்து சுவர்களை மூலை முடுக்குகளையும்,இண்டு இடுக்குகளையும் தனது கலை திறமையால் அற்புதமான ஓவிய கூடமாக மாற்றினார். பார்ப்பவர்களை கவரும் வானவில் கிராமமாக மிளிர்ந்தது. இதை கேள்விபட்ட பொது மக்கள் அங்கு வந்து இவற்றை படம் எடுத்து உலகம் முழுவதும் பரப்பி விட்டனர். தற்போது ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் வரும் பிரபல சுற்றுலா தளம் என்ற பட்டியலில் அந்த கிராமம் இடம் பெற்றது. இதையடுத்து அதை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட்டு அரசே இப்போது தனது பொறுப்பில் பாதுகாத்து வருகிறது. தூரிகையின் வலிமையை இந்த உலகுக்கு புரிய வைத்தவர் Huang Yung-fu.

ஒரு கிலோ டீத்தூள் ரூ.99999 கேட்டால் அசந்து போவீங்க

இந்தியாவில் அதுவும் அசாம் மாநிலத்தில் விளைவிக்கப்படும் டீத்தூள்தான் தற்போது சுமார் ரூ.1 லட்சத்துக்கு அதாவது ரூ.99999 க்கு விற்பனையாகியுள்ளது. அசாம் மாநிலத்தில் திப்ருகார் மாவட்டத்தில் அமைந்துள்ள மனோகரி டீ எஸ்டேட்டில் விளையும் மனோகரி கோல்ட் டீத்தூள்தான் தற்போது ஏலத்தில் கிலோவுக்கு ரூ.99999 க்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. அதற்கு முன்னதாக அதிக பட்ச விலையாக கோல்டன் பட்டர்ஃபிளை டீத்தூள்தான் ரூ.75 ஆயிரத்துகு விற்று சாதனை படைத்தது. தற்போது அதை மனோகரி டீத்தூள் முறியடித்துள்ளது.

சன்ஸ்கிரீன் ஆபத்து

சூரிய ஒளியில் நடமாடுவதன் மூலம் வைட்டமின் டி உடலில் உற்பத்தியாகிறது. சூரிய ஒளியில் நேரம் செலவு செய்வதை நிறுத்தியதாலும், சன்ஸ்கிரீன் அதிகமாக பயன்படுத்துவதாலும் உலகின் பெரும்பாலான மக்களுக்கு வைட்டமின் டி குறைபாடு உள்ளதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் உலகில் 1 பில்லியன் மக்களுக்கு வைட்டமின் டி குறைபாடு அல்லது போதுமான வைட்டமின் டி இல்லாததால் பலவித தீவிரமான தோல் நோய்களுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. மக்கள் சூரிய ஒளியில் குறைந்த நேரம் செலவிடுவதாலும், அப்படியே வெளியில் சென்றாலும் சன்ஸ்கிரீன் பூசிக்கொண்டு போவதாலும், உடலில் வைட்டமின் டி உற்பத்தியாவது தடைபடுவதோடு புற்றுநோய் ஆபத்து ஏற்படுகிறதாம். செல் வளர்ச்சி, நோய் எதிர்ப்புசக்தி, நரப்பு தசை வளர்ச்சி மற்றும் உடலில் கட்டிகளை குறைப்பது போன்ற முக்கிய உடல் செயல்பாடுகளில் வைட்டமின் டி பங்காற்றுகிறது.

ஒன்பது வகை விஷம்

நவம் என்றால் ஒன்பது, பாஷாணம் என்றால் விஷம். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்கள். சித்தர்கள் முறைப்படி ஒன்பது விஷங்களை சேர்த்துக் கட்டுவது தான் நவபாஷாணம் ஆகும். பாஷாணங்களில் மொத்தம் 64. இதில் நீலி எனும் பாஷாணம் மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க வைக்கக் கூடியதாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago