அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு பெணணுக்கு ஓராண்டு இடைவெளியில் இரட்டை குழந்தைகள் பிறந்த அதிசய சம்பவம் உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஓராண்டு இடைவெளியில் பிறந்த இரட்டை குழந்தைகளா.. அது எப்படி.. கலிபோர்னியாவை சேர்ந்தவர் பாத்திமா மாட்ரிகல் என்ற இளம்பெண். இவர் கருவுற்றிருந்தார். பிரசவ வலி எடுக்கவே டிசம்பர் 31 இல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவு 11.45க்கு இவருக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் மீண்டும் அவருக்கு பிரசவ வலி எடுக்கவே அவரை சோதித்ததில் அவர் இரட்டை குழந்தைகளை கருவுற்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு மற்றொரு குழந்தையை பிரசவிததார். இதன் மூலம் அந்த குழந்தை 2022 இல் ஜனவரியில் பிறந்தது. இதனால் இரண்டு குழந்தைகளுக்கும் வெவ்வேறு தேதி, மற்றும் வருடங்களில் பிறந்த தினம் அமைந்தது. இந்த செய்தி உலகம் முழுவதும் வேகமாக பரவியது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ரோபோ தமிழர்களுக்கு எழுத்தாளர் சுஜாதா மூலம் பரவலாக அறிமுகமானது எனலாம். அவரது ஜீனோ என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது. “ரோபோ” என்கிற வார்த்தை பிறந்தது 1920ல். பெயர் சூட்டியவர் பிரபல செக் கலைஞர் ஜோசெஃப் சாபெக். அவருடைய தமையன் கேரல் சாபெக் நாடகத்தில் முதன் முறையாக இந்த வார்த்தையை உபயோகித்தார்.மனிதனை ஒத்த உருவத்துடன்ன் இருந்தால்தான் அதற்குப் பெயர் ரோபோ என்பது தவறு. தொழிற்சாலைகளில் நிறைய ரோபோக்களைக் காண முடியும். கார் தயாரிக்கும் இடங்களில் பெரிய பெரிய கைகள் (கைகள் மட்டுமே!) உடைய ரோபோக்களைப் பார்க்கலாம். நூறு ரோபோக்களில் நாற்பது ஜப்பானில் தான் தயாராகின்றன.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணிகளுக்கு இன்ஜெஸ்டிபுள் சென்சார் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘டிஜிட்டல் மாத்திரைகள்’ வழங்கப்படவுள்ளன. இந்த மாத்திரை பயணிகளின் வயிற்றில் உள்ள அமிலத்தன்மை, பயணிகளின் தூக்கம் முறை, உடலின் வெப்பநிலை மற்றும் இதய துடிப்பு போன்ற தகவல்களை வழங்குகிறது. இதன்மூலம் பயணிகளின் உடல்நிலை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளமுடிகிறது.
தலைக்கு மட்டுமின்றி, உடலுக்கும், நல்லெண்ணெய் தேய்த்து, மசாஜ் செய்து குளித்து வந்தால், சருமம் பொலிவோடு, மென்மையாக இருக்கும். மேலும் உடல் சூட்டை தவிர்க்க இது பெரிதும் உதவும். பொடுகுத் தொல்லை இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால் நீங்கும்.
மனிதன் அறிவியலில் எவ்வளவோ முன்னேறிவிட்டதாக பீற்றிக் கொள்ளலாம். ஆனால் பிரபஞ்சத்தின் முன்னால் அது இம்மி கூட கிடையாது. பிரபஞ்சத்தில் தற்கால நவீன மனிதன் தேடி கண்டடைந்த பிரபஞ்சம் எல்லாம் சூரிய குடும்பத்தில் ஒளி பாயும் அளவுக்குத்தான். அதை மொத்த பிரபஞ்சத்தோடு ஒப்பிடும் போது 10 சதவீதம் கூட கிடையாது. மீதமுள்ள 90 சதவீத பிரபஞ்சம் இருளில் ஆழ்ந்திருக்கிறது. அது எப்படி இருக்கிறது என்பதை பற்றி நமக்கு துளியும் தெரியாது. சூரியன், நட்சத்திரம் போன்ற ஒளி வீசும் கிரகங்களின் ஒளி செல்லாத பகுதிகளையும் தாண்டி பிரபஞ்சம் விரிந்து கிடக்கிறது. அந்த இருளுக்குள் ஆழ்ந்திருப்பது என்ன என்பதுதான் டிரில்லியன் டாலர் கேள்வி. இதையெல்லாம் நாம் சொல்லவில்லை அறிவியல் இணைய தளத்தில் வெளியான ஆய்வு சொல்கிறது.
கடல் நீர் என்றாலே உப்பு கரிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். விஞ்ஞானிகள் முதல் சாதாரண மக்கள் வரை இதை நன்றாக அறிவர். கடலின் உப்பு அளவை பிபிடி என குறிப்பிடுகின்றனர். அதாவது ஆயிரம் கிராம் நீரில் கரைந்திருக்கும் உப்பின் அளவு இது. தோராயமாக கடலில் சுமார் 1 லிட்டர் நீரில் 7 ஸ்பூன் அளவுக்கு அதாவது 34 பிபிடி முதல் 37 பிபிடி வரை உப்பு இருக்கும். உப்பின் காரணமாகவே கடல் நீர் நன்னீரை காட்டிலும் அடர்த்தியாக உள்ளது. அதே நேரத்தில் உப்புசுவை குறைவாக உள்ள கடலும் உலகில் உள்ளன. அதில் அண்டார்டிகா பகுதியில் உள்ள கடலின் மேல்மட்டத்தில் 34 பிபிடி அளவுக்கு காணப்படும். அதே நேரத்தில் ஆர்க்டிக் பகுதியில் உள்ள கடலில் 30 பிபிடி அளவுக்கே உப்பு கரிக்கும். இதற்கு இப்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி கரைந்து கடலில் கலப்பதும், ஏராளமான நன்னீர் நதிகள் மற்றும் மழை நீர் கடலில் கலந்து அதன் உப்பு சுவையை குறையச் செய்கின்றன. ஆனால் முதல் இடம் ஐரோப்பா மற்றும் ஸ்காண்டிநேவியன் பகுதியில் உள்ள பால்டிக் கடலுக்குத்தான். அதன் உப்பின் அளவு வெறும் 10 பிபிடி அளவுதான். இதற்கு காரணம் இப்பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட நன்னீர் நதிகள் இங்கு வந்து கலக்கின்றன. அதிக உப்புகரிப்பு சுவை உள்ள கடல் சொல்லவே வேண்டாம் மத்திய தரைக்கடல்தான். அதன் உப்பின் அளவு 38 பிபிடி. இங்கு கடலில் கலக்கும் நன்னீர் மற்றும் மழை நீரின் அளவை காட்டிலும் ஆவியாகும் நீரின் அளவு மிகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஆப்கானிஸ்தான் எல்லையில் பாக்., நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு 80 ஆக உயர்வு
23 Feb 2026இஸ்லாமாபாத், ஆப்கனிஸ்தானுக்கு உட்பட்ட எல்லைப் பகுதிகள் மீது பாகிஸ்தான் விமானப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-க்கும் மேலாக அதிகரி
-
தங்கம் விலை உயர்வு
23 Feb 2026தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,18,880-க்கு விற்பனையானது.
-
நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி
23 Feb 2026காத்மாண்டு, நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர்.
-
அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் சஸ்பெண்டு ரத்து: தமிழக கவர்னர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Feb 2026சென்னை, அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் சஸ்பெண்டு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஈரான் மீதான தாக்குதல்: அமெரிக்க ராணுவத்தளபதி குறித்த கருத்துக்கு அதிபர் ட்ரம்ப் விளக்கம்
24 Feb 2026வாஷிங்டன், ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் எச்சரித்ததாக வெளியான தகவலை அமெரிக்க அதிபர் டொ
-
நான்கு ஆண்டுகளை நிறைவு செய்த ரஷ்யா-உக்ரைன் போா்
24 Feb 2026கீவ், ஐரோப்பிய கண்டத்தில் 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு மாபெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்திய ரஷ்யா-உக்ரைன் போா் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
-
எனக்காக துப்பாக்கியுடன் பலர் காத்திருக்கிறார்கள்..! அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நகைச்சுவை
24 Feb 2026புளோரிடா, எனக்காகத் துப்பாக்கியுடன் எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா?
-
நாளை இந்தியா வருகிறார் கனடா பிரதமர் மார்க் கார்னி: பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை
24 Feb 2026ஒட்டவா, கனடா பிரதமர் மார்க் கார்னி பிப்ரவரி 26 முதல் மார்ச் 7 வரை இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
-
அணு ஆயுதக் குறைப்பு விவகாரம்: ஈரான்-அமெரிக்கா நாளை 3-ம் கட்ட பேச்சுவார்த்தை
24 Feb 2026ஜெனீவா, அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தில் ஈரான் - அமெரிக்கா இடையே ஜெனீவாவில் நாளை (பிப்.26ம் தேதி) 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.


