முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தப்ப முடியாது

கூகுள் இணையதளத்தில் இன்காக்னிடோ எனப்படும் தனிப்பட்ட தேடுதளத்தைப் நாம் பயன்படுத்தினாலும், அதில் உங்களை பார்த்து கண் சிமிட்டுவதைப் போல, புருவம் நெரிப்பதைப் சில பாவனைகள் தோன்றும். இதற்கு கூகுள் உங்களை தொடர்ந்து வேவு பார்த்து கொண்டிருக்கிறது என்று அர்த்தமாம். இது தெரியாமல், ஆபாசப் படங்களை பார்த்து ரசித்துக்கொண்டிருக்க வேண்டாம் நண்பர்களே.

மாறிய கோவில்

12-ம் நூற்றாண்டில் , 2-ம் சூரியவர்மனால் கட்டப்பட்ட அங்கோர் வாட்டை ஆரம்பத்தில் ஓர் விஷ்ணு தள வழிப்பாட்டு கோவிலாக இருந்தது. பின் 14 - 15-ம் நூற்றாண்டுகளில், புத்த மத துறவிகளால் கையகப்படுத்தப்பட்டு கூடுதலான புத்த சிலைகளும், கலைநய வேலைப்பாடுகளும் சேர்க்கப்பட்டு புத்த கோவிலாக மாற்றப்பட்டது.

உலகின் மிக விலையுயர்ந்த மசாலா

உலகின் மிக விலையுயர்ந்த மசாலா 'சிவப்பு தங்கம்' (Red Gold) என்று அழைக்கப்படுகிறது. தற்போது, ​​இந்த மசாலாவின் விலை, கிலோ ஒன்றுக்கு 2.5 லட்சம் முதல், 3 லட்சம் ரூபாய் வரை என்பது ஆச்சரியம் அளித்தாலும் உண்மையான விலை தான் இது. செடிகளில் இருந்து கொய்யப்படும் சுமார் ஒன்றரை லட்சம் பூக்களில் இருந்து ஒரு கிலோ குங்குமப்பூ கிடைக்கிறது. ஒரு பூவில் இருந்து மூன்று குங்குமப்பூ மட்டுமே கிடைக்கும் என்பது ஆச்சரியமான தகவல் ஆகும். 

தொடர்ந்து 20 ஆண்டுகளாக 19 உலக சாதனைகளை நிகழ்த்தி வரும் மூதாட்டி

ஜப்பானை சேர்ந்தவர் 72 வயதான மூதாட்டி Chiyomi Sawa. இவர் 19 உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர் என்றால் நம்ப முடிகிறதா. நம்பித்தான் ஆகவேண்டும். அதிலும் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து 19 உலக சாதனைகளை நிகழ்த்தி உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தி தன் வசம் திரும்பி பார்க்க வைத்துள்ளார். பளு தூக்குதலில் தான் தொடர்ந்து அவர் இந்த சாதனைகளை நிகழ்த்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே அதிகமான பிரமிடுகள் எந்த நாட்டில் அமைந்துள்ளன?

பிரமிடுகள் என்றாலே நமக்கு நினைவக்கு வருவது எகிப்துதான். பிரமிடுகளும் அதில் வைக்கப்பட்டுள்ள மம்மி எனப்படும் பழங்கால சடலங்களும் உலகம் முழுவதும் வியப்பை ஏற்படுத்துபவையாகும். ஆனால் உலகிலேயே அதிகமாக பிரமிடுகள் உள்ள நாடு எகிப்து என்று நீங்கள் நினைப்பீர்களேயானால்.. அது முற்றிலும் தவறு. அதிகமான பிரமிடுகள் உள்ள நாடு சூடான் தான். எகிப்து நாட்டில் 138 பிரமிடுகள் உள்ளன என்றால் சூடானில் 244 பிரமிடுகள் உள்ளன. சூடான் நாடு நைல் நதி நாகரிகத்துக்கு மிகவும் எடுத்துக்காட்டான நாடாகும். கிபி 1070 தொடங்கி கிமு 350 வரையிலும் குஷார்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அவர்கள்தான் சூடானில் பிரமிடுகளை உருவாக்கினர். எகிப்து பிரமிடுகளின் உயரம் சுமார் 400 அடி என்றால் சூடானில் அவை சுமார் 100 அடி கொண்டவையாக அமைக்கப்பட்டிருந்தன.

சந்திரசேகருக்கு டூடுல்...

நட்சத்திரங்கள் எல்லாம் அதன் அணுசக்தியை இழக்கும்போது இறந்த நட்சத்திரங்களாகி அதாவது கருங்குழிகளாக (பிளாக் ஹோல்)மாறுகின்றன என்று கூறியவர் தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகர். இவர்தான், கருங்குழி என்ற ஒன்று ‌உள்ளது என்று நிரூபித்தவர். இவரின் 107-வது‌ பிறந்த தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago