புவியிலிருந்து சுமார் 472 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்திருக்கும், ஐந்து மில்லியன் முதல் 10 மில்லியன் வயது கொண்ட ரிக்-210 நட்சத்திரம் திடீரென 5.67 புவிநாட்களில் அதன் ஒளியிலிருந்து 15 சதவிகித பிரகாசத்தை இழந்துள்ளது. திடீரென இவ்வாறு நிகழ்ந்துள்ளது மர்மமாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
புல் வகை நாயும் டெர்ரிஸ் வகை நாயும் சேர்ந்த கலப்பின நாய்தான் பிட்புல். நம்மூரில் நடத்தப்படும் சேவல் சண்டைகளைப் போல ஐக்கிய நாடுகளில் இந்த நாய்களைப் பயன்படுத்தி பிட்புல் சண்டைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 1835-ம் ஆண்டு பிட்புல்லை பயன்படுத்தி போட்டிகள் நடைபெறுவதற்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் தடைவிதித்தன. ஆனாலும், இப்போது வரை சட்டத்துக்குப் புறம்பாக பிட்புல் சண்டைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிட்புல் நாய்கள் அடிப்படையில் மூர்க்க குணம் கொண்டவை. இவ்வகை நாய்களை ஒருகாலத்தில் வேட்டையாடுவதற்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சண்டைகளுக்கும், வேட்டையாடுவதற்கும் பயன்படுத்தப்பட்டதால் இவ்வகை நாய்களை பெரும்பாலும் வீடுகளில் வளர்ப்பதில்லை. உலகிலேயே மிக ஆபத்தான நாய் பிட்புல் தான். அந்நாய், மனிதர்கள், மிருகங்கள் என்று பாரபட்சமின்றி வாயில் கவ்வ தொடங்கி விட்டால் உயிர் போகும் வரை விடாது. இந்த நாயால், கடந்த 2005 ஆம் வருடத்திலிருந்து 2014ஆம் வருடம் வரை, அமெரிக்காவில் சுமார் 508 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 203 நபர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.
காகிதங்களில் வரையப்படும் படங்களை டிஜிட்டல் மயமாக மாற்ற ஐ.எஸ்.கே.என் என்ற நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. லேப்டாப் போன்று உருவாக்கப்பட்டுள்ள இந்த டிவைசில் பென்சிலை பொருத்தி, காகிதத்தை அதற்கான pad- இல் வைத்து வரைந்தால் அது டிஜிட்டல் ஓவியமாக மாறிவிடும். பேட்-டின் விலை ரூ.2000 , பென்சிலின் விலை ரூ.1270.
உலக கம்பளி உற்பத்தியில் 2 சதவீதம் இந்தியாவில் உற்பத்தியாகிறது.ராஜஸ்தான், ஜெய்சால்மர் நகரத்தில்தான் இந்தியாவில் கம்பளி அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு, கோடைகாலத்தில் உடலை வருத்தி எடுக்கும் கடும் வெயிலும், குளிர்காலத்தில் உடலை துளைத்தெடுக்கும் கடும் பனிக்காற்றும் வீசும்.
இயற்கை சீற்றங்களான நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறிய ‘மை ஷேக்’ என்ற மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கம் வருவதை இந்த ஆப் மூலம் எளிதாக முன்கூட்டியே அறியலாம். சீஸ்மோமீட்டர் எனும் கருவியினால் மொபைலில் உள்ள ஜிபிஸ் மூலம் இந்த அதிர்வுகள் உணரப்பட்டு அறிவிக்கப்படுகிறது. இது வரை இரண்டு லட்சம் பேர் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் மங்கோலிய பேரரசரான குப்லாய்கானின் ( Kublai Khan) ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சூவன்லிசௌ(shuan Chou) துறைமுக நகரில் உள்ள இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீன பேரரசரின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும். சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ஆம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் பேரரசனான செங்கிஸ்கானின் பேரனாவான். மங்கோலிய பேரரசர்கள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பண்ருட்டி சம்பவம் எதிரொலி: தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி
30 Jan 2026சென்னை, “தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான் என்று அ.தி.மு.க.
-
பா.ஜக. - அ.தி.மு.க. துரோக கூட்டணி: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது: சென்னையில் நடந்த கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
30 Jan 2026சென்னை, இந்தியாவிலேயே யாரும் அடைய முடியாத 11.19 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சியை, திராவிட மாடல் ஆட்சியில் சாத்தியப்படுத்தியிருக்கிறோம்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை பிப்ரவரி 5-ல் கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை
30 Jan 2026சென்னை, பிப்ரவரி 2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 5-ம் தேதி (வியாழக்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின
-
சிவகங்கை மாவட்டத்தில் இன்று அரசு சார்பில் விழா: 2,560 கோடி ரூபாய் மதிப்பிலான 49 முடிவடைந்த திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
30 Jan 2026சென்னை, சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று ரூ.


