எலும்பு மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், முதலில் சரியான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். அழற்சி எதிர்ப்பு உணவுகளான ஆலிவ் ஆயில், முழு தானியங்கள் போன்றவற்றை அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், வைட்டமின் மற்றும் கனிமச்சத்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டும்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
உலகின் மிகப் பெரிய நிலத்தடி நீர் வீழ்ச்சி அமெரிக்காவில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா.. அமெரிக்காவில் உள்ளது. அமெரிக்காவில் உள்ள ரூபி பால்ஸ் எனப்படும் இந்த அருவி தரைக்கு கீழே சுரங்கப் பாதைகளின் வழியாக சென்றால் அங்கு அமைந்துள்ளது. ஆம்... தரைக்கு கீழே குகைகளின் வழி பயணம் செய்தால் மிகவும் உயரமான பாறையிலிருந்து நிலத்தடி குகைக்குள் இந்த அருவி கொட்டுவதை பார்ப்பது மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும், அவ்வாறு இந்த அருவியில் நீர் கொட்டும் உயரம் மட்டும் எவ்வளவு தெரியுமா 1120 அடி... உலகின் புவியியல் அதிசயங்களில் ரூபி அருவியும் ஒன்றாகும். இதற்காக பிரத்யேக பூங்கா, தரைக்கு கீழே செல்லும் லிப்ட் என பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதற்காக பிரத்யேகமாக கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்த அருவி மட்டுமின்றி, இந்த அருவி அமைந்துள்ள தரை கீழ் சுரங்க குகைகளும் ஒரு புவியியல் அற்புதங்கள்தான்.
பன்றி இனத்தைச் சேர்ந்தது யானைகள். ஆப்ரிக்க யானைகள், சராசரியாக 3 ஆயிரத்து 500 கிலோ எடை உடையது. ஒரு நாளைக்கு 250 கிலோ உணவும், 200 லிட்டர் தண்ணீரும் உட்கொள்ளும். யானைகளின் தந்தங்கள் ஐந்து மீட்டர் நீளமும், 90 கிலோ எடையும் கொண்டு இருக்கும். மணிக்கு 32 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் திறனுடைய யானை, நீரில் நன்றாக நீந்தவும், 4.5 மீட்டர் ஆழத்தில் மூழ்கியும் செல்லும். யானைகளுக்கு வாசனை நரம்புகள் வாயில் இருப்பதால், சுவாசிப்பதும், வாசனை அறிவதும் தும்பிக்கையால்தான்.’’முதன்முதலில் தோன்றிய யானை, பன்றி அளவே இருந்தது. இதனால், யானைகள் பன்றி இனத்தைச் சேர்ந்தது. ஆரம்பத்தில் நீண்ட மூக்காக இருந்து பின்பு துதிக்கையாக வளர்ந்தது’’ என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு பெணணுக்கு ஓராண்டு இடைவெளியில் இரட்டை குழந்தைகள் பிறந்த அதிசய சம்பவம் உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஓராண்டு இடைவெளியில் பிறந்த இரட்டை குழந்தைகளா.. அது எப்படி.. கலிபோர்னியாவை சேர்ந்தவர் பாத்திமா மாட்ரிகல் என்ற இளம்பெண். இவர் கருவுற்றிருந்தார். பிரசவ வலி எடுக்கவே டிசம்பர் 31 இல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவு 11.45க்கு இவருக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் மீண்டும் அவருக்கு பிரசவ வலி எடுக்கவே அவரை சோதித்ததில் அவர் இரட்டை குழந்தைகளை கருவுற்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு மற்றொரு குழந்தையை பிரசவிததார். இதன் மூலம் அந்த குழந்தை 2022 இல் ஜனவரியில் பிறந்தது. இதனால் இரண்டு குழந்தைகளுக்கும் வெவ்வேறு தேதி, மற்றும் வருடங்களில் பிறந்த தினம் அமைந்தது. இந்த செய்தி உலகம் முழுவதும் வேகமாக பரவியது.
வயலின் என்பதும் அழகிய இசைக்கருவி. இளையராஜா பாட்டை கேட்டவர்களுக்கு தெரிந்திருக்கும் இந்த இசைக்கருவியின் அற்புதம் எப்படி என... இந்நிலையில் உலகிலேயே அதிகமான விலைக்கு விற்பனையான வயலின் இசைக்கருவி எது தெரியுமா.. லேடி ப்ளூன்ட் ஸ்ட்ராடிவேரியஸ் என்பவர் 1721 ஆம் ஆண்டு உருவாக்கிய வயலின் கருவிதான் அதிக விலைக்கு போனது. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தின் போது இந்த வயலின் இசைக்கருவி சுமார் 121 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது. 2011 இல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி மற்றும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக இந்த ஆன் லைன் மூலம் இந்த ஏலம் நடத்தப்பட்டது. இசைக் கருவிகளில் அதிக விலைக்கு விற்ற சாதனையை இது படைத்துள்ளது.
உடலில் ஏற்படும் எலும்பு தேய்மானத்தை தடுக்க பால் பருகி வருவதன் மூலம் கால்சியம் சத்தை தக்கவைத்து அதை தடுக்கலாம். சோயா பாலில் பாலை விட அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 100 மி.லி. சோயா பாலில் 120 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது. பாதாமிலும் 80 சதவீதம் அளவுக்கு கால்சியம் நிறைந்துள்ளது. தினமும் 5-6 பாதாம்களை சாப்பிட்டு வருவது கால்சியம் சத்து அதிகரிக்க உதவும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


