முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய வசதி

முதன்முதலாக ப்ரீமியம் டெலிவிஷனில் கால் பதிக்கும் ஃபேஸ்புக், 24 சொந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளது. அதிக நேரம் கொண்ட நிகழ்ச்சி மற்றும் குறைந்த நிமிடங்கள் கொண்ட நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்பட உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டவுடன், ஃபேஸ்புக் ஆப்-பின் வீடியோ டேப்பிலும் காணக்கிடைக்கும். ஃபேஸ்புக் டிவி, ஜூன் மாதம் முதல் செயல்படும்.

நெருங்கும் ஆபத்து ...

தற்போது, வேலைப்பளு, மன உளைச்சல், தூக்கமின்மை, தவறான பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால் இரவு 11 மணிக்கு மேல் தூங்கினால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் நம்மை தாக்கும் அபாயம் உள்ளது. முதலில் செரிமானக் கோளாறு, வாயு தொல்லை என தொடங்கி 35 வயதிற்கு பிறகு புற்றுநோயாகவும் மாற வாய்ப்புள்ளதாம்.

இயற்கை வழி

முகப்பரு வருவதை விட வந்தபின் அது விட்டுச் செல்லும் தழும்புகள் முக அழகையே பாழ்படுத்தும். தழும்புகள் வேறு எளிதில் போகாது. முகப்பரு என்றில்லாமல் சருமத்தில் காயங்களால் உண்டாகும் தழும்பை போக்குவது சற்று கடினம். அவ்வாறு உருவாகும் தழும்புகள் மறைய, காய்ந்த அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரியாக்கி தூள் செய்துகொள்ளுங்கள். இதனுடன் தேங்காய் எண்ணைய் கலந்து, இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் தழும்புகள் படிப்படியாக மறையும்.

அசாமில் கொண்டாடப்படும் அறுவடை திருவிழா எது தெரியுமா?

தமிழர்களாகிய நமக்கு தை பொங்கல் தான் அறுவடை திருவிழாவாகும்.அசாமில் ‘மாக் பிஹூ’ என்ற பெயரில் அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது. தெற்குப் பகுதியில் இருந்து வடக்குப் பகுதிக்கு சூரியனின் இடப்பெயர்ச்சியை மையமாக வைத்து கொண்டாடப்படுதம் இந்த பண்டிகையை, வட மற்றும் மத்திய இந்தியாவில் மகர சங்ராந்தி என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இந்திக் காலண்டரின் மாக் மாதத்தின் முதல்நாளில் வருவதாலும் இதை மகர சங்ராந்தி என்றழைக்கிறார்கள். மேலும், இந்தியாவில் உள்ள விவசாயிகள், அறுவடை திருநாளாக கொண்டாடுகின்றனர், ஆனால் மாநிலங்களுக்கேற்ப இந்த அறுவடை திருநாள் கொண்டாட்டங்கள் மாறுபடும். அதன் ஓர் அங்கமாக மூங்கில், வைக்கோல் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு கலைநயமிக்க தற்காலிக குடிசைகள் அமைப்பது அசாம் மக்களின் தொன்று தொட்ட பழக்கம். ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதத்தில் இந்த விழா கொண்டாடப்படும்.

சூரியனுக்கு விழா

தமிழகத்தில் தஞ்சை, ஒடிசாவில் கோனார்க் பகுதியில் சூரிய கோவில் உள்ளது. இதுதவிர, கேரளா, ஜம்மு காஷ்மீர், குவாலியர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரிலும் இந்த கோவில்கள் அமைந்துள்ளது. சூரிய தேவன் இடம் பெயர்வதை குறிக்கும்  விழாவாக மகர சங்கராந்தி வட மாநிலங்களில் பொங்கல் நேரத்தில் கொண்டாடப்படுகிறது.

பிராணாயாமம்

தூக்கமின்மையால் உங்கள் நரம்பு மண்டலம் கிளர்ச்சியடைந்து உங்களது மன அழுத்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும் அபாயமும் உண்டாகிறது. நீங்கள் இரவு நேரத்தில் அமைதியான நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தை பெற சந்திர பத்னா பிராணயாமம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். மிகவும் எளிய பயிற்சியான இது, உடலையும் மனதையும் அமைதியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago