Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மழை வாசனையை நாம் விரும்ப காரணம் என்ன?

பொதுவாக தண்ணீருக்கு எந்த சுவையும் மணமும் கிடையாது. ஆனால் மழை பெய்யும் போது மட்டும் ஏன் ஓர் அற்புதமான வாசனை ஏற்படுகிறது. அந்த மழை வாசனை நம்மை ஈர்ப்பது ஏன். ஏனெனில் மழை பெய்யும் போது மண்ணில் உண்டாகும் ஈரத்தால் ஜியோஸ்மின் என்கிற ஒரு வகை பாக்டீரியா உருவாகிறது. அதுதான் மழைக்கு வாசனையை கொடுக்கிறது. இந்த மழை வாசனைக்கு பெட்ரிசோர் என்ற பெயரும் உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?

தானியங்கி கார்

கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்டு, செயற்கை நுண்ணறிவு மூலம், தானாகவே இயங்கும் ரோபோ கார் அறிமுகமாகியுள்ளது. சென்சார் மூலம் இந்த காரின் சக்கரங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. செயற்கைக் கோள் மூலம் கார் செல்லும் பாதைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மணிக்கு 320 கி.மீ வேகத்துக்கு செல்லுமாம்.

உலகை ஆளும்

செல்போன் போன்ற கையடக்கக் கருவிகளில், தொடுதிரையைத் தாங்கி வெளியான முதல் செல்போன் என்ற பெருமையுடன் ஸ்டீவ் ஜாப்ஸால் ஆப்பிள் ஐபோன் 2007ம் ஆண்டு அறிமுகமானது. ஒரே ஒரு ஸ்மார்ட்போன் மூலம் உலகையே மாற்ற முடியும் என்று பத்தே ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனம் நிரூபித்துள்ளது

இதுதான் காரணம்

மங்கோலியத் தலைவர் செங்கிஸ்கான் பேரன் குப்ளேகான். அவர் கி.பி. 1286-இல் சீனப் பேரரசனானார். சீனர்களை தான் அடிமைப்படுத்தியதன் அடையாளமாக, அவர்கள் தங்கள் தலைமுடியைப் பின்னலிடும்படி ஆணையிட்டார். அதனால்தான் சீனர்கள் ஆண்களாக இருந்தாலும் பின்னல் போட்டுக் கொள்ள ஆரம்பித்தனர்.

முத்தம் தவிர்க்கவும்...

குழந்தைகளை முத்தமிடக்கூடாது என்று கூறக்கேட்டிருப்போம். அதற்கு காரணம் உள்ளது. குழந்தைகளை இதழ்களில் முத்தமிடும் போது, 85 சதவீதம் பாக்டீரியாக்கள் இதழ் மற்றும் வாய் மூலமாக பரவி குழந்தையின் நலனை பாதிக்கிறது. பிறந்த 3 மாதங்களில் குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் தவிர்ப்பது நல்லது.

நவபாஷாண சிலைகள்

தமிழ்நாட்டில் பல கடவுள் சிலைகள் நவபாஷாணத்தால் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானவை 18 சித்தர்களுள் ஒருவராகிய போகர். போகர் கற்று வைத்திருந்த ஆயகலைகள் 64ஐயும் அவர் வேறு எவருக்காவது கற்று தந்தாரா என்றால் இல்லை என்றே தெரிகிறது. அதுகுறித்து அவர் ஓலைச் சுவடிகளில் எழுதியுள்ளதாகவும். அதை படித்து சாகாவரம் தரும் மூலிகைகளைக் கூட கண்டுபிடிக்கலாம் என்று பல முனிவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி சக்தி வாய்ந்த போகர், 64 கலைகளையும் கற்றுகொண்டு, பல்வேறு வகையான மருந்துகளையும், சகாவாரம் தரும் மூலிகைகளையும் கண்டறிந்துள்ளார். அவருக்கு கூடுவிட்டு கூடு பாயும் கலை தெரிந்திருந்ததாகவும் பல்வேறு முனிவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago