முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

செயற்கை நாக்கு

ஜெர்மனியில் உள்ள ஹெய்டெல் பெர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கை நாக்கை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் போலி விஸ்கியை கண்டுபிடிக்க முடியும். செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட இந்த நாக்கின் மூலம் விஸ்கியின் தரம், பிராண்டு மற்றும் அது தயாரிக்கப்பட்ட நாடு மற்றும் தயாரிக்கப்பட்ட காலம் போன்றவற்றைம் அறிய முடியும்.

எச்சரிக்கை

சிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று வந்தால். சிறுநீரில் புரதம் கலந்து வெளியாகிறதன் அறிகுறியாகும். காய்ச்சல், நீர்வறட்சி, உடல்நல குறைபாடு போன்றவை உண்டாகும் போது சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறி வரும். மஞ்சள் காமாலை அதிகரித்து இருப்பதை சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளிப்பட்டு காட்டிக் கொடுக்கும்.

புதிய கடிகாரம்

ஒரு நொடியை பில்லியனால் வகுத்தால் என்ன எண் கிடைக்குமோ அந்த நேரத்தைக் கூட அளவிடும் கடிகாரத்தை நாசா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது லேசர் பீம்களோடு இணைக்கப்பட்டு விண்கலத்துக்கும், கோள்களின் தரை பரப்புக்கும் உள்ள தொலைவைக் கண்டறிய உதவும் என்றும், ஒளியின் வேகத்தில் நகரும் பொருளின் தூரத்தை அறிய உதவும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

எலிகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு

இந்தியாவில் 90 வகை எலிகளும் தமிழகத்தில் 15 வகை எலிகளும் உள்ளன. எனினும் வரப்பெலி எனப்படும் கறம்பை எலி, வெள்ளெலி, புல் எலி மற்றும் சுண்டெலி ஆகியவை பயிர்களை அழிக்கும் முக்கிய இனங்கள். ஆண்டுக்கு 70 முதல் 80 லட்சம் டன் உணவுப் பொருட்களை சேதப்படுத்துவதன் மூலம் ரூ.800 கோடி அளவிற்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.  ஒரு மனிதனுக்குத் தேவையான ஒரு நாள் உணவு தானியத்தை மூன்று ஜோடி எலிகள் ஒரு நாளில் தின்று அழிக்கும் திறனுடையவை. வயல் எலிகள் ஒவ்வொன்றும் தங்கள் வளைகளில் உள்ள உணவு அறைகளில் 3 முதல் 5 கிலோ நெல்மணிகள், ஒரு கிலோ உளுந்து மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றை சேமித்து வைப்பது கண்டறியப்பட்டுள்ளது.  ஒரு ஜோடி எலிகள் ஆண்டுக்கு 2 முதல் 5 தடவையாக ஒவ்வொரு முறையும் 6 – 8 குட்டிகள் ஈனுகின்றன. பிறந்த 45 நாளில் இவையும் இனப்பெருக்கத்திற்குத் தயாராகிவிடும். இவற்றின் சராசரி வயது 2 ஆண்டுகள். இதனால் ஒரு ஜோடி எலிகள் ஒரே ஆண்டில் 500 எலிகளாக பெருகுகின்றன. செப்டம்பர், அக்டோபர், ஜனவரி முதல் மார்ச் வரை இனப்பெருக்கம் செய்கின்றன. நுட்பமான அறிவும், தந்திரமும், புத்திசாலித்தனமும் நிறைந்த இவற்றுக்கு வாசனை, ருசி, கேட்டல் மற்றும் தொடுதல் திறன் அதிகம். வயல் எலிகள் நீரில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தொடர்ச்சியாக நீந்தும். 20 முதல் 25 மீட்டர் நீளமும், ஒன்றிற்கு மேற்பட்ட புறவழிகளும் கொண்ட வளைகளைத் தோண்டுகின்றன. உணவின்றி 7 நாட்களும், நீரின்றி 2 நாட்களும் சமாளிக்கும்.

ஏப்.1 ஏன் முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது

ஏப்ரல் 1-ம் தேதி உலகம் முழுவதும் உள்ளவர்கள் முட்டாள்கள் தினமாக கொண்டாடுகின்றனர். அப்போது சின்ன ஏமாற்றுகள், நகைச்சுவைகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வழக்கம் எப்போதிருந்து தொடங்கியது. 1381-ல் இங்கிலாந்து அரசர் 2-வது ரிச்சர்டுக்கும், ராணி பொகிமியாவின் ஆனிக்கும் திருமண நிச்சயதார்த்தம் மார்ச் 32-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதை கேள்விபட்டதும் மக்கள் அதை கொண்டாட தயாராகினர். அப்போதுதான் இடையிலேயே மார்ச்சில் 32 தேதி இல்லையே என தெரிய வந்தது. உடனே கொண்டாடத்தை நிறுத்தினர். அதுவே பின்னர் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்பட்டது. மற்றொரு காரணம் 1582-ல் பிரான்சில் பயன்பாட்டில் இருந்த பழைய காலண்டரை நீக்கி விட்டு சார்லஸ் போப் புதிய ரோமானிய காலண்டரை அறிமுகப்படுத்தினார். இருந்த போதிலும் பலரும் பழைய காலண்டரையே பயன்படுத்தினர். இதை குறிப்பிடும் வகையிலும் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்பட்டது. இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆட்சியின் போது, 19-ம் நூற்றாண்டிலிருந்து இது தொடங்கியது.

நிலா பூமியை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி செல்கிறதாம்

பூமி சூரியனை சுற்றுவது போல, நிலா பூமியை சுற்றி வருகிறது என்பது அனைவருக்கும் அறிந்த விசயம்தான். ஆனால் பலருக்கும் தெரியாத விசயம் என்னவென்றால், நிலா கொஞ்சம் கொஞ்சமாக பூமியை விட்டு விலகி சென்று கொண்டிருக்கிறதாம்... இதனால் பூமிக்கும் நிலவுக்குமான தூரம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த விலகல் ஒவ்வொரு ஆண்டும் 1.48 அங்குலம் அளவுக்கு உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது நமது நகங்கள் வளரும் வேகத்துக்கு இணையாக. அதே போல தொடக்கத்தில், அதாவது நிலா தோன்றிய போது பூமிக்கு மிக அருகில் இருந்துச்சாம்.. அதாவது அப்போது வெறும் 14 ஆயிரம் மைல் தொலைவில். தற்போது பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தொலைவு 2 லட்சத்து 50 ஆயிரம் மைல். இன்னும் சில லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மார்கள் நிலவை காட்டி சோறூட்ட முடியாது, காதலர்கள் நிலவை உதாரணம் காட்டி பாட முடியாது என்றால் ஆச்சரியம் தானே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago