முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மாரடைப்பு பயம்

திடீரென நம் இதயம் வேகமாக துடித்து, சுயநினைவை இழக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டால், உடனே நாம் தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும், ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும் இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரையீரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது. இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும். இதனால் ரத்தஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும். பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்.

உலகின் மிகப்பெரிய குடும்பம் - உறுப்பினர்கள் எண்ணிக்கை 163

உலகின் மிகப் பெரிய குடும்பம் எங்குள்ளது தெரியுமா..இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் உள்ள பக்த்வாங் என்ற ஊரில் இருக்கும் சியோனா சனா என்பவரின் குடும்பம் தான் உலகிலேயே மிகப்பெரிய குடும்பமாகும். சியோனா சானாவுக்கு மொத்தம் 39 மனைவிகள், 94 குழந்தைகள் மற்றும் 33 பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற வியக்கத்தக்க உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். இவர்கள் அனைவரும் 100 அறைகள் கொண்ட ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். சியோனா சனா கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

விரைவில் வருகிறது பறக்கும் பைக் - இனி அபார்ட்மெண்டில் பார்க்கிங் சண்டை வராது

நகரங்களில் வசிப்பவர்களின் மிகப் பெரிய பிரச்னை எது என்று கேட்டால் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதுதான். இதில் எத்தனை படித்தவர்களாக இருந்தாலும் பார்க்கிங் பிரச்னையை தீர்த்து வைக்க தனி நாட்டாண்மை தான் எப்போதும் வர வேண்டியிருக்கும். போதாக்குறைக்கு வண்டிகளை மாற்றி மாற்றி நிறுத்தி எடுத்து வைப்பதில் கேட் காவலர்களும் களைத்து போய் விடுவர். அபார்ட்மென்ட் கொஞ்சம் பெருசாக இருந்தால் போதும், வண்டியை எங்கே நிறுத்துவது, எப்படி நிறுத்துவது என்பதில் ஒரு இசை நாற்காலி போல பெரும் போட்டியே நடக்கும். இனி அதற்கெல்லாம் வேலையே இருக்காது. நீங்கள் எந்த தளத்தில் இருந்தாலும் அந்த தளத்துக்கு பறக்கும் பைக்கிலோ, காரிலோ போய் இறங்கி, அங்கேயே உங்கள் வீட்டின் பால்கனியில் பறக்கும் பைக் அல்லது காரை நிறுத்திக் கொள்ளலாம். இதனால் நகர நெரிசலில் சிக்கி அவதிப்படவோ, ஹார்ன் ஒலிகளால் தலை வீங்கி போகவோ வேண்டியதில்லை. ஒரு டிஜிட்டல் யுகம் நம் கண்முன்னே மாய உலகமாக மாறிக் கொண்டிருக்கிறது. நமது பேரப் பிள்ளைகள் சாலைகளில் வாகனங்கள் ஓடின என கேட்டால் சிரிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

புதிய திட்டம்

விண்வெளிக்கு செல்லும் மனிதர்கள் தங்களுடைய சிறுநீரைக் கொண்டே பிளாஸ்டிக் தயாரித்துக் கொள்ளும் புதிய வகை தொழில்நுட்பத்தை நாசா கண்டுபிடித்துள்ளது. ஈஸ்ட் மற்றும் கார்பண்டை ஒக்சைட் மூலம் இந்த பிளாஸ்டிக் தயாரிக்கப்படவுள்ளது. மேலும் இதை மூலப் பொருளாக பயன்படுத்தி, 3டி பிரிண்டரில் புதிய பிளாஸ்டிக் பொருட்களை விண்வெளியில் தயாரிக்கலாம். இதனால் உருவாக்கப்படும் பொருட்களை கொண்டு நீண்ட தூரம் விண்வெளி பயணம் மேற்கொள்ளலாமாம்.

நீர்மூழ்கி கப்பல்களுக்கு கருப்பு வர்ணம் பூசப்படுவது ஏன்?

நீர்மூழ்கி கப்பல்கள் பெரும்பாலும் கருப்பு (Black) நிறத்தில் நிறத்தில்தான் இருக்கும். நீர்மூழ்கி கப்பல்களின் உடற்பகுதி சாம்பல் நிறத்திலும், அடுக்குகள் கருப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்டன. ஆனால் 1930களில் ஒரு பிரச்னை தெரியவந்தது. இந்த வகையில் வர்ணம் பூசப்பட்ட நீர்மூழ்கி கப்பல்கள், நீருக்கு அடியில் ஆழமாக செல்லாவிட்டால், மேலே பறக்கும் விமானங்கள் மூலமாக எளிதில் கண்டுபிடிக்கப்படும் என்பதுதான். மீண்டும் பல்வேறு சோதனைகளை அமெரிக்கா நடத்தியது. இறுதியில் அடர் நீல நிறம்தான் நீர்மூழ்கி கப்பல்களுக்கு பாதுகாப்பானது என முடிவு செய்யப்பட்டது.  ஆனால் இந்த அடர் நீல நிறம் எளிதில் மங்க கூடியதாக இருந்தது. இதன் காரணமாக நீரில் மூழ்கி இருக்கும்போது, நீர்மூழ்கி கப்பல்களை எதிரிகள் எளிதில் கண்டறியும் சூழல் உருவானது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளை தொடர்ந்து இறுதியாக தான் நீர்மூழ்கி கப்பல்களுக்கு ஏற்ற நிறமாக கருப்பு முடிவு செய்யப்பட்டது. இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. முதலாவதாக கருப்பு நிறத்தின் உருமறைப்பு திறன். எதிரிகளின் கண்களுக்கு கருப்பு நிறம் எளிதில் சிக்காது. கருப்பு நிறம் நீடித்து உழைக்கும் என்பது இரண்டாவது காரணம். 

பிபிசி தமிழோசை

76 ஆண்டுகளாக ஒலிபரப்பாகி வந்த பிபிசி தமிழோசையின் சிற்றலை வானொலி சேவையை நிறுத்துவதாக பிபிசி அறிவித்துள்ளது. தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கத்தால் வானொலி சேவைகள் ஆதரவை இழந்து வருவதே இந்த முடிவுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago