அச்சிட்டதை அழித்து மீண்டும் மீண்டும் 80 முறை வரை அச்சிடத் தகுந்த புதிய காகிதத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நானோ பார்டிகல்ஸ் என்று அழைக்கப்படும் மிகச் சிறிய துகள்கள் மூலம் இந்தக் காகிதம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த துகள்களை அச்சிடும் மையில் கலந்து அச்சிட வேண்டும். அச்சிடப்பட்டு 5 நாட்களில் எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக காகிதத்திலிருந்து மறையத் துவங்கும். காற்றிலுள்ள ஆக்ஸிஜன் துகள்கள் மையிலுள்ள எலக்ட்ரான்களை எடுத்துக்கொள்ளும், இதனால் எழுத்துக்கள் காகிதத்திலிருந்து மறையும். மேலும் காகிதத்தை சூடாக்கும் போது, இந்த செயல்முறையை சில நிமிடங்களில் வேகப்படுத்துவதன் மூலம் காகிதத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
தற்கொலை எண்ணம் கொண்டவர்களின் மனதை மாற்ற, பேஸ்புக், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அப்டேஷன் மிக விரைவில் வெளியாகுகிறது. பேஸ்புக்கில் உள்ள தற்கொலை தடுப்பு டூல்களை பேஸ்புக் போஸ்ட், லைவ்-ஸ்ட்ரீமிங் அம்சம், பேஸ்புக் லைவ் மற்றும் மெசஞ்சர் சேவைகளில் புகுத்த இருப்பதாக அது தெரிவித்துள்ளது.
றவைகளின் இடப்பெயர்ச்சி மனிதர்களுக்கு வியப்பையே அளித்து வந்திருக்கிறது.பல ஆயிரம் ஆண்டுகளிலிருந்து இன்றுவரை, இதற்கான துல்லியமான, மிகச் சரியான விடை கிடைக்கவில்லை. ஓர் ஆண்டில் 22,000 மைல்கள் வரை பறக்கக் கூடிய வடதுருவப் பகுதியில் உள்ள டெர்ன் பறவைகள் (arctic terns) மிக அதிக தூரம் பயணம் செய்யும் பறவை இனமாகும். இப்பறவைகள் வட துருவத்திலிருந்து தென் துருவப் பகுதிக்கு (the Antarctic region) இருபது வாரங்களில் நாளொன்றுக்கு 150 மைல் வேகத்தில் பறந்து செல்லக்கூடியவை ஆகும்.பெரும்பாலான தரை வாழ் பறவைகள் தமது இடப்பெயர்வின் போது குறைந்த அளவே பயணம் செய்கின்றன. ஆனால் அமெரிக்க கோல்டன் ப்ளோவர் (American golden plover) என்னும் பறவை இனம், தங்கு தடையின்றி நீண்ட தூரம் பயணம் செய்யும்; இப்பறவை சுமார் 2400 மைல்கள் தடையின்றி பயணம் செய்யக்கூடியதாகும்.
உணவு விற்பனை செயலியான எல்ப் ஈட் 24 நிறுவனமும் மார்பிள் ரோபோ நிறுவனமும் இணைந்து தானியங்கி ரோபோக்களை வடிவமைத்துள்ளனர். சாப்பாடு ஆர்டர் செய்தால் இந்த ரோபோக்கள் வீட்டுக் கதவைத் தட்டி சேர்த்துவிடுமாம். சான் பிரான்ஸிஸ்கோவின் சில பகுதி உணவுவிடுதிகள் உணவை சப்ளை செய்ய இந்த ரோபோக்களை பயன்படுத்துகின்றனர். இவை, சென்சார் கேமரா மற்றும் அல்ட்ராசோனிக் தொழில்நுட்ப உதவியுடன் சாலைகளில் பயணிக்கும். வழியில் எதிர்படும் மனிதர்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்தையும் இவற்றால் உணர முடியுமாம். இந்த தானியங்கி ரோபோக்களின் செயற்பாடுகளை தொடர்ந்து ஹோட்டலின் உரிமையாளர்கள் கண்காணித்து கொண்டே இருப்பார்களாம். இதனால் உணவை எடுத்து செல்ல எந்தச் சிக்கலும் இருக்காதாம்.
நம்மில் பெரும்பாலோனோர் இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் ஆந்திராவைச் சேர்்ந்த சுதந்திர போராட்ட தியாகி பிங்கலி வெங்கய்யா என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவர் தேசிய கொடியின் அடிப்படையை உருவாக்கி காந்தியிடம் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக தேசிய கொடியை வடிவமைத்தவர்கள் பக்ரூதீன்தியாப்ஜியும் அவரது மனைவி சுரேயாவும் தான். இதற்கான பொறுப்பை நேரு, பக்ரூதீனிடம் அளித்தார். இந்த குழுவில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர். மூவர்ண கொடியையும் அதன் மத்தியில் அசோக சக்கரத்தையும் அவர்கள்தான் வடிவமைத்தனர். தேசிய கொடிக்கு ஏற்ற வண்ணத்தை நெய்து கொடுத்தவர் சுரேயா. 1947 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி இவர்கள் நேருவிடம் அளித்த கொடி அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
உலகின் பேட்டரி இல்லா முதல் செல்போனை அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். சுற்றுப்புறத்தில் உள்ள ரேடியோ சிக்னல்கள் மற்றும் ஒளி ஆகியவற்றில் இருந்து ஆற்றலைப் பெற்று இயங்கும் வகையிலான புதிய செல்போன் ஒன்றை வடிவமைத்து ஆய்வாளர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். அந்த செல்போனைப் பயன்படுத்தி ஸ்கைப் மூலம் வீடியோ கால் பேசி நிரூபித்துள்ளனர். ரேடியோ அலைகளில் இருந்து ஆற்றலைப் பெறும் வகையில் செல்போன்களில் சிறிய அளவிலான ஆண்டெனாக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த அலைகளைப் பயன்படுத்தி குரல் பதிவுகளை பரிமாறிக் கொள்ளும் வகையில் செல்போனின் செயல்பாடு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-12-2025.
05 Dec 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-12-2025.
05 Dec 2025 -
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
05 Dec 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
-
குடியரசுத் தலைவர் மாளிகையில் ரஷ்ய அதிபருக்கு ராணுவ அணிவகுப்புடன் வரவேற்பு
05 Dec 2025டெல்லி, புதினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது விரைவில் விசாரணை : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அறிவிப்பு
05 Dec 2025புதுடெல்லி : திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
-
அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் காங்கோ, ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து
05 Dec 2025வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்னிலையில் காங்கோ, ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
-
உலகுக்கு பன்முக பாதையை காட்டியவர்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் ரஷ்ய அதிபர் புடின் புகழாரம்
05 Dec 2025புதுடெல்லி : நமது பூமியில், அகிம்சை, உண்மை ஆகிய இரண்டின் மூலம் காந்தி விலை மதிப்பிடமுடியாத பங்களிப்பை செய்திருக்கிறார்.
-
தீபத்திருவிழா: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நெய் தீபங்கள் ஏற்றி வழிபாடு
05 Dec 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபத்திருவிழாவை முன்னிட்டு நெய் தீபங்கள் ஏற்றி வழிபாடு நடந்தது.
-
சுமார் 400 இண்டிகோ விமானங்களின் சேவை தொடர்ந்து 4-வது நாளாக ரத்து: பயணிகள் கடும் அவதி
05 Dec 2025மும்பை, இண்டிகோ விமானம் 4-வது நாளாக ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
-
த.வெ.க.வில் இணைந்தது ஏன்...? - நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேட்டி
05 Dec 2025சென்னை : விஜய் கட்சியில் இணைந்தது குறித்து நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்துள்ளார்.
-
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி மண்டல கூட்டம்: துணை முதல்வர் உதயநிதி திடீர் ஆய்வு
05 Dec 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி மண்டல கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
-
ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கான இலவச இ-விசா வழங்கும் திட்டம் : புடின் முன்னிலையில் மோடி அறிவிப்பு
05 Dec 2025புதுடெல்லி : ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு, 30 நாட்கள் இலவச இ-விசா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என ரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில், பிரதமர் மோடி அறிவித்தார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3.79 கோடி
05 Dec 2025திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 79 லட்சம் கிடைத்தது.
-
புதினுக்கு பகவத் கீதையை பரிசளித்தார் பிரதமர் மோடி
05 Dec 2025டெல்லி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பிரதமர் மோடி பகவத் கீதையை பரிசாக அளித்தார்.
-
நியூசி., எதிரான முதல் டெஸ்ட்: மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றிக்கு 319 ரன்கள் தேவை
05 Dec 2025கிறிஸ்ட்சர்ச் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வெற்றி பெறுவதற்கு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இன்னும் 319 ரன்கள் தேவைப்படுகின்றன.
-
ஷமி குறித்து ஹர்பஜன் கேள்வி
05 Dec 2025முகமது ஷமி எங்கே? அவர் ஏன் விளையாடவில்லை? என்று இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
வீடு, கார் கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்கலாம் - ரிசர்வ் வங்கி தகவல்
05 Dec 2025டெல்லி : வீடு, கார் கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்கலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: த.வெ.க. தலைவர் விஜய் உடன் காங்கிரஸ் நிர்வாகி திடீர சந்திப்பு
05 Dec 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி திடீரென சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம்: வழக்கு விசாரணையை டிச. 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் மதுரை கிளை
05 Dec 2025மதுரை : மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய மதுரை கிளை உத்தரவு.
-
பெங்களூருவில் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை
05 Dec 2025பெங்களூரு : பெங்களூருவில் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
-
33 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தி.மலையில் மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்கா : துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
05 Dec 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் 33 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சுற்று சூழல் சுற்றுலா பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
பிரதமர் மோடி- அதிபர் புடின் முன்னிலையில் சுகாதாரம், பாதுகாப்பு உள்பட பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
05 Dec 2025புதுடெல்லி : டெல்லியில் ரஷ்ய அதிபர் புடின் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
திருப்பரங்குன்றம் சம்பவம்: விஜய் பேசாமல் இருப்பது நல்லது: நாஞ்சில் சம்பத்
05 Dec 2025சென்னை : திருப்பரங்குன்றம் சம்பவம் குறித்து விஜய் பேசாமல் இருப்பது நல்லது என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.
-
கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 சரிவு
05 Dec 2025சென்னை : சென்னையில் நேற்று (டிச.,05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்திற்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.20 குறைந்து
-
சென்னையில் இன்று வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும்: கல்வி அலுவலர்
05 Dec 2025சென்னை : சென்னையில் இன்று முதல் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் கூறினார்.


