முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஸ்மார்ட் போன் தண்ணீரில் விழுந்து விட்டால்..

உங்கள் ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் பதட்டப்படாமல் உடனே ஸ்மார்ட்போனை தண்ணீரிலிருந்து எடுக்க வேண்டும். தண்ணீரிலிருந்து எடுத்த ஸ்மார்ட்போனை ஆன் செய்யாமல், முதலில் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். அதற்கு மேல் உங்கள் ஸ்மார்ட்போன் சுவிட்ச் ஆப்-ஆகவில்லை என்றால் பவர் பட்டனை அழுத்திப் பிடித்தால் போதும் உடனே சுவிட்ச் ஆப்-ஆகிவிடும்.குறிப்பிட்ட நேரம் வரை உங்கள் ஸ்மார்ட்போன் ஆன் செய்யாமல் இருப்பது நல்லது. ஸ்மார்ட்போன் சுவிட்ச் ஆப் நிலையில் இருக்கும் போது சார்ஜ் செய்தல் கூடாது, ஒருவேலை நீங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்தால் வெடிக்கும் நிலைக்கு தள்ளப்படும்.சிலர் ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை எடுக்க மைக்ரோவேவ் ஓவன் சாதனம், அல்லது நெருப்பு போன்றவற்றை பயன்படுத்துவார்கள், அவ்வாறு செய்யக்கூடாது இதுவும் வெடிக்கும் நிலைக்கு தள்ளப்படும். அடுத்து போனில் இருக்கும் எஸ்டி கார்டு, பேட்டரி, சிம் போன்றவற்றை எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை எடுக்க முதலில் சூரியஒளியைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது, சூரியஒளி வெப்பத்தால் உடனே ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை உலர்த்த முடியும். எப்படியிருந்தாலும் உங்கள் செல்போனை ஆன் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் உடனடியாக அதற்கான சர்வீஸ் செண்டரில் கொடுத்துவிடுவது சிறந்தது.

சாணத்திலிருந்து மின்சாரம் தயாரித்து 50 தெருவிளக்குகளை எரிய செய்யும் கிராமம்

நவீன அறிவியலில் எதுவும் சாத்தியம் என்பதற்கு இந்த செய்திதான் சாட்சி. முன்பு மாற்று எரிபொருள் என்ற வகையில் சாண எரிவாயு முறைகள் பின்பற்றப்ப்டடன. பெரும்பாலும் தற்போது அதையாரும் தொடர்வதில்லை என்ற போதிலும் இன்றைக்கும் அது ஒரு சிறந்த மாற்று எரிபொருள்தான். அதே போல மாற்று எரிசக்தி என்ற முறையில் தற்போது அறிவியலில் புதிய முறையாக மாட்டுச் சாணம் உள்ளிட்ட கால்நடை கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை மேல்நாட்டு பண்ணைகளில் தொடங்கியுள்ளது. இந்தியாவில் சண்டிகர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் தொடங்கப்பட்ட போதிலும் இன்னும் பரவலாகவில்லை. இதற்கு முன்மாதிரியாக காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்துள்ள வரதராஜபுரம் ஊராட்சி திகழ்கிறது. இங்கு கால்நடை கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் அந்த கிராமத்தில் உள்ள 50 தெரு விளக்குகள் எரிய வைக்கப்படுகின்றன. இதன் மூலம் சுமார் 12 மணிநேரம் இந்த ஆற்றலை  பயன்படுத்தி விளக்குகள் எரிகின்றன. இதை இன்னும் திட்டமிட்டு விரிவாக்கினால் கிராமத்துக்கான மின் தேவையையே சமாளிக்கலாம் என்கின்றனர். 

கேஸ் அடுப்பால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தா? / விஞ்ஞானிகளின் ஆய்வில் புது தகவல்

கேஸ் அடுப்புகள் பழசானாலும் சரி, புதுசானாலும் சரி, அவை தொடர்ச்சியாக மீத்தேன் வாயுவை வெளியிடுகின்றன. இந்த தனிமம்தான் இயற்கை எரிவாயு தொகுப்பில் முக்கியமான ஒன்றாகும். தற்போது தோராயமாக நாடு முழுவதும் சுமார 40 மில்லியன் கேஸ் அடுப்புகள் நாள்தோறும் பயன்படுத்தப்படுகின்றன. அதே போல அரை மில்லியன் எரிவாயு வாகனங்கள் சாலையில் பறக்கின்றன. இப்போது நினைத்து பாருங்கள். அவற்றிலிருந்து வெளியாகும் மீத்தேன் அளவு குறித்து. புவிவெப்பமயமாதலுக்கு மிக முக்கிய காரணியாக இது உள்ளது என ஸ்டான்போர்ட் பல்கலை கழகம் மேற்கொண்டுள்ள புதிய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளதாக அதன் விஞ்ஞானிகள் குழு தலைவர் எரிக் லேபெல் (Eric Lebel). இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வெளியாகும் மீத்தேனில் முக்கால்வாசி பங்கு கேஸ் அடுப்பில் இருந்துதான் வெளியாகிறது என்பதை கண்டறிந்துள்ளோம் என எச்சரிக்கிறார்.

வந்திருச்சு புதுசு

எவர்லாஸ்ட் நோட்புக் மூலம் எழுதுவதை டிஜிட்டலாக சேமிக்க வசதி வந்தாச்சு. இந்த நோட்புக்கில், எழுதலாம், பதிவு செய்து வைக்கலாம். கூடுதலாக, ஸ்மார்ட் போன் உள்ளிட்டவற்றிலும் பகிரலாம். க்ளவுட் முறையில் கூகுள் ட்ரைவ் உள்ளிட்டவற்றில் கோப்புகளை சேமிக்கவும் வசதியுண்டு.

மழையின் பெயரில் கரன்சி வெளியிடும் நாடு எது தெரியுமா?

ஒவ்வொரு நாட்டு கரன்சிக்கும் அதாவது பணத்துக்கும் ஓர் பெயர் உண்டு. ஆனால் மழையின் பெயரையே கரன்சிக்கு சூட்டிய நாடு எது தெரியுமா... சகாரா பாலைவனத்தில் அமைந்துள்ள நாடான போஸ்துவானா தான் அது. அந்நாட்டு கரன்சியின் பெயர்  போஸ்துவானன் புலா. அவர்கள் மொழியில் புலா என்றால் மழை. அவர்களின் அடிப்படையான அனைத்து கரன்சிகளிலும் இந்த புலா அதாவது மழை என்ற பெயர் இடம் பெற்றிருக்கும் என்பது ஆச்சரியம் தானே..

புத்துணர்வு தரும்

பழங்களுடன் காய்கறிகளை குளிர்பானங்களாக தயாரித்து அருந்தும்போது உடல் புத்துணர்வுடன், கோடைகால நோய் ஏதும் தாக்காமல் பாதுகாக்க முடிகிறது. கேரட், தக்காளியை பொடியாக நறுக்கி இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுத்து அதில் கருப்பு உப்பு, சீரகத்தூள், புதினா இலைகளை கலக்கி பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியான பிறகு எடுத்து அருந்தினால்,  உடல் குளிர்ச்சியும், புத்துணர்வும் பெற இந்த ஜூஸ் உதவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago