முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்மீனியாவில் ஆட்சியை தக்க வைத்தார் பிரதமர் பாஷின்யன்

செவ்வாய்க்கிழமை, 22 ஜூன் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

யெரெவன் : ஆர்மீனியாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் நிகோல் பாஷின்யன் பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அங்கு கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கின்றன.

கடந்த 20-ம் தேதி அந்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் நிகோல் பாஷின்யனின் சிவில் ஒப்பந்த கட்சி 53.9 விழுக்காடு வாக்குகளை பெற்று வாகை சூடியதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

முன்னாள் ஆர்மீனியா அதிபர் ராபர் கோச்சர்யான் கூட்டணிக்கு 21 விழுக்காடு வாக்குகளே கிடைத்துள்ளன. ஆர்மீனியாவின் பிரதமர் நிகோல் பாஷின்யன் ஆட்சியை தக்கவைத்துள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். தலைநகர் யெரெவனில் நடைபெற்ற வெற்றி பேரணியில் பங்கேற்ற பிரதமர் நிகோல் பாஷின்யன், நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார். 

இதுகுறித்து அவர் பேசியதாவது,

மக்கள் எங்களுக்கு அமோக வெற்றியை வழங்கி இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி. ஆர்மீனியாவை நல்வழிப்படுத்த மக்கள் மீண்டும் எங்களுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கின்றனர். இது உங்களால் கிடைத்த வெற்றி. எங்கள் நல்லாட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என்று குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து