முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கு: 6 பேர் சரண்

திங்கட்கிழமை, 12 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,மார்ச்.13 - அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கு கொலையாளிகள் 6 பேர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண்டர். சென்னை தேனாம்பேட்டை தாமஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆலையப்பன். இவர் அ.தி.மு.க பிரமுகர் ஆவார். நேற்று முன்தினம் அதே பகுதியில் டீக்கடை அருகே தனது நண்பரோடு பேசிக் கொண்டிருந்த போது 6பேர் கொண்ட கும்பல் சிலர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே ஆலையப்பன் பலியானார்.

அவரை கொலை செய்த கொலையாளி யார்? என்பது குறித்து விசாரணை நடத்த கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டிருந்தார்.

கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன், மற்றொரு துணை கமிஷனர் அசோக்குமார், உதவி கமிஷனர் ராஜராஜன் ``உள்ளிட்டோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான 4 பேர் கொண்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

பாலாஜிக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதில், பாலாஜியின் நண்பர் பாபுவை ஆலையப்பன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால்  அவர் கொலை செய் திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், ஆலையப்பன் கொலை சம்பவம் தொடர்பாக 6 பேர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்