முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் கடத்தல்: விமான நிலையத்தில் 2 பேர் கைது

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2014      வர்த்தகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.4 - ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்த 2 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.  ஹாங்காங் நகரில் இருந்து நேற்று காலை தனியார் விமானம் ஒன்று சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

பயணிகள் அனைவரும் உடைமைகளை பரிசோதிக்கும் பகுதியை நோக்கி வந்தபோது இருவரின் நடத்தையில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்களை தனியான இடத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள் முழுமையாக சோதனையிட்டனர்.

அப்போது, அவர்கள் கொண்டு வந்த சூட்கேஸ்களின் பிடியில் 1/2 கிலோ எடையுள்ள தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. நிரஞ்சன் ஷா, சிவக்குமார் ஆகிய அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் இந்திய மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்