முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. நிர்வாகிகள் 4 பேர் மரணம்: முதல்வர் இரங்கல்

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.4 - அ.தி.மு.க. நிர்வாகிகள் 4 பேர் மரணமடைந்ததற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:_ 

அ.தி.மு.க. காஞ்சிபுரம் மத்திய மாவட்ட பொருளாளர் கே.பி.சீனிவாசன், திருவாரூர் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணைத்தலைவர் டி.அன்பழகன், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயல,ஆளர் எஸ்.இளங்கோவன், விழுப்புரம் வடக்கு மாவட்டம், விழுப்புரம் நகர இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்ஏ.நளினி ஆகியோர் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

சீனிவாசன், அன்பழகன், இளங்கோவன் மற்றும் நளினி ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்