Idhayam Matrimony

கேரளா: சரக்கு கப்பலில் தீ விபத்து-18 பேர் மீட்பு

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      இந்தியா
Karala 2025-06-09

Source: provided

திருவனந்தபுரம் : கேரளா அருகே உள்ள துறைமுகத்தில் சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்

சிங்கப்பூரை சேர்ந்த சரக்கு கப்பல் 'எம்.வி. வான் ஹய் 503', கடந்த 7-ந்தேதி இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் இருந்து கிளம்பியது. சுமார் 270 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பல் வரும் 10-ந்தேதி மும்பை துறைமுகத்தை சென்றடைய இருந்தது. இந்நிலையில், இந்த கப்பல் கேரள மாநிலத்தின் கண்ணூர் துறைமுகம் அருகே வந்தபோது, கப்பலில் எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து காலை 10.30 மணியளவில் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சுமார் 11 மணியளவில் இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐ.என்.எஸ். சூரத்' கப்பல் மீட்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கப்பலில் மொத்தம் 22 பேர் இருந்த நிலையில், 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து