முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தெரிந்தும் தெரியாதது

சராசரியாக ஓர் ஆண் சிங்கம் 250 கிலோ வரை இருக்குமாம். இதன் கர்ஜிக்கும் சப்தம், 8 கி.மீ வரை எதிரொலிக்கும். காட்டில் வாழும் ஆண் சிங்கம் பத்தில் இருந்து பதினான்கு ஆண்டுகள் வரை உயிர் வாழும். பெண் சிங்கங்களுக்கு பிடரிமயிர் அதிகமாக இருக்கும். பூனை குடும்பத்தில் புலிக்கு அடுத்து 2-வது பெரிய விலங்கு சிங்கம்.

பேனாவின் மூடியில் துளை இருப்பது ஏன் தெரியுமா?

செல்போனே கதி என்று கிடக்கும் இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு பேனா பெரிய அளவில் பழக்கத்தில் இருக்காது. பேனா மூடியை கடிக்கும் பழக்கம் உடைய நபர்களின் பாதுகாப்பு கருதி தான் இந்த துளை வைக்கப்படுகிறது. கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், உண்மைதான். பேனா மூடியை பழக்க தோஷத்தில் கடித்துக் கொண்டிருக்கும் நபர்கள், அதை ஏதேச்சையாக விழுங்கி விட்டால், அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. பேனா மூடியை விழுங்கி, அது மூச்சுக்குழாயை அடைத்துக் கொள்கிறது என்று வைத்துக் கொள்வோம், அந்த சமயத்திலும் கூட மூச்சுக்காற்று கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த துளை.

இதுதான் காரணம்

கடைகளில் நாம் சாப்பிட வாங்கும் சிக்கனுடன் கூடவே, 2 துண்டு எலுமிச்சை பழங்கள் வைக்க ஒரு முக்கிய காரணம் உள்ளது. சிக்கனில் அதிக அளவுக்கு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்தை நமது உடல் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், வைட்டமின் - சி தேவை. அதனால் தான், சிக்கன் சாப்பிடும் போது, வைட்டமின் - சி சத்து நிறைந்த எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட வைக்கிறார்கள்.

புதிய கண்டுபிடிப்பு

அமெரிக்காவில், எல்.ஜி நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் இந்த ஸ்பீக்கர்கள் ப்ளூடூத் தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் என்பதோடு காற்றில் எவ்வித உதவியும் இன்றி மிதக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்ஜி அறிமுகம் செய்ய இருக்கும் புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் எல்ஜி Pj9  என பெயரிடப்பட்டுள்ளது.

ஞாபக சக்தி அதிகரிக்க உடனடி வல்லாரை சட்னி

வல்லாரை கீரை நரம்புகளை வலுவாக்கி ஞாபக சக்தியைப் பெருக்கும். இதனை பாலில் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் கணைச்சூடு, மாந்தம் ஆகியவற்றுக்கு தீர்வு கிடைக்கும்.தேவையானவை: வல்லாரைக்கீரை - அரை கட்டு, தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, சுத்தம் செய்த இஞ்சி - சிறிய துண்டு, தேங்காய் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 5, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி வல்லாரைக்கீரை, நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். ஆறியபின் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதில் சேர்க்கவும். சுவையான வல்லாரை சட்னி தயார்!

பண்டைய காலத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி எது தெரியுமா?

இன்றைக்கு பெரும்பாலான பொருள்கள் கண்ணாடியால் செய்யப்படுகின்றன. ஆனால் பண்டைய காலத்தில் முகம் பார்ப்பதற்கு கண்ணாடியாக விளங்கியது எது தெரியுமா.. ஒரு அடர் வண்ணம் கொண்ட பாத்திரத்தில் மிகவும் அசையாத வகையில் நிரப்பப்பட்ட நீரிலேயே அக்கால மக்கள் தங்கள் முகங்களை பார்க்க பயன்படுத்தி வந்தனர். இதுவே முதன் முதலில் கண்ணாடியாக பயன்பட்ட பொருளாகும். இன்றைக்கும் பழைய கோயில்களில் நாம் கண்ணா.டி கிணறு என்பதை கேள்விப்பட்டிருப்போம் அல்லவா.. அதேப் போலத்தான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago