துரித உணவுகளை இரவில் அதிகமாகச் சாப்பிடுவதாலும், நேரம் கழித்து சாப்பிடுவதாலும், காலையில் பசி உணர்வு குறைவாகவே இருக்கும். துரித உணவுகளில் இருக்கும் மைதா, சீஸ், சமையல் சோடா போன்றவை செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதோடு, உடலுக்கு அதிக கலோரியைக் கொடுத்து, பசியை அடக்கி, நீண்ட நேரத்துக்குப் பசிஉணர்வே ஏற்படாமல் செய்யும்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
லிபியாவில் உள்ள சஹாரா பாலைவனத்தில் கிடைத்த ஆதாரங்களின் படி, மனிதர்கள் 10,000 வருடங்களுக்கு முன்பே காட்டு தானியங்கள் மற்றும் தாவரங்களை வைத்து பானைகளில் சமைத்துள்ளது தெரிய வந்தள்ளது. ஆரம்பத்தில் சைவமாகத்தான் இருந்த மனிதர்கள் , பின் விலங்குகளை வேட்டையாடிச் சாப்பிடும் அசைவத்திற்கு மாறியிருக்கின்றனர்.
வரும் 2018- ம் ஆண்டில் நடைபெற உள்ள விண்வெளி பயணத் திட்டத்தின் கீழு் பங்கேற்கவுள்ள நபர்களில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான ஷாவ்னா பாண்டியா உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இதன் மூலம் கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்சை தொடர்ந்து, விண்வெளி செல்லும் 3-வது இந்திய வம்சாவழி பெண் இவர்.
இணையத்தில் இயங்கும் நூலகங்களில் ஒரு வியக்கத்தக்க பயனுள்ள நூலகம் டிஜிட்டல் மீடியா நூலகம். அதன் லிங்க் http://www.wdl.org/en/. அது என்ன டிஜிட்டல் மீடியா நூலகம் என்று வியப்பாக இருக்கிறதா? ஆம், இதில் உலக சரித்திரத்தின் பதிவுகளை டிஜிட்டல் வடிவில் பதிந்து தருகிறது.உலகெங்கும் நம் நினைவிற்குச் சிக்காத நாட்களிலிருந்து கிடைத்த காட்சிகள், படங்கள், ஓசைகள், சரித்திர, கலாச்சாரக் குறிப்புகள் ஆகிய அனைத்தையும் டிஜிட்டல் மீடியாக்களாக இந்த ஆன்லைன் நூலகத்தில் பதிவுகளாகக் கிடைக்கின்றன.இந்த நூலகத்திற்கு உங்கள் கம்ப்யூட்டர் வழியே சென்று, உலகின் அனைத்து நாடுகள், கலாச்சாரம், சரித்திரம் குறித்தவற்றைத் தேடிப் பெற்று அறிந்து கொள்ளலாம். மொழிகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் உள்ள அணு கடிகாரத்தில், ஒரு வினாடி தற்போது கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த மாற்றம் செயற்கைக்கோள் ஊடுருவல், வானியல் மற்றும் தொலை தொடர்பியல் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது.
நாம் ஒரு விநோதமான யுகத்தில் வாழ்ந்து வருகிறோம். அதிகப்படியான அறிவியல் தாக்கத்தால் தொழில் நுட்ப மோகத்தில் மூழ்கியுள்ள நவீன யுகம். மறுபுறம் இயற்கை உயிரினங்கள் அழிந்து வரும் அவலம். இரண்டையும் சமநிலைப்படுத்த முடியாமல் மனித குலம் திணறி வருகிறது. உலகில் மிக வேகமாக ஓடக் கூடிய உயிரினம் சிறுத்தை இனத்தை சேர்ந்த சீட்டா. ஆனால் இந்தியாவை தாயகமாக கொண்ட சீட்டா கிட்டத்தட்ட அழிந்து விட்டது என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட நமது நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டு வாக்கில் சீட்டா முற்றிலும் வேட்டையாடி அழிக்கப்பட்டிருந்தது. சிவிங்கி என்று அழைக்கப்படும் ஆசிய சீட்டா, இந்தியாவில் 1952க்குப் பின் காணப்படவில்லை. சத்தீஸ்கரைச் சேர்ந்த இராமானுஜ பிரதாப் சிங் என்ற மன்னர் வேட்டைக்குப் பிரபலமானவர். அம்மன்னர், 1,150 புலிகளைக் கொன்றவர். இந்தியாவில் காணப்பட்ட கடைசி சிவிங்கியையும் இவர்தான் கொன்றார். அது கால்நடைகளை தாக்குவதாலும், விவசாயிகளின் அச்சத்தினாலும், முன்பு அரசர்களின் வேட்டையாடுதலுக்கான கவுரவத்தினாலும் இந்த சிறுத்தை இனம் அழிவை சந்தித்துள்ளது. தற்போது அதை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியாக ஆப்பிரிக்க காடுகளில் இருந்து கொண்டு இந்திய வனங்களில் விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சரி இப்போ இயந்திர சீட்டாவுக்கு வருவோம். அமெரிக்காவின் கேம்பிரிட்ஜில் இயங்கி வரும் எம்ஐடி யின் கணிணி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் தான் தற்போது இந்த இயந்திர சீட்டாவை உருவாக்கியுள்ளது. தற்போது வேகமாக வளர்ந்து வரும் ரோபோட்டிக்ஸ் துறையில் ஆர்வம் காட்டி வரும் இன்றைய உலகில் இந்த இயந்திர சீட்டா மிகப் பெரிய பாய்ச்சலாக இருக்கும் என அதன் வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர். இவை மனித குலத்தின் சாதனை என்பதா? இயற்கையை அழித்து விட்டு இயந்திரங்களை நோக்கி ஓடும் ஓட்டத்தை வேதனை என்பதா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
பொங்கல் பரிசு தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
04 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையையையொட்டி 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.3000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்ம
-
சர்வாதிகாரிகளை கையாள முடிந்தால்.. புதினை சிறைப்பிடிக்க உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சூசகம்..?
04 Jan 2026கீவ், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் பெயரைக் குறிப்பிடாமல், அவரைச் சிறைப்பிடிக்குமாறு உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-01-2026
04 Jan 2026 -
மருத்துவமனையில் இயக்குநர் பாரதிராஜா திடீரென அனுமதி: உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்
04 Jan 2026சென்னை, தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. இவர் இயக்குநர் இமயம் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.
-
ஜனநாயகன் படத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு நடவடிக்கையா? அமைச்சர் முத்துசாமி விளக்கம்
04 Jan 2026கோபி, ஜனநாயகன், பராசக்தி போன்ற படங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் தி.மு.க. அரசு ஈடுபட வேண்டிய தேவை இல்லை என்று முத்துசாமி கூறினார்.
-
தமிழ்நாட்டு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இதுவரை 7.40 லட்சம் பேர் விண்ணப்பம்
04 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 7.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்கா தாக்குதல்: வெனிசுலாவில் 40 பேர் உயிரிழப்பு
04 Jan 2026காரகாஸ், வெனிசுலாவில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உடபட 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
உக்ரைன் டிரோன் தாக்குதலில் ரஷ்யாவில் ஒருவர் உயிரிழப்பு
04 Jan 2026கீவ், ரஷ்யாவின் எல்லையோர மாகாணமான பெல்ஹொராட்டில் சாலையில் சென்ற கார் மீது உக்ரைன் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.
-
கேரளா: பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் பலி
04 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் மதவழிபாட்டு தலத்தில் பட்டாசு வெடித்து விபத்தில் ஒருவர் பலியானார்.
-
மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல்: முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
04 Jan 2026சென்னை, ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல் என்று பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு டோக்கன்கள் விநியோகம் பணி தொடக்கம்
04 Jan 2026சென்னை, தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு டோக்கன்கள் விநியோகம் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது.
-
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு
04 Jan 2026திருச்சி, இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பா.ஜ.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
வெனிசுலா அதிபர் மதுரோ அமெரிக்க சிறையில் அடைப்பு
04 Jan 2026நியூயார்க், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்து நாடுகடத்தப்பட்ட நிலையில், அமெரிக்க சிறையில் அடைக்கப
-
10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைக்கிறார்
04 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் இன்று (ஜன.
-
வெனிசுலா அதிபர் மதுரோ சிறைபிடிப்பு: அதிபர் ட்ரம்புக்கு மேயர் மம்தானி நேரடி எதிர்ப்பு
04 Jan 2026நியூயார்க், வெனிசுலா அதிபர் மதுரோ சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மாம்தானி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விபி ஜி ராம்ஜி புதிய சட்டத்திற்கு எதிராக தெலுங்கானா மாநில சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
04 Jan 2026ஐதராபாத், விபி ஜி ராம்ஜி-க்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2,000 கன அடியாக அதிகரிப்பு
04 Jan 2026தருமபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 2,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
எதிர்காலத்தில் த.வெ.க. கூட்டணியில் ஓ.பி.எஸ்., தினகரன் இணைவார்கள் செங்கோட்டையன் பேட்டி
04 Jan 2026கோவை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் எதிர்காலத்தில் த.வெ.க.
-
கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
04 Jan 2026சென்னை, கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வெனிசுலா மீதான தாக்குதல்: அதிபர் ட்ரம்ப் நடவடிக்கைக்கு கமலா ஹாரிஸ் கடும் எதிர்ப்பு
04 Jan 2026நியூயார்க், வெனிசுலா மீதான ட்ரம்பின் நடவடிக்கை அமெரிக்காவுக்கு பாதுகாப்பானதல்ல என முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
-
5 மணி நேரம் காத்திருந்து திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
04 Jan 2026திருச்செந்தூர், திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்
-
மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: பாகிஸ்தானில் 4 காவலர்கள் பலி
04 Jan 2026லாகூர், பாகிஸ்தானில் இரண்டு வெவ்வெறு சம்பவங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 காவலர்கள் கொல்லப்பட்டனர்.
-
டி-20 உலக கோப்பைக்கான வங்கதேச அணி அறிவிப்பு: 7 ஆல்-ரவுண்டர்கள் சேர்ப்பு
04 Jan 2026டாக்கா, டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பொய் வாக்குறுதிகளால் தமிழ்நாடு மக்கள் சலிப்பு: தமிழில் பதிவிட்ட அமித் ஷா
04 Jan 2026புதுடெல்லி, தி.மு.க. அரசின் பொய் வாக்குறுதிகளால் மக்கள் சலிப்படைந்துள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாறுகிறது தமிழ்நாடு: மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பு
04 Jan 2026சென்னை, தமிழ்நாடு முழுமையாக எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிப்பதற்காகன மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.


