முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஸ்மார்ட்போன்களில் கிருமிகள்

நாம் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் 3 விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் உயிர் வாழ்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மத்திய அரசின் தேசிய செல் அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஸ்மார்ட்போன் திரையில் 3 விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறிவியல் இலக்கியத்தில் இதுவரை இல்லாத 2 வித பாக்டீரியா, பூஞ்சை (ஃபங்கஸ்) இருப்பது பயோடெக்னாலஜி துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இது போன்ற கிருமிகளில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்க ஸ்மார்ட்போன் திரைகளை அவ்வப்போது மெல்லிய துணியை கொண்டு சுத்தம் செய்வது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுத்தம் செய்யும் போது அவற்றை ஆஃப் செய்து வைக்க வேண்டுமாம்.

குழந்தை வடிவமைப்பு

30 ஆண்டுகளில் இனபெருக்க செக்ஸ் முடிவுக்கு வரும் என்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆய்வகங்களில் வடிவமைத்து கொள்வார்கள் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். வருங்காலத்தில், தம்பதிகள் தங்கள் டிஎன்ஏவை வைத்து ஆய்வகங்களில் கருக்களை வடிவமைத்து கொள்வார்களாம். பெண்ணின் தோல் செல்களை எடுத்து ஸ்டெம் செல்கள் உருவாக்க பயன்படுத்தலாம். பின்னர்  இறுதியில் கரு முட்டைகளை உருவாக்கலாம். முட்டைகள் பின்னர் பல கருக்களை விளைவிக்கும். பின்னர் அதனை வல்லுநர்கள் எந்த நோய்களுக்கும் ஆளாகிறார்களா என சோதனை செய்வர். இதை செய்வதன் மூலம், பெற்றோர்கள் குழந்தையின் முடி நிறம் மற்றும் கண் வண்ணம் போன்ற அம்சங்களை தேர்ந்து  எடுத்து கொள்ள முடியும். இந்த செயல்முறை 30 ஆண்டுகளில் மிகவும் மலிவானதாகவும், நிறைய பேர் செய்வார்களாம்.

ஸ்மார்ட் வாட்ச்

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கண்டறியும் சென்சார்களைக் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்களைக் கண்டுபிடிப்பது ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-இன் கனவாக இருந்தது. இதற்கு வடிவம் கொடுக்கும் நவீன சென்சார்களைத்தான் ஆப்பிள் நிறுவன பயோமெடிக்கல் என்ஜினியர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர்.

'மொய் டெக்'

செல்போன் செயலியின் மூலமாக மொய் செய்பவரின் விவரங்களை எழுதிக்கொள்ள புது செயலியை உருவாக்கியுள்ளனர் உசிலம்பட்டிப் பெண்கள்.  'மொய் டெக்' எனும் இந்த செயலி வியக்க வைத்துள்ளது. மேலும் விழாக்களுக்கு வந்து மொய் எழுதும் மக்களுக்கு அவர்கள் மொய் செய்தமைக்கான ரசீது மற்றும் அவர்களது அலைப்பேசிக்கு குறுந்தகவல் என அசத்துகின்றனர்.

வீட்டு குறிப்பு

ஐம்பது கிராம் கொல்லையும், ஐம்பது கிராம் புளியும், 300 மில்லி அளவு வெந்நீரில் இரவில் ஊறவைக்க வேண்டும். காலையில் கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்றச்செய்யவேண்டும். வற்றியதும் வடிகட்டி சிறிது சுக்கு, மரமஞ்சள் பொடிகளைச் சேர்க்க வேண்டும். அத்துடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் பருகினால்  பசி தூண்டப்படும், செரிமானம் அதிகரிக்கும்.

ஏ.கே.47 துப்பாக்கி எப்படி கண்டுபிடிக்கப்பட்டது

இன்றைய போர்ப்படை ஆயுதங்களில் ஏ கே 47 வகைத் துப்பாக்கியும் ஒன்றாகும். இந்த ஆயுதம் தற்போது எல்லா நாடுகளிலும் கிடைக்கிறது. இதன் பயன்பாட்டைப் பற்றிச் சிறுவர்கள் உட்பட அனைவரும் அறிந்து வைத்துள்ளனர் எனில் அது மிகையன்று. தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் ஆகியோரிடம் இதன் புழக்கம் மிகவும் அதிகம் எனலாம். சோவியத் நாட்டைச் சார்ந்த போர்ப்படை அதிகாரி மிகைல் கலாஷ் நிகாவ் என்பவர் 1947இல் இதனைக் கண்டுபிடித்தார். ரஷ்யா தன்னைச் சுற்றியுள்ள பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காபாற்றத் தகுதி வாய்ந்த ஆயுதம் ஒன்றைக் கண்டுபிடிக்க முனைந்தது. அப்போது தானியங்கித் துப்பாக்கி ஒன்றைக் கண்டறிவதில் கலாஷ்நிகாவ் ஈடுபட்டார். தேவையான இலக்கை நோக்கிச் சுடுவதில் அப்போதிருந்த கைத்துப்பாக்கி வெற்றிகரமாக அமையவில்லை. இதன் காரணமாக உருவானதுதான் ஏ.கே.47 வகைத் துப்பாக்கி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago