முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தேநீர் விருந்து மூலம் திருமண சடங்கு

கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவின் எல்லையில் ரஷ்யா, ஈரான், ஆர்மீனியா, ஜார்ஜியா மற்றும் காஸ்பியன் கடல் இடையே அஜர்பைஜான் நாடு அமைந்துள்ளது. பெண்களுக்கு உரிமை வழங்கிய முதல் முஸ்லிம் நாடு. 1918 ஆம் ஆண்டில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் முஸ்லீம் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. இன்றுவரை ஆண் பெண் சமத்துவ முஸ்லிம் நாடுகளில் ஒன்றாக இருந்துவருகிறது. இங்கு திருமணம் நிச்சயம் வித்தியாசமாக தேநீர் கோப்பை மூலமாக நடத்தப்படுகிறது. திருமண நிச்சயம் செய்ய கூடியிருக்கும் பொழுது தேனீர் கோப்பைகள் சர்க்கரை இல்லாமல் பரிமாறப்பட்டால் திருமணம் இன்னும் நிச்சயம் செய்யப்படவில்லை என அர்த்தம். தேனீர் கோப்பையில் தேநீர் இனிப்பு சேர்த்து கொடுக்கப்பட்டால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது என அர்த்தம். அஜர்பைஜானின் தேசிய விலங்கு கராபக் குதிரை. இது உலகின் பழமையான இனங்களில் ஒன்றாகும். அஜர்பைஜானில் குதிரை இறைச்சி ஒரு காலத்தில் பரவலாக உண்ணப்பட்டது. ஆனால் இப்போது அதற்கு பதிலாக மெனுவில் ஆட்டுக்குட்டி மற்றும் மாட்டிறைச்சியைக் காணலாம்.

தூங்கினால் சம்பளம்

தூங்குவதுதான் வேலை என்றால்?  கசக்குமா  அதுவும் அந்தப் பணியை சிறப்பாகச் செய்தால் ஆண்டிற்கு $20,000 வெள்ளியை ஈட்டலாம். பிரபல சீன உடல்நல ஊட்டச்சத்து நிறுவனமான ‘நாவ் பாய்ஜின்’ இந்த 'அரிய' வாய்ப்பை வழங்குகின்றது. சீன இணையவாசிகளால் ‘உலகின் மிக சொகுசான வேலை’ என்ற பாராட்டை இது பெற்றுள்ளது. இந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நிறுவனத்தின் பொருட்களைச் சோதிக்கத் துணைபுரிவார்கள். ஊட்டச்சத்துப் பொருளை உட்கொள்வது, தூக்கத்தின் தரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைச் சோதிக்க வேண்டும். பின்னர், அது குறித்த அறிக்கையை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். தூக்கமின்மையால் அவதியுறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தூக்கத்தைச் சோதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது மருத்துவ உலகம்.

வந்திருச்சு இ-டாட்டூ

ஆய்வாளர்கள் புதிய வகை எலெக்ட்ரானிக் டாட்டூக்களை, உருவாக்கியுள்ளனர். ஸ்கின் மார்க்ஸ் என்று பெயரிட்டுள்ள இந்த இ-டாட்டூவினை தோலில் ஒட்டிக் கொள்ளலாம். தலைமுடியை விட மெல்லியதாக வடிவமைக்கப்பட்ட இந்த இ-டாட்டூவினை ஸ்மார்ட்போனில் இணைத்து இயக்கங்களை கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

தொலைநோக்கியை கண்டுபிடித்தவர்

1609 ஆம் வருடம் ஹாலந்து நாட்டில் 'ஹான்ஸ் லிப்பர்ஷி' என்பவர் ஒரு மூக்கு கண்ணாடி கடை வைத்திருந்தார். அவரிடம் ஒரு சிறுவன் வேலை செய்து கொண்டு இருந்தான். ஒரு நாள் அவனுக்கு பொழுது போகவில்லை. எனவே அவன் மூக்கு கண்ணாடிக்கு பயன்படும் ஒவ்வொரு லென்சாக எடுத்து பார்த்துக் கொண்டே இருந்தான். திடீரென்று குழி ஆடியை கண்ணுக்கு அருகிலும், குவி ஆடியை  சிறிது தொலைவிலும் பிடித்து கொண்டான். தூரத்தில் உள்ள சர்ச் கோபுரத்தை அந்த இரு கண்ணாடிகள் வழியாக பார்த்தான். அவன் கோபுரத்தை லென்ஸ் வழியாக பார்த்தவுடன் ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. அந்த கோபுரம் அவனுக்கு மிக அருகில் இருப்பது போல தெரிந்தது. இதை தனது முதலாளியான ஹான்ஸ் லிப்பர்ஷி வந்தவுடன் கூறினான். அவர் அதை ஒரு தகரக் குழாயில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கலிலியோ அங்கு வருகிறார். இந்த விவகாரம் விஞ்ஞானியான கலிலியோவுக்கு தெரிய வந்தது. உடனே கலிலியோ இது குறித்து தெரிந்து கொண்டு இரண்டு லென்ஸ்களை பயன்படுத்தி கருவி ஒன்றை உருவாக்கினார். பின்னர் அதை சற்று மேம்படுத்தி, கொஞ்சம் வித்தியாசமாக, லென்ஸ்கள் முன்னும் பின்னும் நகரும் மாதிரியான குழாயில் அடைத்தார். அதற்கு "டெலஸ்கோப்" எனப் பெயரிட்டார். அதன் பிறகு வானியல் சரித்திரமே தலைகீழாக மாறிவிட்டது என்பது நாம் அனைவரும் அறிந்த கதை.

இங்கிலாந்துக்கு ஆங்கிலம் எப்போது வந்தது தெரியுமா?

ஆங்கிலத்தின் தாயகம் இங்கிலாந்து என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் சுமார் 300 ஆண்டு காலம் இங்கிலாந்தை ஆட்சி செய்தது பிரெஞ்சு மொழிதான். 1066 க்கும் 1362 க்கும் இடைப்பட்ட காலத்தில் இங்கிலாந்தில் ஆட்சி மொழியாக பிரெஞ்சுதான் இருந்தது. 1066 இல் வில்லியம் தலைமையிலான நார்மன் ஆட்சி வந்த போது, ஆங்கிலோ- நார்மன் பிரெஞ்சு மொழியை அறிமுகப்படுத்தினார். இந்த மொழியை பிரபுக்கள், அரசு உயர் அதிகாரிகள், செல்வந்தர்கள் ஆகியோர் பேசி வந்தனர். அவர்களில் ஒரு சிலருக்கு ஆங்கிலம் பேசக் கூட தெரியாது. பின்னர் 1362 இல் நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தை ஆட்சி மொழி ஆக்கும் சட்டம் இயற்றப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக நார்மன் பிரெஞ்சு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் சாமானிய மக்களுக்கு நீதி மன்றத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாது.

தமிழ் மொழி, Tamil language

இந்தியாவுக்கு வெளியே ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்ட ஒரே மொழி தமிழ். முதலில் அச்சில் ஏறிய இந்திய மொழி தமிழ். உலகில் அதிகம் பேரால் பேசப்படும் ஆங்கிலத்தில் 10 லட்சம் சொற்கள் உள்ளனவாம்.  தமிழில் 6 லட்சம் சொற்கள் உள்ளதாக நிகண்டுகள் கூறுகின்றன. தனது நிலத்துக்கு வெளியே கல்வெட்டுகள், தொல்படிமங்கள், சான்றாதரங்களை கொண்ட ஒரே மொழி தமிழ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago