முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

குறட்டை விடும் பறவை எது தெரியுமா?

அலகின் நுனியில் நாசித் துவாரங்களை கொண்ட ஒரே பறவை கிவி. இது தரையில் உள்ள புழுக்கள் மற்றும் பூச்சிகள் போன்ற உணவுக்காக மோப்பம் பிடிக்க உதவுகிறது. அதன் நாசியைத் துடைக்க அடிக்கடி குறட்டை விடுகின்றது. இது ஒரு கோழி இனம். இது பல வித்தியாசமான பன்புகள் கொண்டது. இவை நியூசிலாந்து அதை சுற்றி உள்ள சிறிய நாடுகளின் காடுகளில் வாழ்கின்றன. இப் பறவை 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்தில் தோன்றியது. இவைகளால் பறக்க முடியாது என்பது இதன் சிறப்பம்சமாகும். நியூசிலாந்தின் தேசிய சின்னமாக கிவி இடம் பெற்றுள்ளது. தற்போது அழியும் தருவாயில் இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதயத்திற்கு பலம்

சிலருக்கு சாக்லெட் போன்ற இனிப்புகளை தொடர்ந்து சாப்பிடும் பழக்கம் இருக்கும். இனிப்புகளை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் பருமானவதுடன், பற்களில் சொத்தை விழும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் கோகோ சாக்லெட் இனிப்புகளை சாப்பிடுவதால்  நல்ல மகிழ்ச்சி நிலை ஏற்படுவதுடன், இதயம் நல்ல முறையில் இருக்கும் என தற்போதைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.கோகோ நிறைந்த சாக்லெட்டுகள் இதய ரத்தக்குழாய்களுக்கு  நல்ல நண்பனாக திகழ்கின்றன. இதனால் சாக்லெட்டுகளை விரும்பி சாப்பிடும் நபர்களுக்கு இதயபாதிப்பு குறைவாகவே உள்ளது என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

நோபல் விருதுக்கு 5 முறை பரிந்துரைக்கப்பட்ட இந்திய தலைவர் யார் தெரியுமா?

இந்தியாவிலிருந்து ரவீந்திரநாத் தாகூர் முதன்முறையாக இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார். அதன் பிறகு சர் சி.வி.ராமன், ஹர் கோவிந்த குரானா, சுப்ரமணியன் சந்திரசேகர், அமர்த்தியா சென் வரை இந்தியர்கள் பலரும் நோபல் பரிசை வென்றுள்ளனர். இந்தியாவின் தேசப்பிதா எனப் போற்றப்படுபவரான காந்தி 5 முறை நோபல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்பது உங்களுக்கு தெரியுமா. ஆனால் தொடர்ச்சியாக அவருக்கு விருது மறுக்கப்பட்டே வந்தது. 5-வது முறையாக 1948 இல் அவர் பரிந்துரைக்கப்படுவதற்கு இரு தினங்களுக்கு முன்பு கோட்சேவால் சுட்டு கொல்லப்பட்டார். 

மணல், sand

பீச்சுக்குப் போனால் மணலில் உட்கார்ந்து மணல் வீடு செய்வோம், மணலில் குழி பறித்து விளையாடுவோம் இல்லையா? இப்படி விளையாடும்போது கடற்கரையில் இவ்வளவு மணல் எப்படி வந்தது என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா..  கடற்கரையில் மணல் நிரம்பிக் கிடக்க அலைகளே காரணம். அலைகள் எப்போதும் கரையை ஓங்கி அறைந்த படி கரையில் உள்ள கற்களையெல்லம் அரித்துக் கொண்டே இருக்கின்றன. சிறு சிறு கற்களை ஒன்றோடு ஒன்று அலைகள் மோத வைக்கின்றன. இப்படிக் கற்கள் மோதிக்கொள்ளும் போது மாவரைக்கும் இயந்திரத்தில் அரைபடுவது போலக் கற்கள் அரைபட்டு கடல் மணல் உருவாகிறது.

இந்தியர்களின் உலகம்

உலக அளவில் ஆண்ட்ராய்டு ஃபோன் பயன்படுத்தும் 10 மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. கடந்த மே மாதம் இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் பயனர்கள் ஒவ்வொரு நாளும் 4 மணி நேரத்திற்கும் மேலாக ஏதாவது ஒரு செயலியை பயன்படுத்துவதில் நேரத்தைச் செலவிடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், ஷாப்பிங் ஆப்ஸ், டிராவல் ஆப்ஸ், கேம்ஸ் ஆப்ஸ் ஆகியவற்றையே இந்தியர்கள் அதிகமாகப் பயன்படுகின்றனராம்.

குறையாத மோகம்

உலகில் ‘செல்பி’ எடுக்கும்போது இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆபத்தான இடங்களில் ‘செல்பி’ எடுக்கும் பழக்கத்தினால், இந்தியாவில் 76 பேர் மரணமடைந்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த கார்நிகி மெலன் பல்கலைக்கழக ஆய்வு குழு தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பலர் இளம் வயதினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 2 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 day ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 2 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 days ago