எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி--ஜூலை.23 - திருச்சியில் ரூ.30கோடி மதிப்புள்ள ஹோட்டலை அபகரித்து விட்டதாக முன்னாள் அமைச்சர் கே.என்நேரு, திருச்சி துணை மேயர் அன்பழகன், அமைச்சரின் தம்பி ராமஜெயம் ஆகியோர் மீது போலீசில் புகார் கூறப்பட்டுள்ள நிலையில் ஹோட்டல் தொடர்பாக போலீஸ் அதிகாரி பேசிய சிடி ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் நேரு கைதாக கூடும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த முன்னாள் திமுக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது நில அபகரிப்பு தொடர்பான புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த புகார்களில் பல்வேறு தி.மு.கவினர் தொடந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த வரிசையில் திருச்சியைச் சேர்ந்த முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு அவரது தம்பியும் தொழில் அதிபருமான கே.என்.ராமஜெயம் திருச்சி மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான மு.அன்பழகன் ஆகிய மூன்று பேர்கள் மீது ரூபாய் 30 கோடி மதிப்பிலான திருச்சி மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஒரு ஹோட்டலை அபகரித்ததாக நாமக்கலைச் சேர்ந்த டாக்டர் கதிர்வேல் என்பவர் திருச்சி மாநகரில் போலீசில் புகார் கொடுத்தார்.
இது குறித்து திருச்சி மாநகர போலிஸ் கமிஷனர் மாசாணமுத்து உத்திரவின் பேரில் டாக்டர்.கதிர்வேல் கொடுத்த புகாருடன் அதற்கான ஆதாரங்களையும் வாங்கி போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ஏற்கெனவே டாக்டர்.கதிர்வேல் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது.
கடந்த 2005 ஆம் ஆண்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள காஞ்சனா பிளாசா ஹோட்டலை 30 கோடி மதிப்பீட்டில் நான் கிரைய ஒப்பந்தம் செய்தேன். அதை தொடர்ந்து ஹோட்டலை நானே நிர்வாகித்து வந்தேன். இந்த நிலையில் 2007ஆம் ஆண்டு திருச்சி திமுக மாநகர செயலாளர் அன்பழகன் தலைமையில் அடியாட்கள் ஆயுதங்களுடன் வந்து என்னை மிரட்டி ஹோட்டலை விட்டு அனுப்பி விட்டனர். மேலும், போலி ஆவணங்கள் தயாரித்து அந்த ஹோட்டலையும் அபகரித்து கொண்டனர். இப் பிரச்சினையில் திருச்சியில் பணியாற்றிய ஒரு போலீஸ் அதிகாரி தொடர்பு இருக்கிறது. எனவே, நான்கு பேர்கள் மீதும் நடவடிக்கை எடுத்த எனது ஹோட்டலை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார். இதனிடையே முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி துணை மேயர் அன்பழகன் ஆகியோர் முன் ஜாமீன் கேட்டு மதுரை ஹைகோர்ட் பெஞ்சில் மனுதாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுவில் ஏற்கெனவே இது போன்று ஒரு புகாரை டாக்டர்.கதிர்வேல் திருச்சி போலீசில் கொடுத்திருந்தார். அதனை விசாரித்த காவல் துறையினர் அந்த புகாரில் எந்த உண்மையும் இல்லை என்று புகாரை முடிவுக்கு வந்தனர். மீண்டும் அதே குற்றச்சாட்டில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பொய் புகார் எனவே எங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கே.என்.நேரு, அன்பழகன் ஆகியோர் கூறியுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க கே.என்.நேரு, தொழிலதிபர் கே.என்.ராமஜெயம், துணைமேயர் அன்பழகன் ஆகியோர் மீது
கூறப்பட்டுள்ள ஹோட்டல் அபகரிப்பு புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர போலீசார் ரகசிய விசாரணையை தொடங்கினர்.
கடந்த 2007ல் திருச்சி கன்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன், டாக்டர் கதிர்வேலுடன் செல் போனில் பேசியது தொடர்பான மூன்று சி.டிக்களை புகார் மனுவுடன் இணைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு சிடியில் டாக்டர் கதிர்வேலுக்கு சொந்தமான ஹோட்டலை முன்னாள் அமைச்சர் நேருவும் அவரது தம்பி ராமஜெயமும் வாங்க விரும்புவதாகவும் எனவே, அவர்கள் தரும் பணத்தை வாங்கிக் கொண்டு ஹோட்டலை விட்டு விடவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன் பேசியுள்ளதாக அந்த சிடியில் பதிவானதாக கூறப்படுகிறுது. அந்த சிடியை ஆய்வு செய்த திருச்சி மாநகர போலீசார் இன்ஸ்பெக்டர் சுவாமிநாதனின் குரல் தானா என்பதை தெரிந்து கொள்வதற்காக ஒரு போலீசாரை தயார் செய்து இன்ஸ்பெக்டர் சுவாமிநாதனிடம் செல் போனில் பேச வைத்து அந்த பேச்சை வேறு ஒரு சிடியில் பதிவு செய்தனர். பின்னர் இரண்டு சிடிக்களையும் ஒப்பிட்டு பார்த்த் போலீசார் இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன் குரல்தான் அது என்பதை உறுதி செய்து கொண்டனர். தற்போது இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன் டி.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று சென்னை வீராபுரத்தில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் பணி புரிந்து வருகிறார்.
டி.எஸ்.பி சுவாமிநாதனை திருச்சி போலீசார் திருச்சி வரவழைத்து அவரிடம் போலீஸ் கமிஷனர் மாசாணமுத்து, துணை போலீஸ் கமிஷனர் ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இந்த விசாரணையில் சிடி தொடர்பாகவும், ஹோட்டல் அபகரிப்பு விவகாரம் தொடர்பகாவும் கூறியிருக்கிறார். அதன் அடிப்படையில் விசாரணை சூடு பிடித்துள்ளது. எந்த நேரத்திலும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, துணைமேயர் அன்பழகன் ஆகியோரை திருச்சி மாநகர போலீசார் கைது செய்யக்கூடும் என்று போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.மேலும், ஒரு போலீஸ் அதிகாரி கூறியதாவது. ஹோட்டல் அபகரிப்பு தொடர்பாக மூன்று பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது. எனவே, வழக்கு பதிவு செய்யப்பட்டதை ரகசியமாக வைத்துக்கொண்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கோவை மாணவி வன்கொடுமை: 3 பேர் சுட்டுப்பிடிப்பு
04 Nov 2025கோவை, கோவை மாணவி வன்கொடுமை குறித்து 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
-
ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா: மாதம்பட்டி ரங்கராஜ்
04 Nov 2025சென்னை: ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா என்று மாதம்பட்டி ரங்கராஜ் ஒத்துக்கொண்டதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்
04 Nov 2025சென்னை, த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மணிப்பூரில 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
04 Nov 2025இம்பால், மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் சட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-11-2025.
04 Nov 2025 -
160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பீகாரில் தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும்: அமித்ஷா
04 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உலகக்கோப்பை சிறந்த அணி: இந்திய வீராங்கனைகள் 3 பேருக்கு இடம்
04 Nov 2025மும்பை: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சிறந்த அணியை தேர்வு செய்துள்ள ஐ.சி.சி.
-
சி.பி.எஸ்.இ. 10 - ம் வகுப்புத்தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
04 Nov 2025சென்னை, சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
-
கோவை பாலியல் வன்கொடுமை: அ.தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
04 Nov 2025கோவை: கோவை பாலியல் வன்கொடுமை துப்பாக்கியால் சுடப்பட்ட வர்கள் உண்மை குற்றவாளிகளா? என்று முன்னாள் அமைச்சர் வளர்மதி கேள்வி.
-
துணை பொதுச்செயலாளராக பொன்முடி மீண்டும் நியமனம்
04 Nov 2025சென்னை: தி.மு.க. துணை பொதுச்செயலாளராக மீண்டும் முன்னாள் அமைச்சர் பொன்முடியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு
04 Nov 2025லக்னோ: உத்தரபிரதேசத்தில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
-
அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி
04 Nov 2025புதுடெல்லி: பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
-
தி.மு.க.விடம் பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார்: மனோஜ் பாண்டியன் மீது வைகைச் செல்வன் தாக்கு
04 Nov 2025சென்னை, நன்றி மறந்து பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார் மனோஜ் பாண்டியன் என்று வைகைச் செல்வன் தெரிவித்தார்.
-
ஐ.சி.சி. மகளிர் பேட்டிங் தரவரிசை: 10-ம் இடத்திற்கு முன்னேறினார் ஜெமிமா
04 Nov 2025துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில்(ஐ.சி.சி.) ஒருநாள் கிரிக்கெட்டின் பேட்டிங் தரவரிசையில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா 814 புள்ளிகளுடன் இந்திய துணை கேப்டன் ஸ
-
சபரிமலையில் 16-ம் தேதி நடை திறப்பு
04 Nov 2025திருவனந்தபுரம், சபரிமலையில் வருகிற 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.
-
ஐதராபாத் அருகே சாலை விபத்து: 3 சகோதரிகள் பலியான சோகம்
04 Nov 2025தெலங்கானா: தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து ஐதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உ
-
பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது 121 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
04 Nov 2025பாட்னா: பீகாரில் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
04 Nov 2025மாஸ்கோ: ரஷ்யாவில் அடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல் 6 பேர் பலி - மீட்புப்பணி தீவிரம்
04 Nov 2025ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குற்றச்சாட்டு
04 Nov 2025புதுடெல்லி: மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு குற்றச்சாட்டு
-
நடுவானில் திடீர் கோளாறு: டெல்லி புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் தரையிறக்கம்
04 Nov 2025புதுடெல்லி: நடுவானில் கோளாறு ஏற்பட்டதால் டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
04 Nov 2025மேட்டூர்: டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருநது தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.;
-
இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்
04 Nov 2025ஈரோடு, இரட்டை இலை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார்.
-
பீகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30 ஆயிரம் நிதி - தேஜஸ்வி யாதவ் உறுதி
04 Nov 2025பாட்னா, இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30,000 நிதி வழங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் உறுதியளித்துள்ளார்.
-
பொன்முடிக்கு மீண்டும் கட்சிப்பதவி: அ.தி.மு.க. கடும் விமர்சனம்
04 Nov 2025சென்னை: பொன்முடிக்கு மீண்டும் கட்சிப்பதவி வழங்கப்பட்ட நிலையில் அதுகுறித்து அ.தி.மு.க. கடும் விமர்சனம் செய்துள்ளது.


