முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேகத்தை அதிகரிக்க தங்க ரயில் பாதை பணிகள் ஆரம்பம்

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜன.26 - மும்பை-புதுடெல்லி இடையே ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் தங்க ரயில்பாதை திட்டப்பணிகள் தொடங்கின. இந்த பணிகளை இந்தியாவும் ஜப்பானும் சேர்ந்து செயல்படுத்த உள்ளன.  உலக அளவில் பணிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதுவும் அந்த பணிகள் அவசரகால பணிகளாக உள்ளன. இதை சமாளிக்க போக்குவரத்து நேரத்தை குறைக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ரயில்கள் செல்லும் வேகத்தை அதிகரிக்கும் பணியில் அனைத்து நாடுகளும் ஈடுபட்டுள்ளன. சீனாவில் மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயில்கள் விடப்பட்டுள்ளன. அதேமாதிரி ஜப்பானில் அதிவேகமாக செல்லும் ரயில்கள் உள்ளன. அதேமாதிரி இந்தியாவிலும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க செய்யும் பணியில் ஜப்பானுடன் இந்தியா சேர்ந்து செயல்படுத்த உள்ளன. இதன் முதல் கட்டமாக மும்பையில் இருந்து புதுடெல்லிக்கு செல்லும் ரயில்களின் வேகத்தை முதலில் தற்போதுள்ள ரயில்பாதைகளிலேயே அதிகரிப்பதற்கான பணி தொடங்கப்பட்டுவிட்டது என்று இந்திய ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். ஜப்பானுடன் சேர்ந்து தங்க ரயில்பாதை திட்டம் என்ற பணியை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் மும்பையில் இருந்து டெல்லிக்கு 160 முதல் 200 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயிலை இருக்கும் ரயில்பாதையிலேயே விட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக மின்சாரத்தில் ஓடும் ரயில் எஞ்ஜின் மற்றும் பெட்டிகளை ஜப்பானில் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக இருக்கும் ரயில்பாதைகள் மாற்றப்பட்டு ரயில்கள் வேகமாக செல்லும்படி ரயில்பாதைகள் அமைக்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறினார். தற்போது மும்பையில் இருந்து புதுடெல்லி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வேகமாக செல்லும் ரயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்