முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் ரூ.80 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம்

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜன.27 - மதுரை மாநகராட்சி நடந்த குடியரசு தினவிழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசிய மேயர் ராஜன்செல்லப்பா ரூ.80 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.  மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. காலை 9 மணிக்கு மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மாநகராட்சி பள்ளியில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மேயர் ராஜன்செல்லப்பா பேசியதாவது, தமிழக முதல்வர் அம்மா தலைமையிலான மக்கள் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை தொலை நோக்குடன் நிறைவேற்றி வருகிறது. மதுரை மாநகராட்சி 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 2வது பெரிய மாநகராட்சியாக மதுரை மாநகராட்சி உருவாகி உள்ளது. மதுரை மாநகரில் 15 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். முதல்வர் அம்மாவின் ஆலோசனைப்படி மதுரை மாநகராட்சியின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக திடக்கழிவு மேலாண்மைக்காக ரூ.40 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.10 கோடி முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

    நகரில் தெருவிளக்குகள் அமைக்க ரூ.10கோடியும், நகரின் சாலைகளை சீரமைக்க முதலில் ரூ.15கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் 43 இடங்களில் புதிய கழிப்பறைகளை கட்டவும், 52 இடங்களில் கழிப்பறைகளை மராமத்து செய்யவும் 470 குடியிரிப்புக்களில் ரூ.8 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க பெரியார் பஸ்நிலையம், ஜான்சிராணி பூங்கா அருகில் ரூ.80 கோடி செலவில் அடுக்குமாடி வாகனம் நிறுத்துமிடம் கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகே தனியார் பஸ்களை நிறுத்த ரூ.70 கோடியிலும், கோரிப்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்க ரூ.70  கோடியிலும் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாநகராட்சி கமிஷனர் சவுந்தர்ராஜன், எம்எல்ஏக்கள் அண்ணாதுரை, சுந்தர்ராஜன், மண்டல தலைவர்கள் பெ.சாலைமுத்து, மு.இராஜபாண்டியன், கே.ஜெயவேல், கே.ராஜபாண்டியன்,கல்வி குழுத்தலைவர் சுகந்தி அசோக் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழச்சிகள் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago