எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜன.29 - இளைய சமூகத்தின் மத்தியில் விளையாட்டு துறையை மேம்படுத்த பல்நோக்கு நடவடிக்கைகளை எடுக்கும் முதல்வர் ஜெயலலிதா முதற்கட்டமாக திருச்சி, மதுரை உள்விளையாட்டு அரங்கை அமைக்க நிதியை ஒதுக்கியுள்ளார். மேலும் 20 மாவட்டங்களில் உள்விளையாட்டு அரங்குகளை அமைக்கவும் ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது: காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுவதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்தி கொள்ளு பாப்பா என்ற பாரதியின் கூற்றுப்படி, ஒவ்வொருவருக்கும் படிப்பும், விளையாட்டும் இரண்டு கண்களாகும். படிப்பு, அறிவை வளர்க்கும்; விளையாட்டு, உடல் நலத்தை காக்கும்; என்பதை உணர்ந்து கல்வி, விளையாட்டு என்ற இரண்டிலும் மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இதன் மூலம் அறிவார்ந்த ஆரோக்கியமான இளைய சமுதாயம் உருவாகும். இதன் அடிப்படையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கல்வியைப் போல, விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, அந்த வகையில், கூடைப்பந்து மற்றும் கையுந்து பந்து விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையில், திருச்சி, திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் கால்வாலியம் செயற்கை தகடுகளான மேற்கூரை வசதியுடன் கூடிய கூடைப்பந்து மற்றும் கையுந்து பந்து விளையாட்டு மைதானங்கள், 1 கோடியே 50 லட்சம் ரூபாயில், அதாவது ஒவ்வொரு இடத்திலும் 50 லட்சம் ரூபாய் மதிப்பிட்டில் அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.
மேலும், மதுரையில் பன்னாட்டு தரம் வாய்ந்த செயற்கை இழை ஹாக்கி மைதானம், நீர்தெளிப்பான், மூடிய வடிகால் வசதி மற்றும் மின்னொளி வசதியுடன் 6 கோடி ரூபாய் செலவில் அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.
தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி மாநகரில் தடகளப் போட்டியினை ஊக்குவிக்க, 8 ஓடுகளப் பாதைகளுடன் கூடிய செயற்கை இழையிலான தடகள ஒடுபாதை, மூடிய வடிகால் வசதி மற்றும் மின்னொளி வசதியுடன் 6 கோடி ரூபாயில் செலவில் உருவாக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.
முதலமைச்சர் கோப்பைக்காக, மாநில அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடை பந்து, கால்பந்து, ஹாக்கி , கபாடி மற்றும் கையுந்துபந்து ஆகிய விளையாட்டுகள் 4 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவில் நடத்துவதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்கள்.
உலகத் திறனாளர்களை கண்டறியும் திட்டத்தின் கீழ் 3,240 இளம் விளையாட்டு வீரர்கள் கண்டறியப்பட்டு, அவர்களை சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி வாகை சூட ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் 6,000/ ரூபாய் ஊக்கத் தொகை வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள். இத் திட்டத்திற்கு 1 கோடியே 94 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவினம் ஏற்படும். தற்போது உலக அளவில் அனைத்து விளையாட்டுகளும், செயற்கை தளங்களில் உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கிலும் நடைபெற்று வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு உலகத் தரம் வாய்ந்த செயற்கை தளங்கள் அமைக்க மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வாங்கிட 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் பல்வேறு விளையாட்டுக்களை மேம்படுத்தி, பல்வேறு இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்களின் பணிக்காக முதற்கட்டமாக 8 வாகனங்களை 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்குவதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.
மாவட்டங்களில் பல்வேறு விளையாட்டுகளில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் திறனை வளர்பபதற்கு பல்நோக்கு வசதிகள் கொண்ட விளையாட்டு அரங்கங்களை அமைப்பது மிகவும் அவசியம். எனவே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 30 கோடி ரூபாய் செலவில் பார்வையாளர்களுக்கான இருக்கை வசதி, மரத்தாலான தரைத்தளம் மற்றும் மின்வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய உள் விளையாட்டு அரங்கங்களை 20 மாவட்டங்களில் அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்கள். முதற்கட்டமாக, 5 மாவட்டங்களில் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் இவ்விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் தற்போது 9 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டு விடுதிகள் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள திறமை மிக்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்க இயலாத சூழ்நிலை உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு விளையாட்டு விடுதி வீதம், 23 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகளை அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்கள். இதன்படி, ஒவ்வொரு விளையாட்டு விடுதியிலும் 60 மாணவ, மாணவியருக்கு உயர்தர பயிற்சி அளிக்கப்படும். இவர்களுக்கு உணவு, உறைவிடம் மற்றும் இதர வசதிகள் அனைத்தும் வழங்கப்படும். முதற்கட்டமாக, 5 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் அமைக்கப்படும். இதற்காக அரசுக்கு 3 கோடி ரூபாய் தொடரா செலவினமும், 1 கோடியே 15 லட்சம் ரூபாய் தொடர் செலவினமும் ஏற்படும்.
மேற்கூறிய, அரசின் பல்நோக்கு நடவடிக்கைகளினால், தமிழகத்தில் விளையாட்டுத்துறை ஒரு புதிய சகாப்தம் படைக்கும் என்று சொன்னால் மிகையாகாது. இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-07-2025.
07 Jul 2025 -
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07 Jul 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன்
07 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி
-
திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
07 Jul 2025தூத்துக்குடி, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்
07 Jul 2025சென்னை, “திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள
-
பட்டமளிப்பு விழா மேடையில் பா.ம.க.வை விமர்சித்த அமைச்சர்
07 Jul 2025தருமபுரி : அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பா.ம.க.வை விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
உலகின் கவனத்தை கவர்ந்த இந்திய பாதுகாப்புத்துறை: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்
07 Jul 2025புதுடில்லி, ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அ
-
17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி நாடு தழுவிய 'ஸ்டிரைக்' முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
07 Jul 2025சென்னை, நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ப
-
தமிழ்நாடு முழுவதும் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு
07 Jul 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
வரி விதிப்பு விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா ஆலோசனை
07 Jul 2025பீஜிங் : நாங்கள் மோதலை விரும்பவில்லை. இது போன்ற நடவடிக்கைகள் பயனற்றவை என டிரம்பின் வரி விதிப்பு மிரட்டலுக்கு சீனா பதில் அளித்துள்ளது.
-
பீனிக்ஸ் திரைவிமர்சனம்
07 Jul 2025அண்ணன் கொலைக்கு பழி வாங்கும் ஒரு தம்பியின் கதை தான் பீனிக்ஸ் படத்தின் ஒரு வரிக்கதை.
-
அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியை இந்தியா அழைத்து வர ஏற்பாடு
07 Jul 2025புதுடில்லி : அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி ஹேப்பி பாசியாவை, விரைவில் நாடு கடத்தி அழைத்து வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
-
கே.என்.நேருவின் சகோதரர் மீதான சி.பி.ஐ. வழக்கு நிபந்தனையுடன் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jul 2025சென்னை : தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சி.பி.ஐ.
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி
07 Jul 2025லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன்.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு : இந்தியா நிலை என்ன?
07 Jul 2025துபாய் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்...
-
டெக்சாஸ் கனமழை, வெள்ளம்: பலிஎண்ணிக்கை 82 ஆக உயர்வு; பேரிடராக அறிவித்தார் ட்ரம்ப்
07 Jul 2025டெக்சாஸ் : டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில், அதை இயற்கை பேரிடராக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
மணிப்பூரில் 5 தீவிரவாதிகள் கைது
07 Jul 2025மணிப்பூர் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர்.
-
ஜுராசிக் பார்க் ரீபெர்த் விமர்சனம்
07 Jul 2025ஜுராசிக் பார்க் இதுவரை 2 அத்தியாயம் முடிந்து தற்போது மூன்றாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது.
-
அழுத்தமான சூழ்நிலைகளை கவிதையாய் மாற்றியவர்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Jul 2025சென்னை, “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள
-
33-வது பருவநிலை மாற்ற மாநாட்டிற்கு இந்தியா தலைமை 'பிரிக்ஸ்' நாடுகள் கூட்டறிக்கை
07 Jul 2025ரியோ டி ஜெனீரோ : பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
-
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்:விவசாயிகள், மக்களுடன் எப்போதும் அ.தி.மு.க. இருக்கும்: இ.பி.எஸ். பேச்சு
07 Jul 2025கோவை, “அ.தி.மு.க. அரசாங்கம் எப்போதும் விவசாயிகள் உடன்; மக்கள் உடன் இருக்கும் என கோவையில் நடந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அ.தி.மு.க.
-
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பு: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
07 Jul 2025வாஷிங்டன், அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்
-
அமெரிக்காவில் 3-வது கட்சியா..? - அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்
07 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
-
16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது: திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
07 Jul 2025திருச்செந்தூர், 16 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.