எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அடிலெய்டு, பிப்.- 13 - முத்தரப்பு ஒரு நாள் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4 - 0 என்ற நிலையில் இழந்தது. இதையடுத்து நடைபெற்ற டுவெண்டி - 20 போட்டியில் 1 - 1 என்ற நிலையில் சமன் செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் பேங்க் சீரிஸ் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா - இலங்கை நாடுகள் விளையாடி வருகின்றன. இதில் ஆஸ்திரேலியா 2 வெற்றிகளையும் இந்தியா ஒரு வெற்றி ஒரு தோல்வியை பெற்ற நிலையில் தங்களது இரண்டாவது லீக் போட்டியில் நேற்று அடிலெய்டில் மோதின. பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். ஆஸ்திரேலியாவிற்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார் இந்திய வீரர் வினய்குமார். 6 ரன்களை எடுத்திருந்த ரிக்கி பாண்டிங், வினய் பந்தில் விராட் ஹோலியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ஆஸி.யின் ஸ்கோர் அப்போது 14 ஆக இருந்தது. அடுத்து கேப்டன் மைக்கேல் கிளார்க் களமிறங்கினார். வார்னர்- கிளார்க் ஜோடி மெதுவாக ரன் எண்ணிக்கையை உயர்த்தியது. அதிலும் கிளார்க் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் அணியின் ஸ்கோர் 53 ஐ எட்டியபோது 18 ரன்களை எடுத்திருந்த வார்னர், அற்புதமாக ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்ததாக கிளார்க்குடன் அறிமுக வீரர் ஃபாரஸ்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நல்ல முறையில் விளையாடி ரன்களை உயர்த்தியது. இந்நிலையில் அதிரடியாக விளையாடிய கிளார்க் 38 ரன்களை எடுத்திருந்தபோது உமேஷ் யாதவ் மித வேகமாக வீசிய அற்புதமான பந்தில் கிளீன் போல்டானார். ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 17.5 ஓவர்களில் 81 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து டேவிட் ஹஸ்ஸி களமிறங்கினார். ஃபாரஸ்ட் மற்றும் ஹஸ்ஸி ஜோடி இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. அதிலும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அறிமுக வீரராக களமிறங்கிய ஃபாரஸ்ட் மிகச் சிறப்பாக விளையாடி தனது முதலாவது அரை சதத்தை கடந்தார். 71 பந்துகளில் இவர் அரை சதம் அடித்தார். இவரைத் தொடர்ந்து டேவிட் ஹஸ்ஸியும் அரை சதம் கடந்தார். இந்நிலையில் அணியின் எண்ணிக்கை 35.3 ஓவர்களில் 179 ஆக இருந்தபோது 66 ரன்களை எடுத்திருந்த ஃபாரஸ்ட், உமேஷ் யாதவின் பந்தில் வினய்குமாரிடம் பிடிகொடுத்து அவுட்டானார். தொடர்ந்து ஹஸ்ஸியுடன், கிறிஸ்டியன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கொடுத்தது. இந்நிலையில் நல்ல முறையில் விளையாடிக்கொண்டிருந்த ஹஸ்ஸி, ஜாஹீர்கான் பந்தில் சேவாக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் எடுத்த ரன்கள் 72. அப்போது ஆஸ்திரேலிய அணி 44.2 ஓவர்களில் 235 ரன்களை எடுத்திருந்தது. கடந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய வாடே இம்முறை பின்வரிசையில் களமிறக்கப்பட்டார். இவரும் கிறிஸ்டியனும் இறுதிக் கட்டத்தில் அதிரடியைக் காட்ட ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்களை சேர்த்தது. இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் மற்றும் வினய்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜாஹீர்கான் 1விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியாவின் 3 விக்கெட்டுகள் ரன் அவுட் முறையில் வீழ்த்தப்பட்டன.
தொடர்ந்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை துரத்தியது இந்திய அணி. இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சினுக்கு ஓய்வு வழங்கப்பட்டதால் துவக்க வீரர்களாக காம்பீரும் சேவாக்கும் களமிறங்கினர். இந்த ஜோடி நல்ல துவக்கத்தை தந்தது. அணி 52 ரன்களை கடந்தபோது அதிரடி வீரர் சேவாக் 20 ரன்களை எடுத்த நிலையில் மெக்கேயின் பந்தில் ஹஸ்ஸியால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். தொடர்ந்து இளம் வீரர் விராட் ஹோலி களமிறங்கினார். இம்முறை ஹோலி 18 ரன்கள் எடுத்த நிலையில் மெக்கேயின் பந்தில் ஃபாரஸ்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். தொடர்ந்து காம்பீருடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கொடுத்தது. காம்பீர் அரை சதம் கடந்தார். அணியின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்தபோது ரோகித் சர்மா 33 ரன்கள் எடுத்த நிலையில் ஹாரிஸின் பந்தில் ஸ்டார்க்கால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். அருமையாக விளையாடிவந்த காம்பீர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த வேளையில் 92 ரன்கள் எடுத்த நிலையில் மெக்கேயின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட்டானார். அடுத்து அணித் தலைவர் தோனியும், ரெய்னாவும் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர். இந்நிலையில் 46.1 ஓவரில் அணியின் எண்ணிக்கை 239 ஆக உயர்ந்தபோது ரெய்னா 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தோகர்த்தியின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். இவர் 8 பந்துகளில் 12 ரன்களை எடுத்த நிலையில் தோகர்த்தியால் அவுட் ஆக்கப்பட்டாலும் தோனி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இறுதியில் இந்திய அணி 49.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. தோனி ஆட்டமிழக்காமல் 44 ரன்களுடனும் அஸ்வின் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஆஸி. தரப்பில் மெக்கே 3 விக்கெட்டையும், தோகர்த்தி 2 விக்கெட்டையும், ஹாரிஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 92 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட காம்பீர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் தலா இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –18-01-2026
18 Jan 2026 -
டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் விஜய்
18 Jan 2026சென்னை, கரூர் கூட்ட நெரிசல் விசாரணை தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் நேரில் ஆஜராகிறார்.
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு நாளை ஆலோசனைக் கூட்டம்
18 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கைக் குழு நாளை (20.01.2026) செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு, சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில்
-
அசாமில் ரூ.6,957 கோடி மதிப்பிலான மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
18 Jan 2026அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 6 ஆயிரத்து 957 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள சாலை மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர
-
யாரையும் கஷ்டப்படுத்த சொல்லவில்லை: தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த ஏ.ஆர்.ரஹ்மான்
18 Jan 2026சென்னை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன் மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
ஓசூர் விமான நிலைய திட்டம்: ஒப்புதல் அளிக்க மத்திய அரசு மறுப்பு
18 Jan 2026டெல்லி, ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரு
-
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் காலிங்கராயரின் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
18 Jan 2026ஈரோடு, ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் நதிநீர் இணைப்பின் முன்னோடி என போற்றப்படும் காலிங்கராயர் சிலையை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான்: அ.இ.அ.தி.மு.க. அறிக்கை
18 Jan 2026சென்னை, மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான் என்று தி.மு.க. அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதிலளக்கும் விதமாக அ.இ.அ.தி.மு.க.
-
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப்பின் கேரளாவில் தலைமை தேர்தல் அதிகாரி கேல்கர் பெயர் நீக்கப்பட்டதால் அதிர்ச்சி!
18 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் எஸ்.ஐ.ஆர்.
-
நீலகிரியில் சோக சம்பவம்: மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலி
18 Jan 2026நீலகிரி, நீலகிரியில் மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானதை அடுத்து 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்பு
18 Jan 2026தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி: அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்
18 Jan 2026சென்னை, உடல்நல குறைவு ஏற்பட்டதால் அமைச்சர் துரைமுருகன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
அமெரிக்க படைகள் தாக்குதல்: சிரியாவில் அல் கொய்தா முக்கிய தலைவர் கொலை
18 Jan 2026டமாஸ்கஸ், சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், டிசம்பர் மாதம் அமெரிக்க வீரர்களை கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதியுடன் தொடர்புடைய அல்-கொய்தாவின் ம
-
கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்ப் முடிவு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்: ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
18 Jan 2026பிரஸ்ஸல்ஸ், கிரீன்லாந்து விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக நடந்து கொள்வது ஆபத்தான வீழ்ச்சிப் பாதைக்கு வழி வகுக்கும் என்று ஐரோப்ப்பிய ஒன்றியம் அவரை எச்சரித்துள்ளது.
-
தமிழகத்திற்கான உரிய நிதியை வழங்குவதில்லை: மத்திய அரசு மீது நிதியமைச்சர் : தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
18 Jan 2026மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதி பகிர்வு வழங்காத நிலையிலும், உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு முதல்வர் மு.க.
-
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஏகே-47 துப்பாக்கிகள் கண்டெடுப்பு
18 Jan 2026சண்டிகர், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.
-
பிற இந்திய மொழிகளின் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு விருது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
18 Jan 2026சென்னை, "தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும்
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: லக்னோவில் இண்டிகோ விமானம் தரையிறக்கம்
18 Jan 2026லக்னோ, வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து இண்டிகோ விமானம் லக்னோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
தி.மு.க. கூட்டணியை யாராலும், ஒருபோதும் உடைக்க முடியாது: அமைச்சர் ரகுபதி மீண்டும் திட்டவட்டம்
18 Jan 2026புதுக்கோட்டை, தி.மு.க.
-
வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப தமிழ்நாடு முழுவதும் 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Jan 2026சென்னை, பொங்கல் விடுமுறையில் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக நேற்று 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
-
காற்றின் தரத்தை அறிய மாநகராட்சி நடவடிக்கை: சென்னையில் 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் அமைப்பு
18 Jan 2026சென்னை, சென்னையில் காற்றின் தரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக 100 முக்கிய இடங்களில் டிஜிட்டல் பலகைகளை அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
-
போட்டியின்றி தேர்வாகிறார்: பா.ஜ.க. தேசிய தலைவராக நிதின் நபினுக்கு வாய்ப்பு
18 Jan 2026டெல்லி, பா.ஜ.க. தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வாக நிதின் நபினுக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
11-வது நாளாக தொடர்ந்த போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை
18 Jan 2026சென்னை, “தி.மு.க.
-
1,500 குழந்தைகளை காப்பாற்றிய பெண் ரயில்வே காவல் அதிகாரிக்கு மிக உயரிய சேவை விருது அறிவிப்பு
18 Jan 2026லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சந்தனா சின்ஹாவுக்கு இந்திய ரயில்வேயின் உயரிய சேவை விருதான 'அதி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' வழங்கி கவுரவ
-
குடியரசு தினம் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமல்
18 Jan 2026சென்னை, இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை (ஜனவரி 26, 2026) முன்னிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


