எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.12 - இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு- மீள் குடியமர்த்தல் பற்றி அதிபருடன் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாலும், இலங்கை தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ராஜபக்ஷே அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும், இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் அ.தி.மு.க. உறுப்பினர் ரபி பெர்னார்டு பங்கேற்க மாட்டார் என சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்தார். நேற்று முதல்வர் ஜெயலலிதா 110 வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதன் விபரம் வருமாறு:-
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களை அந்த நாட்டில் மறு குடியமர்த்துவதற்காகவும், மறுவாழ்வு அளிப்பதற்காகவும், இந்திய நாட்டு உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகளை பார்வையிடுவதற்காக, இம்மாதம் 16 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் 15 உறுப்பினர்கள் அடங்கிய இந்திய பாராளுமன்ற கூட்டுக் குழுவை இலங்கைக்கு மத்திய அரசு அனுப்ப முடிவு செய்து, அதில் அ.தி.மு.க. சார்பில் ஓர் உறுப்பினரை அனுப்புமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வில்லியம் ரபி பெர்னார்டு அனுப்ப நான் முடிவு செய்தேன்.
இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையினரான சிங்களர்களுக்கு இணையாக முழு உரிமை பெற்ற குடிமக்களாக நடத்தப்பட வேண்டும் என்பதிலும், போரினால் இடம்பெயர நேர்ந்த தமிழர்களை அவர்கள் முன்னர் வசித்த இடத்திலேயே மீள்குடியமர்த்த வேண்டும் என்பதிலும் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது. எனவே தான், கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், இலங்கை உள்நாட்டுப் போரின் போது, மனிதாபிமானமற்ற முறையில் பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என்ற பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும்; இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரை மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியப் பேரரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் இயற்ற நடவடிக்கை எடுத்தேன்.
இந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தினை எதிர்த்து மத்திய அரசு செயல்படுவதாக இருந்தது. அமெரிக்காவின் தீர்மானத்தினை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து கடிதங்கள் மூலம் வலியுறுத்தியதை அடுத்து, இறுதி வரை அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதில் ஒரு தெளிவற்ற நிலையைக் கடைபிடித்த மத்திய அரசு, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் கடுமையை குறைத்து, அதை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சிகளை எடுத்து, அதில் வெற்றியும் பெற்று அதன் பின் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது. இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை பெறுவதற்கு இது முதல் படியாக இருக்கும் என்பதால் அதற்கு நன்றி பாராட்டினேன்.
எனவே, இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் இலங்கைப் பயணம் அங்குள்ள தமிழர்களுக்கு பயனளிப்பதாக இருக்கும், அவர்களோடு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாகச் கலந்துரையாடினால் அது தமிழர்களுக்கு ஆறுதலாகவும், உண்மை நிலவரங்களை தெரிந்துகொள்ள உதவும் என்றும் நம்பினேன். அவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள மறுவாழ்வு நடவடிக்கைகளை பார்வையிட்டு, அவற்றில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டவும் அது உதவும் என்ற எண்ணத்தில் தான் அ.தி.மு.க. சார்பில் ஓர் உறுப்பினரை அனுப்ப நான் சம்மதித்தேன். இந்தச் சூழ்நிலையில், இலங்கை பயணம் குறித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல் தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் நேரிடையாக கலந்துரையாடவும், அவர்களின் உள்ளக் குமுறல்களை கேட்டு அறியவும் வாய்ப்பு இல்லாததாக அமைந்துள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்ஷே உட்பட சிங்கள அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடனான கூட்டங்கள் மற்றும் விருந்துகள் ஆகியவற்றிற்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரலை பார்க்கும் போது, இது ஏதோ சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் சுற்றுப் பயணம் போலவும், இது இலங்கை அரசால் அவர்களுக்கு சாதகமாக ஒரு கருத்து இந்தியாவில் எற்பட தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் போலவும் தான் தெரிகிறது. இது மட்டுமல்லாமல், இக்குழுவில் பத்திரிகையாளர்கள், மனித உரிமைகளில் ஆர்வம் உடையவர்கள், சுதந்திரமான கண்காணிப்பாளர்கள் யாரும் இடம் பெறாதது எனது ஐயத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்தக் குழுவின் பயணமும், ஏற்கெனவே தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன் விருந்துண்டு, பரிசுப் பொருட்களை பெற்றது போல் ஒரு கண்துடைப்பு ஏற்பாடாக ஆகிவிடும் என்று நான் கருதுகிறேன். ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் மென்மையான தீர்மானத்தைக் கூட இலங்கை அதிபர் ராஜபக்ஷே ஏற்றுக் கொள்ள முன்வராத நிலையிலும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை ராஜபக்ஷே அரசு தடுத்து நிறுத்தாததாலும், தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக சர்வதேச அணுமின் முகமையிடம் இலங்கை முறையிட உள்ளதாக செய்திகள் வந்துள்ளதன் அடிப்படையிலும், தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ராஜபக்ஷே அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும், இலங்கைத் தமிழர்கள் மீதான அணுகுமுறையில் இலங்கை அரசிடம் எந்தவிதமான மாற்றமும் தெரிய வராததாலும், இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு, மீள்குடியமர்த்தல் ஆகியவை பற்றியும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் நேரில் காணும் யதார்த்தங்களை பற்றியும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயுடன் விவாதம் செய்ய வாய்ப்பு தரப்படாமல் சுற்றுப் பயணத்தின் கடைசி நாளில் அதிபர் ராஜபக்ஷேவுடன் காலை விருந்துக் கூட்டம் என்பது மட்டும் பயணக் குறிப்பில் இடம் பெற்றுள்ளது ஏமாற்றமளிக்கிறது என்பதாலும், இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விலகிக் கொள்கிறது என்பதையும், இந்தக் கூட்டுக் குழுவில் அ.தி.மு.க.வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் ரபி பெர்னார்டு பங்கேற்க மாட்டார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
பேச்சுவார்த்தை ரத்து: இந்திய பயணத்தை தவிர்த்த அமெரிக்க குழு - அமலுக்கு வரும் 50 சதவீத வரி?
18 Aug 2025அமெரிக்கா : பேசசுவார்த்தை ரத்தானதை தொடர்ந்து இந்திய பயணத்தை அமெரிக்க குழு ரத்து செய்து 50 சதவீத வரியை அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்.
-
தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகள்
18 Aug 2025சென்னை : இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
-
இன்றைய தங்கம் விலை
18 Aug 2025சென்னை, இன்றைய தங்கம் விலையில் மாற்றம் இல்லை.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது.
-
தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் திருமாவளவன் கருத்துக்கு கடும் எதிர்ப்பு
18 Aug 2025சென்னை, தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது” என ‘மாற்றுப் பார்வை’யில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளது, பல்வேறு தரப்பிலும் கடு
-
மேட்டூர் அணை நிலவரம்
18 Aug 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு: இன்டியா கூட்டணி ஆலோசனை
18 Aug 2025புதுடெல்லி : துணை ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று இன்டியா கூட்டணி ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது.
-
நடவடிக்கை எடுக்கப்படும்: எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு சபாநாயகர் கடும் எச்சரிக்கை
18 Aug 2025டெல்லி : பாராளுமன்றத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சி எம்.பி.களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக உயர்வு
18 Aug 2025தருமபுரி, கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
-
பெண்களின் முன்னேற்றத்திற்கு தமிழக அரசு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது - தமிழக அரசு பெருமிதம்
18 Aug 2025சென்னை : தமிழ்நாடு, பெண்களின் முன்னேற்றத்தில் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
திரையுலகில் 50 ஆண்டு நிறைவு: நடிகர் ரஜினிகாந்துடன் பா.ஜ.க. தலைவர் சந்திப்பு
18 Aug 2025சென்னை : திரையுலகில் 50 ஆண்டுகள் நிறை ஆனதையொட்டி நடிகர் ரஜினிகாந்துடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
18 Aug 2025கர்நாடக : கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி வழியாக திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கும் என்பதால், காவ
-
ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கும் ஆர்.ஜே.சாய்
18 Aug 2025கனடா நாட்டின் டொராண்டோவில் உள்ள ஆர்.ஜே.சாய், தனது பிறந்த முன்னிட்டு இரண்டு படங்களை தயாரிக்கவுள்ளதாக அறிவித்துளார்.
-
கூலி திரைவிமர்சனம்
18 Aug 2025சன் பிச்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14-ஆம் தேதியன்று வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் படம் கூலி.
-
நிவின்பாலி - நயன்தாரா இணைந்து நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ்
18 Aug 2025நிவின்பாலி – நயன்தாரா ஜோடி மீண்டும் இணையும் இந்த படத்தை, அறிமுக இயக்குநர்கள் ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்தீப்குமார் எழுதி இயக்கியுள்ளனர்.
-
தீபாவளி முன்பதிவு: தென் மாவட்ட முக்கிய ரயில்களில் மூன்றரை நிமிடங்களில் விற்ற டிக்கெட்
18 Aug 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு முடிந்தது.
-
இந்தியா, பாக். வெள்ள பாதிப்புகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் - ஐ.நா. இரங்கல்
18 Aug 2025நியூயார்க், இந்தியா, பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஐ.நா. இரங்கல் தெரிவித்துள்ளது.
-
புனரமைப்பு முடிந்து அக்டோபரில் காந்தி நினைவு அருங்காட்சியகம் திறக்கப்படும் : அமைச்சர் சாமிநாதன் தகவல்
18 Aug 2025மதுரை : மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்பு பணிகள் நிறைவடையும் நிலையில், அக்டோபரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என அமைச்ச
-
த.வெ.க. மீது சீமான் விமர்சனம்
18 Aug 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகம் மீது சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார் ராஜ்நாத் சிங்
18 Aug 2025சென்னை : குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆரவு கோரினார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்.
-
துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து
18 Aug 2025சென்னை : துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
-
தெ.ஆ. அணியில் இளம் வீரர்
18 Aug 2025தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
-
நேட்டோவை மறந்து விடுங்கள்: ஜெலன்ஸ்கிக்கு ட்ரம்ப் ‘செக்’
18 Aug 2025வாஷிங்டன் : கிரிமியா, நேட்டோவை மறந்து விடுங்கள் என்று ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ராணுவ பயிற்சியில் படுகாயமடைந்ததால் மாற்றுத் திறனாளி: வழக்கு பதிவு செய்த உச்ச நீதிமன்றம்
18 Aug 2025புதுடெல்லி, ராணுவ பயிற்சியில் படுகாயமடைந்ததால் மாற்றுத்திறனாளி மீது வழக்கு பதிவு செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அலாஸ்கா பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தை
18 Aug 2025டெல்லி : அலாஸ்காவில் நடந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடியுடன் ரஷ்யா அதிபர் தொலைபேசியில் விளக்கமளித்தார்.
-
ஆசிய கோப்பை தொடர்: இந்திய அணியில் கே.எல்.ராகுல் இடம்பெற வாய்ப்பு உள்ளதா? - ஆகாஷ் சோப்ரா தனது கருத்து
18 Aug 2025மும்பை : ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியில் கே.எல்.ராகுல் இடம்பெற வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை கூறியுள்ளார்.