எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.12 - இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு- மீள் குடியமர்த்தல் பற்றி அதிபருடன் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாலும், இலங்கை தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ராஜபக்ஷே அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும், இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் அ.தி.மு.க. உறுப்பினர் ரபி பெர்னார்டு பங்கேற்க மாட்டார் என சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்தார். நேற்று முதல்வர் ஜெயலலிதா 110 வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதன் விபரம் வருமாறு:-
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களை அந்த நாட்டில் மறு குடியமர்த்துவதற்காகவும், மறுவாழ்வு அளிப்பதற்காகவும், இந்திய நாட்டு உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகளை பார்வையிடுவதற்காக, இம்மாதம் 16 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் 15 உறுப்பினர்கள் அடங்கிய இந்திய பாராளுமன்ற கூட்டுக் குழுவை இலங்கைக்கு மத்திய அரசு அனுப்ப முடிவு செய்து, அதில் அ.தி.மு.க. சார்பில் ஓர் உறுப்பினரை அனுப்புமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வில்லியம் ரபி பெர்னார்டு அனுப்ப நான் முடிவு செய்தேன்.
இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையினரான சிங்களர்களுக்கு இணையாக முழு உரிமை பெற்ற குடிமக்களாக நடத்தப்பட வேண்டும் என்பதிலும், போரினால் இடம்பெயர நேர்ந்த தமிழர்களை அவர்கள் முன்னர் வசித்த இடத்திலேயே மீள்குடியமர்த்த வேண்டும் என்பதிலும் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது. எனவே தான், கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், இலங்கை உள்நாட்டுப் போரின் போது, மனிதாபிமானமற்ற முறையில் பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என்ற பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும்; இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரை மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியப் பேரரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் இயற்ற நடவடிக்கை எடுத்தேன்.
இந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தினை எதிர்த்து மத்திய அரசு செயல்படுவதாக இருந்தது. அமெரிக்காவின் தீர்மானத்தினை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து கடிதங்கள் மூலம் வலியுறுத்தியதை அடுத்து, இறுதி வரை அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதில் ஒரு தெளிவற்ற நிலையைக் கடைபிடித்த மத்திய அரசு, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் கடுமையை குறைத்து, அதை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சிகளை எடுத்து, அதில் வெற்றியும் பெற்று அதன் பின் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது. இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை பெறுவதற்கு இது முதல் படியாக இருக்கும் என்பதால் அதற்கு நன்றி பாராட்டினேன்.
எனவே, இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் இலங்கைப் பயணம் அங்குள்ள தமிழர்களுக்கு பயனளிப்பதாக இருக்கும், அவர்களோடு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாகச் கலந்துரையாடினால் அது தமிழர்களுக்கு ஆறுதலாகவும், உண்மை நிலவரங்களை தெரிந்துகொள்ள உதவும் என்றும் நம்பினேன். அவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள மறுவாழ்வு நடவடிக்கைகளை பார்வையிட்டு, அவற்றில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டவும் அது உதவும் என்ற எண்ணத்தில் தான் அ.தி.மு.க. சார்பில் ஓர் உறுப்பினரை அனுப்ப நான் சம்மதித்தேன். இந்தச் சூழ்நிலையில், இலங்கை பயணம் குறித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல் தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் நேரிடையாக கலந்துரையாடவும், அவர்களின் உள்ளக் குமுறல்களை கேட்டு அறியவும் வாய்ப்பு இல்லாததாக அமைந்துள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்ஷே உட்பட சிங்கள அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடனான கூட்டங்கள் மற்றும் விருந்துகள் ஆகியவற்றிற்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரலை பார்க்கும் போது, இது ஏதோ சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் சுற்றுப் பயணம் போலவும், இது இலங்கை அரசால் அவர்களுக்கு சாதகமாக ஒரு கருத்து இந்தியாவில் எற்பட தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் போலவும் தான் தெரிகிறது. இது மட்டுமல்லாமல், இக்குழுவில் பத்திரிகையாளர்கள், மனித உரிமைகளில் ஆர்வம் உடையவர்கள், சுதந்திரமான கண்காணிப்பாளர்கள் யாரும் இடம் பெறாதது எனது ஐயத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்தக் குழுவின் பயணமும், ஏற்கெனவே தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன் விருந்துண்டு, பரிசுப் பொருட்களை பெற்றது போல் ஒரு கண்துடைப்பு ஏற்பாடாக ஆகிவிடும் என்று நான் கருதுகிறேன். ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் மென்மையான தீர்மானத்தைக் கூட இலங்கை அதிபர் ராஜபக்ஷே ஏற்றுக் கொள்ள முன்வராத நிலையிலும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை ராஜபக்ஷே அரசு தடுத்து நிறுத்தாததாலும், தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக சர்வதேச அணுமின் முகமையிடம் இலங்கை முறையிட உள்ளதாக செய்திகள் வந்துள்ளதன் அடிப்படையிலும், தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ராஜபக்ஷே அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும், இலங்கைத் தமிழர்கள் மீதான அணுகுமுறையில் இலங்கை அரசிடம் எந்தவிதமான மாற்றமும் தெரிய வராததாலும், இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு, மீள்குடியமர்த்தல் ஆகியவை பற்றியும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் நேரில் காணும் யதார்த்தங்களை பற்றியும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயுடன் விவாதம் செய்ய வாய்ப்பு தரப்படாமல் சுற்றுப் பயணத்தின் கடைசி நாளில் அதிபர் ராஜபக்ஷேவுடன் காலை விருந்துக் கூட்டம் என்பது மட்டும் பயணக் குறிப்பில் இடம் பெற்றுள்ளது ஏமாற்றமளிக்கிறது என்பதாலும், இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விலகிக் கொள்கிறது என்பதையும், இந்தக் கூட்டுக் குழுவில் அ.தி.மு.க.வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் ரபி பெர்னார்டு பங்கேற்க மாட்டார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 days ago |
-
9.5 பவுன் நகை மாயமான சம்பவம்: விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு: 6 போலீசார் சஸ்பெண்ட்
29 Jun 2025திருப்புவனம் : விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 6 போலீசாரை சஸ்பெண்ட் செய்து சிவகங்கை மாவட்ட எஸ்.பி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-06-2025.
29 Jun 2025 -
புதுச்சேரி பா.ஜ.க. தலைவராகிறார் ராமலிங்கம்: முறைப்படி இன்று அறிவிப்பு வெளியாகிறது
29 Jun 2025புதுச்சேரி : முன்னாள் நியமன எம்.எல்.ஏ. ராமலிங்கம் புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவராக இன்று முறைப்படி அறிவிக்கப்படுகிறார்.
-
கூட்டணி குறித்து இ.பி.எஸ். தெளிவுபடுத்த வேண்டும் : திருமாவளவன் பேட்டி
29 Jun 2025குன்னம் : கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி தான் தெளிவுபடுத்த வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.
-
போலீசாரால் மட்டுமே பலாத்கார சம்பவங்களை தடுக்க முடியாது : மத்திய பிரதேச டி.ஜி.பி., சொல்கிறார்
29 Jun 2025போபால் : '' மொபைல்போன் மற்றும் இணைய சேவை பயன்பாடு அதிகரிப்பால், பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
-
செக்மேட் செய்யமுடியாத எதிர்காலம்: பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து
29 Jun 2025சென்னை : உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ
-
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி; 7 பேர் மாயம்
29 Jun 2025டேராடூன் : உத்தரகாண்ட்டில் நிலச்சரிவில் சிக்கி 2 தொழிலாளர்கள் பலியாகினர்.
-
பள்ளி குழந்தைகளின் விஷயத்திலும் மத்திய அரசு அரசியல் செய்கிறது : அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு
29 Jun 2025கோவை : பள்ளி குழந்தைகளின் விஷயத்திலும் மத்திய அரசு அரசியல் செய்கிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
-
திருச்சி விமான நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
29 Jun 2025திருச்சி : திருச்சி விமான நிலையம் மற்றும் பல்வேறு விமான நிறுவனங்களுக்கும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்
-
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 8 தமிழக மீனவர்களையும் உடனே மீட்க வேண்டும் : மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
29 Jun 2025சென்னை : இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வரவும், மீனவர்கள் பிரச்சினைகளைக் கையாள்வத
-
10 ஆண்டுகள் நிறைவு: சென்னை மெட்ரோவில் இதுவரை 39 கோடி பேர் பயணம்
29 Jun 2025சென்னை : சென்னை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுவரை 39 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.
-
தற்கொலைப் படைத் தாக்குதல்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு
29 Jun 2025புதுடெல்லி : பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் என்ற பாகிஸ்தானின் குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
-
பூம்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு அமைச்சர் தேனீர் விருந்து
29 Jun 2025திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
-
ரத யாத்திரையில் 3 பக்தர்கள் பலி: மன்னிப்பு கோரிய முதல்வர் மாஞ்சி
29 Jun 2025புவனேஸ்வர் : ரத யாத்திரையில் 3 பக்தர்கள் பலியான சம்பவத்திற்கு ஒடிசா முதல்வர் மாஞ்சி மன்னிப்பு கோரியுள்ளார்.
-
எமர்ஜென்சியை எதிர்த்து போராடியவர்களை நினைவில் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி
29 Jun 2025புதுடில்லி : எமர்ஜென்சியை துணிச்சலுடன் எதிர்த்து போராடியவர்களை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று, 'மன் கி பாத்' உரையில் பிரதமர் மோடி பேசினார்.
-
தவறான சமூக ஊடக பதிவுகளுக்கு எதிர்வினை ஆற்ற வேண்டாம் : நிர்வாகிகளுக்கு ராமதாஸ் உத்தரவு
29 Jun 2025திண்டிவனம் : சமூக ஊடகங்களில் நம்மை பற்றி தவறாக பதிவிட்டாலும் எதிர்வினை ஆற்ற வேண்டாம் என நிர்வாகிகளுக்கு ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
-
ஏலகிரி மலையில் கோடை விழா: 2 தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
29 Jun 2025திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் கோடை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு விழா,இரா.இராஜேந்திரன் பங்கேற்றனர்.
-
விடுமுறை தினம் எதிரொலி: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் நின்று தரிசனம்
29 Jun 2025திருச்செந்தூர் : விடுமுறை தினமான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
-
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம்: அதிபர் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தல்
29 Jun 2025வாஷிங்டன் : இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
மதச்சார்பின்மை வார்த்தை நீக்கம்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் கருத்துக்கு துணை ஜனாதிபதி தன்கர் ஆதரவு
29 Jun 2025புதுடில்லி : இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இருந்து சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.
-
ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம்: 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்
29 Jun 2025சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில், நேற்று சென்னை, எழும்பூரில் உள்ள தலைமைக் கழக
-
அமெரிக்கா சென்ற இந்திய இளம்பெண் மாயம்: போலீசார் தீவிர விசாரணை
29 Jun 2025வாஷிங்டன் : திருமணம் செய்து கொள்வதற்காக என்று கூறி, அமெரிக்கா சென்ற 24 வயது இளம்பெண் மாயமானது குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை பாம்புகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல்
29 Jun 2025மும்பை : தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
-
விமான விபத்து: 4 பேர் உயிரிழப்பு
29 Jun 2025மாஸ்கோ : ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் கொலமா மாவட்டத்தில் நேற்று சிறிய ரக விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 4 பேர் பயணித்தனர்.
-
ரஷ்யா வான்வழி தாக்குதலில் விமானி உயிரிழப்பு: உக்ரைன்
29 Jun 2025கீவ் : ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலின் போது உக்ரைன் விமானி ஒருவர் கொல்லப்பட்டதாகவும், எப்-16 போர் விமானம் ஒன்று காணாமல் போனதாகவும் கீவ் ராணுவம் தெரிவித்துள்