எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,ஏப்.7 - பரமக்குடியில் சொத்து தகராறில் கூலிப்படையினர் மூலம் பா.ஜ.க. பிரமுகர் பைப்வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ்சுவரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கதிரேசன் என்பவரின் மகன் முருகன்(வயது46). முன்னாள் பா.ஜ.க. கவுன்சிலரான இவர் வாஜ்பாய் மன்ற தலைவராக இருந்து வந்தார். தேங்காய் கடை வைத்து நடத்திவந்த இவர் கடந்த 19-ந் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் பைப்வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் ராமநாதபுரம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.ராமசுப்பிரமணி, போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோர் உத்தரவின் பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் தலைமையில் தனிபோலீஸ் படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் முருகன் கொலைசம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்திவந்தனர். இந்த விசாரணையில் சொத்து பிரச்சனை தொடர்பாக கொலை நடந்துள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர புலன்விசாரணை நடத்தி தற்போது சென்னை டி.நகரில் வசித்துவரும் பரமக்குடி நாகூர்கனி என்பவரின் மகன் ராஜாமுகம்மது(58), பரமக்குடி திருவள்ளுவர் நகர் முத்துவயல் முத்துச்சாமி மகன் மனோகரன்(41), மதுரை காயிதேமில்லத்நகர் சுல்த்தான் அலாவுதீன் மகன் வாழைக்காய் என்ற ரபீக்ராஜா(35), மதுரை தாசில்தார் பள்ளிவாசல் தெரு அகம்மது என்பவரின் மகன் சாகுல்ஹமீது(37) ஆகிய 4பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- கொலை செய்யப்பட்ட முருகனின் தாத்தா சிவஞானம் செட்டியாருக்கு வைகை நகர் பகுதியில் 6ஏக்கர் நிலம் இருந்துள்ளது. அவர் இறந்தபின்னர் மகன் கதிரேசன் செட்டியார் அந்த நிலத்தை பராமரித்து வந்துள்ளார். அப்போது, பரமக்குடி வேந்தோனி கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டி என்ற ராஜாமுகம்மது மேற்கண்ட சொத்தை தனது அக்காள் மகன் மனோகரன் பெயரில் போலி பத்திரம் தயாரித்து சொந்தம் கொண்டாடி வந்துள்ளார். இதுதொடர்பாக தொடாரப்பட்ட வழக்கில் கதிரேசன் செட்டியாருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜாமுகம்மது கதிரேசன் செட்டியார் குடும்பத்தினர் மீது விரோதம் கொண்டு இருந்துள்ளார். மேலும், மேற்கண்ட சொத்தினை கதிரேசன் செட்டியாரின் மகன்களான கொலைசெய்யப்பட்ட மருகன் மற்றும் அவரின் தம்பி சிவக்குமார் ஆகியோர் விற்க முயலும்போதெல்லாம் ராஜாமுகம்மது மிரட்டல் விடுத்து வந்ததோடு, வாங்குபவர்களையும் தடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 14-ந் தேதி மேற்கண்ட சொத்தினை முருகன், சிவக்குமார் ஆகியோர் மதுரை மேலூரை சேர்ந்த ராஜாரபீக் என்ற ராஜாபாய் என்பவரிடம் ரூ.8கோடி அளவிற்கு விற்பனை செய்துள்ளனர். இதுபற்றி அறிந்த ராஜாமுகம்மது இதுதொடர்பாக பிரச்சனை ஏற்படுத்தாமல் இருக்க தனக்கு ரூ.ஒரு கோடியே 50லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு முருகன், சிவக்குமார் ஆகியோர் ரூ.85லட்சம் கொடுத்துள்ளனர். கேட்ட தொகை கிடைக்காததால் ஆத்திரமடைந்த ராஜாமுகம்மது தனது அக்கா மகன் மனோகரன் என்பவருடன் சேர்ந்து மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் மூலம் முருகனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். இதன்படி மேற்படி மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் வாழைக்காய் என்ற ரபீக்ராஜா, சாகுல்ஹமீது மற்றும் இன்னொருவர் மூலம் கொலை திட்டத்தை கனகச்சிதமாக நிறைவேற்றி உள்ளனர். இதற்காக ராஜாமுகம்மது கூலிப்படையினருக்கு ரூ.2லட்சம் வழங்கி உள்ளார். கொலை சம்பவம் நடந்ததும் இதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது ராஜாமுகம்மதுவின் பிரச்சனை தெரியவந்தது. இதுதொடர்பாக முதலில் சிக்கிய அவரின் மருமகன் மனோகரனை பிடித்து விசாரித்தபோது மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் மேற்கண்ட 4பேரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் கூலிப்படையினரின் மூளையாக செயல்பட்ட மதுரையை சேர்ந்த கூலிப்படைதலைவன் ஒருவனை தேடிவருகிறோம். இவ்வாறு கூறினார். கைது செய்யப்பட்ட 4பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
காட்டிக்கொடுத்த ரெயில் டிக்கெட்:
முருகனை கொலை செய்ய கூலிப்படையினர் மூலம் சதித்திட்டம் போட்ட ராஜாமுகம்மது தன்மீது போலீசாருக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக சென்னையில் இருப்பதுபோன்று காட்டுவதற்கு தன்பெயரில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். போலீசாரின் இந்த விசாரணையில் அவர் சம்பவம் நடந்தபோது சென்னையில் இல்லை என்பதும், முன்பதிவு செய்த ரெயிலில் பயணம் செய்யவில்லை என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசாரின் பிடியில் ராஜாமுகம்மது வசமாக சிக்கி உள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள வாழைக்காய் என்ற ரபீக்ராஜா பைப் வெடிகுண்டு வீசி கொலை செய்வதில் கைதேர்ந்தவன். மேலும், பிரபல பைப் வெடிகுண்டு குற்றவாளி போலீஸ் பகுர்தீன் என்பவருடன் சேர்ந்து பல்வேறு குற்றசம்பவங்களில் ்டுபட்டுள்ளார். கூலிப்படையினர் முருகனை கொலைசெய்ய வீசிய 3பைப் வெடிகுண்டுகளில் ஒன்று மட்டுமே வெடித்துள்ளது. வெடிக்காத 2பைப் வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
அடுத்தடுத்த இரு போட்டிகளில் சதம் விளாசிய வீரர்களில் விராட் கோலி முதலிடம்
04 Dec 2025ராய்ப்பூர், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அடுத்தடுத்த இரு போட்டிகளில் சதம் விளாசிய வீரர்களில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
-
பா.ம.க.வின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து
04 Dec 2025டெல்லி, அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என பா.ம.க. வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவு சரியானது: மதுரை உயர்நீதிமன்ற கிளை
04 Dec 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.
-
சையத் முஷ்டாக் அலி டி-20: மும்பை அணிக்காக களம் காண்கிறார் ரோகித் சர்மா.!
04 Dec 2025அகமதாபாத், சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கட்சிக்கு உரிமை கோரி வழக்கு: நீதிமன்றத்தில் ராமதாஸுக்கு வெற்றி; டெல்லியில் ஜி.கே.மணி பேட்டி
04 Dec 2025சென்னை, கட்சி உரிமை கோரிய வழக்கில் நீதிமன்றத்தில் ராமதாஸ்சுக்கு வெற்றி என்று ஜி.கே.மணி தெரிவித்தார்.
-
உக்ரைன் போர் விவகாரம் தொடர்பான அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது - அதிபர் புதின்
04 Dec 2025மாஸ்கோ, உக்ரைன் போர் விவகாரத்தில் அமெரிக்க அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்கப்பட்டதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-12-2025.
05 Dec 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-12-2025.
05 Dec 2025 -
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
05 Dec 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
-
உலகுக்கு பன்முக பாதையை காட்டியவர்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் ரஷ்ய அதிபர் புடின் புகழாரம்
05 Dec 2025புதுடெல்லி : நமது பூமியில், அகிம்சை, உண்மை ஆகிய இரண்டின் மூலம் காந்தி விலை மதிப்பிடமுடியாத பங்களிப்பை செய்திருக்கிறார்.
-
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி மண்டல கூட்டம்: துணை முதல்வர் உதயநிதி திடீர் ஆய்வு
05 Dec 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி மண்டல கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
-
ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கான இலவச இ-விசா வழங்கும் திட்டம் : புடின் முன்னிலையில் மோடி அறிவிப்பு
05 Dec 2025புதுடெல்லி : ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு, 30 நாட்கள் இலவச இ-விசா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என ரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில், பிரதமர் மோடி அறிவித்தார்.
-
தீபத்திருவிழா: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நெய் தீபங்கள் ஏற்றி வழிபாடு
05 Dec 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபத்திருவிழாவை முன்னிட்டு நெய் தீபங்கள் ஏற்றி வழிபாடு நடந்தது.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: த.வெ.க. தலைவர் விஜய் உடன் காங்கிரஸ் நிர்வாகி திடீர சந்திப்பு
05 Dec 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி திடீரென சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
குடியரசுத் தலைவர் மாளிகையில் ரஷ்ய அதிபருக்கு ராணுவ அணிவகுப்புடன் வரவேற்பு
05 Dec 2025டெல்லி, புதினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3.79 கோடி
05 Dec 2025திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 79 லட்சம் கிடைத்தது.
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது விரைவில் விசாரணை : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அறிவிப்பு
05 Dec 2025புதுடெல்லி : திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
-
கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 சரிவு
05 Dec 2025சென்னை : சென்னையில் நேற்று (டிச.,05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்திற்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.20 குறைந்து
-
அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் காங்கோ, ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து
05 Dec 2025வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்னிலையில் காங்கோ, ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
-
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம்: வழக்கு விசாரணையை டிச. 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் மதுரை கிளை
05 Dec 2025மதுரை : மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய மதுரை கிளை உத்தரவு.
-
காஞ்சிபுரத்தில் ரூ.1,003 கோடியில் புதிய ஆலை திறப்பு: மின்னணு பொருட்களின் தலைநகரம் தமிழ்நாடு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
05 Dec 2025சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கம், சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.1,003 கோடி முதலீட்டில் புதிதாக 840 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகைியல் மின்னணு சாதனங்க
-
சுமார் 400 இண்டிகோ விமானங்களின் சேவை தொடர்ந்து 4-வது நாளாக ரத்து: பயணிகள் கடும் அவதி
05 Dec 2025மும்பை, இண்டிகோ விமானம் 4-வது நாளாக ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
-
வீடு, கார் கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்கலாம் - ரிசர்வ் வங்கி தகவல்
05 Dec 2025டெல்லி : வீடு, கார் கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்கலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: பார்லி., இரு அவைகளிலும் தி.மு.க. எம்.பி.க்கள் அமளி - வெளிநடப்பு
05 Dec 2025புதுடில்லி : திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.
-
புதினுக்கு பகவத் கீதையை பரிசளித்தார் பிரதமர் மோடி
05 Dec 2025டெல்லி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பிரதமர் மோடி பகவத் கீதையை பரிசாக அளித்தார்.


