முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்வாங்கியது மத்திய அரசு ஊழல் தடுப்பு அவசரச் சட்டம்

திங்கட்கிழமை, 3 மார்ச் 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச்.4 - காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியதுபோல், ஊழல் எதிர்ப்பு மசோதாக்களுக்குப் பதிலான அவசரச்சட்டம் கொண்டு வரவேண்டாம் என்று மத்திய அமைச்சரவை முடிவேடுத்துள்ளது. தேர்தல் வர உள்ள நிலையில் அவசரச்சட்டத்துக்கு கையெழுத்திடுவதுறகு குடியரசு தலைவர் தயக்கம் காட்டியதைத் தொடர்ந்து, அரசு இந்த விஷயத்தில் பின்வாங்கி விட்டதாகத் தெரிய வருகிறது.

ஊழல் எதிர்ப்பு மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கடந்த கூட்டத்தொடருல் நிறைவேற்றி விட மத்திய அரசு தீவிரமாக முயர்சித்தது. ஊழல் எதிர்ப்பில் தாங்களே வல்லவர்கள் என்று அரவிந்த் கேஜ்ரிவாலும், நரேந்திர மோடியும் கூறிவரும் நிலையில், தானும் ஊழல் சளைத்த ஆள் திடையாது என்று கூறிக்கொளவதற்காக காங்கிரஸ் எடுத்த கடைசிகட்ட முயற்சி இதுவாகும். எனினும் தொடர் அமளி உள்ளிட்ட காரணங்களால் அவற்றை நிறையேற்ற முடியவில்லை.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்து விட்ட சூழ்நிலையில், அவசரச்சட்டங்கள் மூலம் ஊழல் எதிர்ப்பு மசோதாவுக்குப் பதிலாக அவசரச்சட்டம் கொண்டுவரலாம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை கூறினார். இது தொடர்ந்து டெல்லியில் மன்மோகன்சிங் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது ஊழல் எதிர்ப்புக்கைன அவசரச்சட்டத்தை கொண்டுவர் வோண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஊழல், எதிர்ப்பு அவசரச்சட்டங்களை கொண்டுவருவது குறித்து குடியசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில் சிபலும், உள்துறை அமைச்சர் ஷிண்டேவும் எடுத்து கூறினர். எனினும், மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகுவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அவசரச்சட்டத்தில் கையெழுத்திடுவதற்கு பிரணாப் தயக்கத்தை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இதனுடையே மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஜாட்சமூகதினருக்கு இடஒதுக்கிடு அளிப்பது, ஆந்திர மாநில மறுசீரமாப்பு மசோதாவில் திருத்தங்கள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி 13 மாநிலங்களைக் கொண்டிருக்கும் சீமாந்திராவுக்கு 5 ஆண்டுகளுக்கு சிறப்பு அநஅதஸ்த்தை வழங்குமாறு திட்டக் கமிஷனுக்கு அமைச்சரவை உத்தரவிட்டது. ஊழல் தடுப்புக்கு அவரச்சட்டம் கொண்டுவருவதற்கு எதிராக மத்திய அமைச்சரவை கடந்த 3 தினங்களில் இரண்டாவது முறையாக முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்