முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் புதிய தங்க ரதம் வெள்ளோட்டம்

செவ்வாய்க்கிழமை, 9 செப்டம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருமலை, செப்.10 - திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம் வருகிற 21-ஆம் தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் 4-ஆம் தேதி வரை நடக்கும் விழாவில் 1-ஆம் தேதி தங்க ரத பவனி நடைபெறுகிறது.

இந்த ஆண்டுபிரமோற்சவத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தங்க ரதத்தில் மலையப்பசாமி உலா வருகிறார். புதிய தங்க ரதம் தயார் நிலையில் உள்ளது. பிரேக் போட்டால் நிற்கும் வகையில் ஹைட்ராலிக் முறையில் இதன் சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வெள்ளோட்டம் நடந்தது. சக்கரத்தின் செயல்பாடுகளை என்ஜினீயர்கள் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் ஆந்திர முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு திருமலையில் தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பக்தர்களுக்கு ஏதாவது குறைகள் இருக்கிறதா? என கேட்டார்.

தர்ம தரிசனம் செய்யும் சாதாரண பக்தர்களுக்கே முன்னுரிமை வழஹ்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்