எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப். 20 – முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி கட்டுமான தொழிலுக்கு இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்க நடவடிக்கைகைள சென்னைக் குடிநீர் வாரியம் எடுத்துள்ளது.
இதற்காக பெருங்குடியில் 56 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
நாள் ஒன்றுக்கு 6 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் நீர் நிரப்பும் இடத்தில் 1000 லிட்டருக்கு 20 ரூபாய் என செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னைக் குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.இந்த தண்ணீர் தரமானது; கட்டுமான தொழிலுக்கு மிகவும் சிறந்தது.
இது குறித்து சென்னைக் குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–
தமிழ்நாடு அரசு உபயோகப்படுத்தப்பட்ட நீரை மறு சுழற்சி செய்து குடிநீர் அல்லாத பிற உபயோகங்களுக்கு பயன் படுத்துவதில் முன்னுரிமை அளிக்கிறது. சென்னைக் குடிநீர் வாரியத்தால் ஏற்கனவே தொழிற்சாலைகளுக்கும், சாலையோர பூங்காக்களுக்கும், மரங்கள் வளர்ப்பதற்கும் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்கி வருகிறது. மேலும் ஒரு முயற்சியாக கட்டுமான தொழிலுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் அதிகமாக பயன்படுத்துகிற ஒரு தொழிலாக கட்டுமான தொழில் விளங்குகிறது. அதிக அளவில் நீர், கான்கிரிட் கலப்பதற்கும், சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. சென்னைக் குடிநீர் வாரியம் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுபவர்கள் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்ததில், நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் கட்டுமானத் தொழிலுக்கு தேவைபடுவதாக கண்டறிந்தது. இதில் 6லட்சம் லிட்டர் தண்ணீர் தகவல் தொழில் நுட்ப சாலையில் கட்டப்பட்டு வரும் கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள், குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களுக்கு தேவைப்படுகின்றது. இந்நிறுவனங்கள், தண்ணீர் தேவைக்காக தொலை தூரத்திலிருந்து எடுக்கப்பட்டு வரும் தனியார் தண்ணீர் வழங்கும் நிறுவனங்களை சார்ந்தே உள்ளன. மேலும், இந்தத் தண்ணீருக்காக மிக அதிகமான தொகையை கட்டணமாக செலுத்துகின்றன. இந்த தண்ணீர் இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தரம் கூட இருப்பதில்லை.
அதிக அளவு நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு இந்நிறுவனங்களின் குடிநீர் அல்லாத நீர் தேவை மற்றும் கட்டுமான பணிக்கான நீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுவதால், பொது மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது. இதற்கான ஒரு மாற்று ஏற்பாடாக இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் கட்டுமான தொழில் மற்றும் குடிநீரல்லாத பிற உபயோகங்களுக்குப் பயன்படுத்த மாற்று நீராதாரம் காண்பது மிகவும் அவசியமாகிறது. எனவே, சென்னைக் குடிநீர் வாரியம் இரண்டாம் நிலை சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரை, கட்டுமான தொழிலில் கான்கிரிட் தயாரிப்பு, கான்கிரிட் நிலைப்படுத்துதல், சுத்தப்படுத்துதல் மற்றும் இதர நிறுவனங்களில் குடிநீர் அல்லாத பயன்பாட்டிற்கான நீராகவும் பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி, சென்னைக் குடிநீர் வாரியம், இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரை, கூடுதல் சுத்திகரிப்பு செய்து, நாளொன்றுக்கு 6 லட்சம் லிட்டர் சிறந்த தரம் வாய்ந்த தண்ணீராக மாற்றும் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவி வருகின்றது. சென்னைக் குடிநீர் வாரியம், கட்டுமான நிறுவனங்கள், கட்டுமான தொழில் முதலீட்டாளர்களை கலந்தாலோசித்ததில், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருக்கு அதிக வரவேற்புள்ளது. மேலும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பெற ஆவலாக உள்ளனர்.
தற்போது, பெருங்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீராதராரம் உள்ளது. சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றிற்கு தேவையான இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்கி வருகிறது. இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீர் இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவன எண். 456ன்படி கட்டுமான தொழிலுக்கு ஏற்றதாக இருப்பினும், மனிதர்களால் கையாளப்படப் போவதால் கூடுதல் சுத்திகரிப்பு செய்து வழங்க உத்தேசித்துள்ளது.
பெருங்குடியில் நிறுவப்படவுள்ள கூடுதல் சுத்திகரிப்பு நிலையம், ஒரு மணி நேரத்திற்கு 50 கன மீட்டர் என்ற அளவில் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரை பெற்று கட்டுமான தொழில் உபயோகத்திற்கு நாளொன்றுக்கு 6 லட்சம் லிட்டர் சுத்திகரிப்பு செய்யும் திறன் கொண்டது. இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரை கட்டுமான தொழில்களுக்காக மறுசுழற்சி செய்வதற்கு முன்பாக கீழ்கண்ட முறையிலான மேம்படுத்தப்பட்ட செயல்முறை அமைப்புகள் நிறுவப்பட உள்ளது.
பெருங்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீர், சேமிப்பு தொட்டியில் இருந்து நீர் அழுத்த மணல் வடிகட்டிக்கு இரண்டு உந்து யந்திரம் மூலம் செலுத்தப்படுகிறது.இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரில் மீதமுள்ள கரையும் நிலையில் உள்ள மற்றும் கரையாத நிலையில் மிதக்கும் நிலையில் உள்ள நுண்துகள்கள் மற்றும் கன உலோக கழிவுகள் நீர் துரித மணல் வடிகட்டியில் நீக்கப்படுகிறது.நிலை நிறுத்தப்பட்ட கரித்தூள் வடிகட்டி ஒன்று நிறுவப்பட்டு நீரில் உள்ள வண்ணம் மற்றும் துர்நாற்றம் நீக்கப்படுகிறது. கரித்தூள் அளவு 1.30 மீட்டர் உயரம் ஆகும்.சுத்திகரிக்கப்பட்ட நீரில் உள்ள நுண்ணுயிர் கிருமிகளை அகற்ற தேவையான திரவ நிலை குளோரின் கலவையை செலுத்தி மேலும் சுத்திகரிக்கப்படுகிறது.
1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட நீர் சேமிப்பு தொட்டி அமைக்கப்பட்டு, கட்டுமான தொழிலுக்கு தண்ணீர் லாரிகளில் வழங்கப்படும். தண்ணீர் தேவைப்படுபவர்கள் சென்னைக் குடிநீர் வாரிய பெருங்குடி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.…
ரூ.56.6 லட்சம் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 6 லட்சம் லிட்டர் திறன் கொண்ட மேம்படுத்தப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் பெருங்குடியில் அமைக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டப்பணி வரும் நவம்பர் மாதத்தில் முடிவுறும் என்று எதிர்பார்க்ப்படுகிறது. சாதாரண ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்தி உருவாகும் கான்கிரிட் உறுதியை விட கூடுதல் சுத்திகரிக்கப்பட்ட நீரினால் உருவாகும் கான்கிரிட்டின் உறுதி அதிகளவாகும். கட்டுமான பணிக்காக தங்கு தடையின்றி கூடுதல் சுத்திகரிக்கப்பட்ட நீர் கிடைப்பது உறுதி செய்யப்படும். தற்சமயம் கட்டுமான தொழிலகங்கள் மழைநீர் சேகரிக்கும் நீர் நிலைகள் மற்றும், ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெற்று உபயோகிக்கும் நீர் சேமிக்கப்பட்டு அதே அளவு நீரினை நீராதாரமாக பெற இயலும்.
சுத்திகரிக்கப்பட்ட நீரின் மூலம் வருவாய் ஈட்டப்பட்டு இந்த வருவாய் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பராமரிப்பு செலவினை ஈடுகட்ட பயன்படுத்தப்படும். குடியிருப்புகளுக்கான குடிநீர் ஆதாரம் பெருகும்.
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், நீர் நிரப்பும் இடத்தில் ஒவ்வொரு 1000 லிட்டருக்கு ரூ.20 என வழங்க சென்னைக் குடிநீர் வாரியம் உத்தேசித்துள்ளது. நீர் கொண்டு செல்லும் தண்ணீர் லாரி, மற்றும் அதற்கான போக்குவரத்து செலவு பயனாளிகளின் பொறுப்பாகும். இந்த தண்ணீரைப் பெறுவதற்கு கட்டுமான நிறுவனங்களின் ஒப்பந்ததாரர்கள் தங்களது முன்னுரிமையை தற்போது சென்னைக் குடிநீர் வாரியத்தில் பதிவு செய்துக் கொள்ளலாம்.
இவ்வாறு சென்னைக் குடிநீர் வாரிய செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.