முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியுடன் இலவசமாக செல்பி எடுத்துக் கொள்ளலாம்: மத்திய அமைச்சர்

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

பிரதமர் மோடியுடன் இலவசமாக செல்பி எடுத்துக் கொள்ளலாம்: மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் அறிவிப்பு
புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடியுடன் இலவசமாக செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள் நிதி திரட்டுவதற்காக பல்வேறு உத்திகளை கையாள்வது வழக்கம். இதில் சுற்று வித்தியாசமாக கடந்த முறை ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடன் விருந்து சாப்பிட்ட விரும்புவர்களிடம் ரூ.25 ஆயிரம் கட்டணம் வசூலித்தார். தற்போது டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது.

கட்சிக்காக தேர்தல் நிதி திரட்டுவதற்காக ஆம் ஆத்மி முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக ரூ.20 ஆயிரம் கொடுத்தால் கெஜ்ரிவாலுடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தது. இதன் மூலம் வர்த்தகர்களிடம் ஆம் ஆத்மியின் முயற்சிக்கு பலன் கிடைத்தது. சுமார் ரூ.60 லட்சம் நிதியையும் திரட்டியது. இந்நிலையில் இதற்கு பதிலடியாக பாஜ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் அனந்தகுமார் கூறுகையில், பிரதமர் மோடியுடன் யார் வேண்டுமானாலும் இலவசமாக செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம், அது மட்டுமின்றி இந்த வசதிக்காக டெல்லியில் பாஜ சார்பில் 2500 புகைப்பட மையங்களும் அமைக்கப்படுகின்றன. இங்கு வந்து பிரதமர் மோடியுடன் இருப்பது போன்ற செல்பி புகைப்படங்களை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து