எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அடியெல்ட் - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது வங்கதேசம். நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதலில் விளையாடிய வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 275 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியோ 48.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
உலக கோப்பை போட்டியின் 33வது லீக் ஆட்டத்தில் நேற்று இங்கிலாந்தும், வங்கதேசமும் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது.வங்கதேசத்தின் தொடக்க வீரர்களாக தமீம் இக்பாலும் காயெஸும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே வங்கதேசத்தை அதிர்ச்சியடைய வைத்தது இங்கிலாந்து.முதல் ஓவரின் 4வது பந்தில் காயெஸ் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். 2 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் அவர் அவுட் ஆனார். இதேபோல் தமீம் இக்பால் 2.1வது ஓவரில் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். 2.1 ஓவரில் 8 ரன்களே எடுக்கப்பட்ட நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது வங்கதேசம்.
இருப்பினும் பின்னர் வந்த சவும்ய சர்க்கார், மக்மதுல்லா ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சவும்ய சர்க்கார் 52 பந்துகளில் 40 ரன்களை எடுத்து அவுட் ஆனார். ஷகிப் அல் ஹசன் 6 பந்துகளில் 2 ரன்களை எடுத்து அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து மக்மதுல்லா- முஷ்பிகுர் ரஹிம் ஜோடி இணைந்து நிதானமான நின்று ரன்களைக் குவித்தனர். 131 பந்துகளில் சதத்தை எட்டினார் மக்மதுல்லா. இது ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்த முதல் சதம். அத்துடன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சதமடித்த முதலாவது வங்கதேச வீரர் என்ற சாதனையையும் படைத்தார். மொத்தம் 138 பந்துகளில் 103 ரன்களை எடுத்த நிலையில் மக்மதுல்லா அவுட் ஆனார்.
முஷ்பிகுர் ரஹிம் சதத்தை நோக்கி சென்ற நிலையில் 89 ரன்களில் அவுட் ஆனார். அவர் 77 பந்துகளில் 89 ரன்களைக் குவித்தார். இவர்களுக்குப் பின்னர் சபீர் ரகுமான் வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 12 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் அவர் அவுட் ஆனார். 50 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்களைக் குவித்தது.
இங்கிலாந்து அணி 276 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. அதன் தொடக்க வீரர்களாக மொயின் அலி, பெல் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்தில் அதிரடியாக ரன்களை குவிக்கத் தொடங்கினர்.7.2 ஓவரில் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 43 ஆக இருந்த போது மொயின் அலி ரன் அவுட் ஆனார். அவர் 21 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பின்னர் பெல்லுடன் ஹேல்ஸ் கை கோர்த்தார். ஹேல்ஸ் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 34 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த கையோடு நடையைக் கட்டினார்.
அப்போது 19.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி 97 ரன்களைக் குவித்திருந்தது.களத்தில் இருந்த பெல் 82 பந்துகளில் 63 ரன்களை குவித்து அவுட் ஆனார்.. ரூட் 47 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார். 35.4 ஓவர்களில் இங்கிலாந்து 163 ரன்களை சேர்த்திருந்தது. பட்லர்-வோக்ஸ் ஜோடி நிலைத்து ஆடி ரன்களைக் குவித்துக் கொண்டிருந்தது. பட்லர் அரை சதத்தைக் கடந்து 65 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்த பந்திலேயே வந்த வேகத்தில் ஜோர்டான் அவுட் ஆனார்.
களத்தில் நின்றிருந்த வோக்ஸுடன் கை கோர்க்க கடைசி வரிசை வீரர்கள் தவறியதால் இங்கிலாந்து அணி பெரும் போராட்டத்துக்குள் தள்ளப்பட்டது.
45.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் என்ற நிலையில் இருந்தது இங்கிலாந்து. கடைசி வரிசை வீரர்களான ப்ராட், ஆண்டர்சன் ஆகியோர் வந்த வேகத்தில் நடையைக் கட்டியதால் 48.3 ஓவரில் இங்கிலாந்து அணியால் 260 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு நுழைந்தது. நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்ததால் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தே இங்கிலாந்து வெளியேறும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: தர்காவுக்கு சொந்தமான இடத்தில் தூண் உள்ளது : ஐகோர்ட் கிளையில் வக்பு வாரியம் வாதம்
16 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் தூண் உள்ளது என்று ஐகோர்ட்டில் வக்பு வாரியம் வாதம் முன் வைத்தது.
-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க முயற்சி மத்திய அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு
16 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க மத்தி அரசு முயற்சிக்கிறது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்தது
16 Dec 2025சென்னை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது.
-
எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்குவதற்காக மத்திய முகமைகளை தவறாக பயன்படுத்துவது அம்பலம்: மத்திய பா.ஜ.க. அரசுக்கு மீது முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
16 Dec 2025சென்னை, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி
-
அங்கன்வாடி பணியாளர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும்: சோனியா காந்தி
16 Dec 2025புதுடெல்லி, அங்கன்வாடி பணியாளர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்தார்.
-
இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்தம்: ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்து
16 Dec 2025மாஸ்கோ, இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்து
-
வரும் ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டசபை கூடுகிறது: பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
16 Dec 2025சென்னை, தமிழக சட்டசபை ஒவ்வொரு ஆண்டும் முதல் முறையாக கூடும்போது, அதில் கவர்னர் உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது.
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் நானோ தொழில்நுட்ப மாநாடு: போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு
16 Dec 2025வேலூர், வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆகிய
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட 58 லட்சம் பேர் விவரங்கள் வெளியீடு: ஜன.15 வரை திருத்தங்களைக் கோர அவகாசம்
16 Dec 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட 58 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர், விவரங்களை தேர்தல்
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வைகோ, சண்முகம் சந்திப்பு
16 Dec 2025சென்னை, சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் சண்முகம் சந்தித்து பேசினர்.
-
மகாத்மா காந்தி மீதான வெறுப்பால் 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கிறார் பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு
16 Dec 2025டெல்லி, மகாத்மா காந்தி மீதான வெறுப்பால் 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கிறார் பிரதமர் மோடி என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
ஈரோட்டில் விஜய் பிரசார பொதுகூட்டம்: மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
16 Dec 2025ஈரோடு, ஈரோட்டில் விஜய் பிரசார பொதுகூட்டம் மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில் சென்னை அருகில் ரூ.39.20 கோடி மதிப்பில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
16 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (16.12.2025) பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சென்னையில் நடைபெ
-
ஆஷஸ் 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
16 Dec 2025அடிலெய்டு, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் 3-வது டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா வெற்றி....
-
100 நாள் வேலைத்திட்ட பெயரை மாற்ற பார்லி., மக்களவையில் புதிய மசோதா அறிமுகம்: திரும்பப்பெற தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
16 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை ‘விபி-ஜி ஆர்.ஏ.எம்.ஜி’ என மாற்றும் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
-
ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் ஏதும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
16 Dec 2025சென்னை, ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
-
‘பெண்டானில்’ ஒரு பேரழிவு ஆயுதம்: முக்கிய உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து
16 Dec 2025வாஷிங்டன், பெண்டானிலை ஒரு பேரழிவு ஆயுதமாக வகைப்படுத்தும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
-
ஜோர்டான் முதலீட்டாளர்களுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு
16 Dec 2025அம்மான், ஜோர்டான் முதலீட்டாளர்களுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஏற்க மறுப்பு : விசாரணையை தொடர டெல்லி நீதிமன்றம் அறிவுறுத்தல்
16 Dec 2025புது டெல்லி, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை
-
ஜோர்டான் பட்டத்து இளவரசருடன் காரில் பயணம் செய்த பிரதமர் மோடி
16 Dec 2025புதுடெல்லி, ஜோர்டான் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பட்டத்து இளவரசர் பின் அல் ஹுசைன் இரண்டாம் அப்துல்லா அருட்காட்சியகத்திற்கு ஒரே காரில் அழைத்து சென்றார்.
-
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவரை நேரில் சென்று விசாரித்தார் ஆஸி., பிரதமர் அப்பனீஸ்
16 Dec 2025சிட்னி, சிட்னியில் யூதர்கள் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கியபோது குண்டடிப்பட்ட அகமத்-அல்-அகமதுவை மருத்துவமனையில் சந்தித்து அந்நாட்ட
-
2014 முதல் இந்தியாவிற்குள் ஊடுருவிய 23,926 பேர் கைது: பார்லி.யில் மத்திய அரசு தகவல்
16 Dec 2025புதுடெல்லி, இந்தியாவில் 2014-ம் ஆண்டு முதல் ஊடுருவிய 23,926 பேரை கைது செய்துள்ளதாக மத்தி அரசு தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-12-2025.
17 Dec 2025



