எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அடியெல்ட் - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது வங்கதேசம். நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதலில் விளையாடிய வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 275 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியோ 48.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
உலக கோப்பை போட்டியின் 33வது லீக் ஆட்டத்தில் நேற்று இங்கிலாந்தும், வங்கதேசமும் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது.வங்கதேசத்தின் தொடக்க வீரர்களாக தமீம் இக்பாலும் காயெஸும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே வங்கதேசத்தை அதிர்ச்சியடைய வைத்தது இங்கிலாந்து.முதல் ஓவரின் 4வது பந்தில் காயெஸ் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். 2 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் அவர் அவுட் ஆனார். இதேபோல் தமீம் இக்பால் 2.1வது ஓவரில் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். 2.1 ஓவரில் 8 ரன்களே எடுக்கப்பட்ட நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது வங்கதேசம்.
இருப்பினும் பின்னர் வந்த சவும்ய சர்க்கார், மக்மதுல்லா ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சவும்ய சர்க்கார் 52 பந்துகளில் 40 ரன்களை எடுத்து அவுட் ஆனார். ஷகிப் அல் ஹசன் 6 பந்துகளில் 2 ரன்களை எடுத்து அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து மக்மதுல்லா- முஷ்பிகுர் ரஹிம் ஜோடி இணைந்து நிதானமான நின்று ரன்களைக் குவித்தனர். 131 பந்துகளில் சதத்தை எட்டினார் மக்மதுல்லா. இது ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்த முதல் சதம். அத்துடன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சதமடித்த முதலாவது வங்கதேச வீரர் என்ற சாதனையையும் படைத்தார். மொத்தம் 138 பந்துகளில் 103 ரன்களை எடுத்த நிலையில் மக்மதுல்லா அவுட் ஆனார்.
முஷ்பிகுர் ரஹிம் சதத்தை நோக்கி சென்ற நிலையில் 89 ரன்களில் அவுட் ஆனார். அவர் 77 பந்துகளில் 89 ரன்களைக் குவித்தார். இவர்களுக்குப் பின்னர் சபீர் ரகுமான் வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 12 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் அவர் அவுட் ஆனார். 50 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்களைக் குவித்தது.
இங்கிலாந்து அணி 276 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. அதன் தொடக்க வீரர்களாக மொயின் அலி, பெல் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்தில் அதிரடியாக ரன்களை குவிக்கத் தொடங்கினர்.7.2 ஓவரில் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 43 ஆக இருந்த போது மொயின் அலி ரன் அவுட் ஆனார். அவர் 21 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பின்னர் பெல்லுடன் ஹேல்ஸ் கை கோர்த்தார். ஹேல்ஸ் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 34 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த கையோடு நடையைக் கட்டினார்.
அப்போது 19.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி 97 ரன்களைக் குவித்திருந்தது.களத்தில் இருந்த பெல் 82 பந்துகளில் 63 ரன்களை குவித்து அவுட் ஆனார்.. ரூட் 47 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார். 35.4 ஓவர்களில் இங்கிலாந்து 163 ரன்களை சேர்த்திருந்தது. பட்லர்-வோக்ஸ் ஜோடி நிலைத்து ஆடி ரன்களைக் குவித்துக் கொண்டிருந்தது. பட்லர் அரை சதத்தைக் கடந்து 65 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்த பந்திலேயே வந்த வேகத்தில் ஜோர்டான் அவுட் ஆனார்.
களத்தில் நின்றிருந்த வோக்ஸுடன் கை கோர்க்க கடைசி வரிசை வீரர்கள் தவறியதால் இங்கிலாந்து அணி பெரும் போராட்டத்துக்குள் தள்ளப்பட்டது.
45.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் என்ற நிலையில் இருந்தது இங்கிலாந்து. கடைசி வரிசை வீரர்களான ப்ராட், ஆண்டர்சன் ஆகியோர் வந்த வேகத்தில் நடையைக் கட்டியதால் 48.3 ஓவரில் இங்கிலாந்து அணியால் 260 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு நுழைந்தது. நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்ததால் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தே இங்கிலாந்து வெளியேறும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
குமரி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
20 Feb 2026சென்னை, தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிடட் 6 மாவட்டங்களில்
-
சட்டமன்றத்தில் கண்ணியத்தை கடைபிடித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
20 Feb 2026சென்னை, தமிழக சட்டமன்றத்தில் குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலும், கண்ணியமான முறையைக் கடைப்பிடித்து, ஒத்துழைப்பு நல்கிய எதிர்க்கட்சித் தலைவருக்கு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ
-
முதல்வர் ஸ்டாலினுடன் ஓ.பி.எஸ். திடீர் சந்திப்பு
20 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசினார்.
-
ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் ஏப்ரல் முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடக்கம் தலைமை தோ்தல் ஆணையம் அறிவிப்பு
20 Feb 2026புதுடெல்லி, தற்போது நடைபெற்று முடிந்த மாநிலங்கள் தவிர்த்து எஞ்சிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர (எஸ்.ஐ.ஆா்.) பணி வரும் ஏப
-
இன்று நடபெறும் திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார் சீமான்
20 Feb 2026சென்னை, திருச்சி இன்று நாடைபெறும் மாநாட்டில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்கிறார்.
-
அமைச்சர் நேரு மீதான வழக்கை தி.மு.க. சட்டரீதியாக முறியடிக்கும்: ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
20 Feb 2026சென்னை, அமைச்சர் கே.என்.நேரு மீதான பொய்யான வழக்கை சட்டரீதியாக முறியடிக்கும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
-
அமைச்சர் கே.என்.நேரு பதவி விலக வேண்டும்: த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
20 Feb 2026சென்னை, நகராட்சித்துறை தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை அடுத்து அமைச்சர் கே.என்.
-
சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு: தலைமை தேர்தல் ஆணையாளர் அடுத்த வாரம் தமிழகம் வருகை
20 Feb 2026சென்னை, சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளனர்.
-
தமிழ்நாட்டில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்: முதல்வரை சந்தித்த பிறகு ஓ.பி.எஸ். பேட்டி
20 Feb 2026சென்னை, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.
-
நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி இருக்கிறோம்: சட்டமன்ற பேரவையின் நிறைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
20 Feb 2026சென்னை, நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் அதனை ஒரு காரணமாகச் சொல்லிக் கொண்டு சும்மா இருக்காமல் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை தாண்டி தமிழகத்தில் எண்ணற்ற
-
தி.மு.க. - காங்., கூட்டணி வலுவானது கனிமொழி எம்.பி. கருத்து
20 Feb 2026தூத்துக்குடி, தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாகப் பலமாக நிலைத்திருக்கக்கூடிய ஒரு கூட்டணி. இதில் எந்தவித மாற்றமும் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கனிமொழி எம்.பி.
-
ராமதாசுக்கு மேலும் பின்னடைவு: மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..! அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை
20 Feb 2026சென்னை, மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
20 Feb 2026- திருச்செந்தூர், பெருவயல், பாவூர்சத்திரம்,வென்னிமலை கோவில்களில் மாசி உற்சவாரம்பம்.
- மருதமலை, திருப்போரூர், காங்கேயம் கோவில்களில் முருகர் உற்சவாரம்பம்.
-
இன்றைய நாள் எப்படி?
20 Feb 2026


