முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடை விடுமுறை: திருப்பதில் கூட்டம் அதிகரிப்பு

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி, ஏப் 26:
திருப்பதி கோவிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வாரம் பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. இதனால் பக்தர்கள் விரைவில் தரிசனம் செய்தனர். தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் கோவிலில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் இலவச தரிசன கவுண்டர்கள் நிரம்பி வழிந்தன. பக்தர்கள் 15 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நடைபாதை பக்தர்கள் 10 மணி நேரத்திலும், ரூ. 300 கட்டணத்தில் 8 மணி நேரத்திலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தங்கும் அறை பதிவு செய்ய 5 மணி நேரமும், அறைகளை ஒப்படைக்க 6 மணி நேரமும் காத்திருந்தனர். நேற்று முன்தினம் ரூ. 2 கோடியே 22 லட்சம் உண்டியல் வசூலானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து