எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளுக்கு தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான மாநில அரசின் உரிமைகளை பாதிக்கும் எனவும் அந்த கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர்.நரேந்திரமோடிக்கு நேற்று கடிதமொன்றை அனுப்பியுள்ளார் அதில் அவர் கூறி்யிருப்பதாவது: , பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்புகளுக்கு தேசிய அளவில் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்துவதை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருவதை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்,. பிரதமருக்கு அது தொடர்பாக கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி மற்றும் 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி தாம் எழுதியுள்ள கடிதங்களில், தமிழக அரசின் எதிர்ப்பினை தெரிவித்துள்ளதோடு, அதனை உச்சநீதிமன்றத்தின் பார்வைக்கு எடுத்துச் சென்றிருக்கிறேன், .
கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில், பொதுமருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்புகளுக்கு தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்துவது குறித்து இந்திய பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ அமைப்புகள் வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது - இந்தத் தீர்ப்பு, பொதுமருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகளில் உரிய இடங்களைப் பெறும் ஆர்வம் கொண்டிருந்த மாணவர்களுக்கு வேதனை அளித்து வந்த உத்தரவாதமற்ற தேர்ச்சி முறை தொடர்பான நீண்டகாலப் பிரச்னைக்கும், தமிழக அரசின் நலனுக்கும் பாதகமாக விளங்கிய அம்சங்களை முடிவுக்குக் கொண்டு வந்தது.
உச்சநீதிமன்றம் வழங்கிய அந்த பெரும்பான்மைத் தீர்ப்பு, அதுவரை தமிழ்நாடு எழுப்பி வந்த எதிர்ப்பின் நியாயத்தை வெளிப்படுத்தியது - உச்சநீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு பரவலான வரவேற்பையும் பெற்றது, உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை, மத்திய அரசு ஏற்றுக்கொள்ளாததோடு, சீராய்வு மனு செய்தது குறித்து கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் அதனை திரும்பப் பெறுமாறு தாம் வலியுறுத்தியதை முதல்வர் ஜெயலலிதா நினைவுபடுத்தியுள்ளார்.
மேலும், கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி மத்திய அரசிடம், தான் அளித்த நினைவூட்டு மடலில், இது குறித்து கடந்த ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு எடுத்த நிலையை மறுபரிசீலனை செய்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுவை வாபஸ் பெறவேண்டும் என்று தாம் வலியுறுத்தியதை முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், தமக்கு ஆச்சரியம் ஊட்டும் வகையில், மத்திய மருத்துவக் குழு, மத்திய அரசிடம், தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருவதை முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் போக்கு, தமிழக அரசு கடைப்பிடித்து வரும் நியாயமான, வெளிப்படையான, நன்றாகச் செயல்பட்டு வருகிற தமிழக அரசின் பயனை அனுபவித்து வரும் ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்களிடையே பெரும் குழப்பத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
2005-ம் ஆண்டில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளதாகவும், தீவிர பரிசீலனைக்குப் பின்னரே தொழிற்கல்வி பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தமது முந்தைய கடிதங்களில் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளதை முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார். நகர்ப்புற மாணவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ள பொதுநுழைவுத் தேர்வில் நகர்ப்புற மாணவர்களின் போட்டியை சமாளிக்க இயலாத கிராமப்புற மாணவர்கள் மற்றும் சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு ஆதரவாக உறுதியான நிலைப்பாட்டை தமது அரசு மேற்கொண்டுள்ளது - பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயில்வதற்கு ஏற்ற வசதியும், நகர்ப்புற மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வி சாதன வசதியும், கிராமப்புற மாணவர்களுக்கு கிடைப்பதில்லை - இந்நிலையில், பொது நுழைவுத் தேர்வினை ரத்து செய்யும் முடிவால், தகுதி வாய்ந்த கிராமப்புறங்களை சேர்ந்த சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய எண்ணற்ற மாணவர்கள் பயனடைவார்கள் என முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
பட்ட மேற்படிப்புகளில் சேர, கிராமப் பகுதிகளில் - குறிப்பாக, பழங்குடியின மக்கள் வசிக்கும் மலைப்பகுதிகளில் பணிபுரிந்தவர்களுக்கு தமிழக அரசு முன்னுரிமை வழங்குகிறது - மேலும், அரசு மருத்துவ கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பை முடித்தவர்கள், மாநில அரசில் குறிப்பிட்ட காலம் பணியாற்ற வேண்டும் என உறுதிமொழி பத்திரங்களை பெறுவதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் தேவைப்படும் மருத்துவ நிபுணர்களின் தேவையை சமாளிக்க உதவிகரமாக உள்ளது - தமிழகத்தில் இந்த கொள்கை முன்முயற்சிகளையும், சமூக-பொருளாதார குறிக்கோள்களையும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அறிமுகம் பயனற்றதாக்குகிறது - தேசிய தேர்வு ஒழுங்குமுறைக்கு ஏற்ப செயல்பட வேண்டுமானால், இத்தகைய ஷரத்துகள் அதில் இடம்பெறவில்லை- தமிழ்நாட்டில் சமூக-பொருளாதார வாழ்க்கை நெறி மற்றும் தமிழகத்தின் நிர்வாக தேவைகளுக்கு அப்பாற்பட்டதாக தேசிய தேர்வு இருக்கும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
பலத்த இடைவிடாத எதிர்ப்புகளையும் மீறி, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முறையை அறிமுகம் செய்ய முயன்றபோது, மாநில அரசு அனைத்துவித சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது - தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலித்த உச்சநீதிமன்றம், மாநில அரசின் உரிமைகளுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது - இதனை எதிர்த்து இந்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை எதிர்த்து, தமிழக அரசும் மனு தாக்கல் செய்தது - உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு முற்றிலுமாக இந்திய அரசு கட்டுப்பட்டு நடப்பதோடு, சீராய்வு மனுவை திரும்பப் பெற வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தி வருகிறது - தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முறையை மீண்டும் அறிமுகம் செய்ய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய இந்திய அரசு புதிய முயற்சிகள் மேற்கொண்டாலோ அல்லது இந்த தேர்வு முறையை வேறு பெயரில் அல்லது முறையில் அறிமுகம் செய்ய முயன்றாலோ அது மாநிலத்தின் உரிமைகளையும், தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை கொள்கைகளையும் மீறும் செயலாகும் என்பதால், அதனை தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்6 days 18 hours ago |
மினி பான் கேக்1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-05-2024.
10 May 2024 -
குஜராத்தில் சர்ச்சைக்குள்ளான வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடக்கிறது
10 May 2024ஆமதாபாத் : குஜராத்தில் நேரலை ஒளிபரப்பால் சர்ச்சைக்குள்ளான வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்: ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கத்தி மீட்பு
10 May 2024நெல்லை : காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் இறந்து கிடந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து கத்தி ஒன்றை தடயவியல் நிபுணர்கள் மீட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
-
கலவரத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது: இம்ரான் கான் அறிவிப்பு
10 May 2024இஸ்லாமாபாத் : கடந்த ஆண்டு மே 9-ம் தேதி நடந்த கலவர சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று இம்ரான்கான் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
23 வகை நாய்களுக்கு தடை விதித்த உத்தரவு வாபஸ் : தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அறிவிப்பு
10 May 2024சென்னை : :23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை தமிழக கால்நடை பராமரிப்பு துறை திரும்ப பெற்றுள்ளது.
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
10 May 2024சென்னை : கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு துணையாக அமையட்டும் என்று எஸ்.எஸ்.எல்.சி.
-
தெலுங்கானாவில் அரசு பஸ்சில் பயணம் செய்த ராகுல் காந்தி
10 May 2024ஐதராபாத் : தெலுங்கானாவில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி அங்கு அரசு பஸ்சில் பயணம் செய்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்கள் குறித்து எடுத்து க
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற இரண்டு மாணவிகள்
10 May 2024கமுதி : பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 500-க்கு 499 மதிப்பென் எடுத்து கமுதி மற்றும் திண்டுக்கல் மாணவிகள் 2 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.
-
இந்திய மக்களவை தேர்தலில் நாங்கள் தலையிடவில்லை : ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு
10 May 2024வாஷிங்டன் : நாங்கள் இந்திய மக்களவைத் தேர்தலில் தலையிடவில்லை என்று ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
-
அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே வள்ளலார் சர்வதேச மையம் : உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி
10 May 2024சென்னை : வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே கட்டப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
-
சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புதிய வழக்குப்பதிவு
10 May 2024சென்னை : கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அவதூறு பரப்பியதாக சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
யானை வழித்தட வரைவு அறிக்கை: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
10 May 2024சென்னை : யானை வழித்தட வரைவு அறிக்கையை செயல்படுத்த முனைப்பு காட்ட கூடாது என்று அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு
10 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் : நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது சுப்ரீம் கோர்ட்
10 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்.
-
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 89.14 சதவீதம் தேர்ச்சி
10 May 2024புதுச்சேரி : 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் புதுச்சேரியில் 89.14 சதவீதம் தேர்ச்சி பேர் பெற்றுள்ளனர்.
-
பாராளுமன்ற 4-ம் கட்ட தேர்தல்: 10 மாநிலங்களில் இன்று மாலை ஓய்கிறது பிரசாரம் : இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் மும்மூரம்
10 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற 4-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.
-
வரும் திங்கட்கிழமை முதல் அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை துவக்கம்
10 May 2024சென்னை : வரும் திங்கட்கிழமை முதல் அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.
-
காலக்கெடுவுக்கு முன்பே இந்திய வீரர்கள் வெளியேறி விட்டனர் : மாலத்தீவு அரசு தகவல்
10 May 2024மாலே : கெடு முடியும் முன்பே மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டு இருந்த இந்திய ராணுவ படைகள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டதாக அதிபர் முகமது முய்சுவின் செய்தி தொடர்பாளர் தெரிவித
-
செனகல் நாட்டில் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்த விமானம்
10 May 2024டக்கார் : செனகல் நாட்டில் ஓடுபாதையில் இருந்து திடீரென தவறி விழுந்த விமான விபத்தில் 11 பேருக்கு காயம் ஏற்பட்டது.
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 800 கனஅடியாக அதிகரிப்பு
10 May 2024சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து 800 கனஅடியாக அதிகரித்தது.
-
அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை ஒரே நாளில் 3-வது முறை அதிகரித்தது
10 May 2024சென்னை : அட்சய திருதியை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் தங்கம் விலை 3-வது முறை அதிகரித்து விற்பனையானது.
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி : அரியலூர் மாவட்டம் முதலிடம் - தமிழ் பாடத்தில் 8 பேர் 100-க்கு 100
10 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 91.55 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
பாகிஸ்தான் குறித்த மணிசங்கர் ஐயரின் பேச்சு: உடன்பாடு இல்லை என காங்கிரஸ் கட்சி விளக்கம்
10 May 2024புதுடெல்லி : முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் ஐயர், பாகிஸ்தான் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
-
ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியது : கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
10 May 2024ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று மலர் கண்காட்சி தொடங்கியதை தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசித்தனர்.
-
சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
10 May 2024சென்னை : திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஏலரப்பட்டி பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற