முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      ஈரோடு

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர்   தலைமையில் இன்று (26.12.2016) நடைபெற்றது.

இக்குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், தொழில் கடன்,  குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து  மொத்தம்  247 மனுக்கள்  வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர்  பெற்றுக்கொண்டு பரிசீலித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட  உத்தரவிட்டார்.

மனுநீதிநாள் முகாம்

இக்குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில்  முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள்,  அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள்,  மாவட்ட கலெக்டர் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மாவட்ட உயர் அலுவலர்களின் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மக்களைத் தேடி வருவாய்த்துறை அம்மா திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆகியவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர்   ஆய்வு மேற்கொண்டார்.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஸ், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) இராதாமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்ரமணியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் எஸ்.வி.குமார், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் என்.ராமச்சந்திரன், உட்பட அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து  கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்