முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி வேணுகோபால சுவாமி திருக்கோயிலில் வரும் 8_ந் தேதி வைகுண்ட ஏகாதசி விழா

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2016      நீலகிரி

ஊட்டி வேணுகோபால சுவாமி திருக்கோயிலில் வரும் 8_ந் தேதி வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற உள்ளது.

ஊட்டி நகரின் மையப்பகுதியில் புது அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு வேணுகோபாலசுவாமி திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடத்தப்படும். அதன்படி இந்தாண்டுக்கான விழா வரும் 8_ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறும்.

                                வைகுண்ட வாசல் திறப்பு

விழாவினையொட்டி 7_ந் தேதி மாலை 4 மணிக்கு ஸ்ரீ வேணுகோபால சுவாமிக்கு திருமஞ்சனம் அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து 8_ந் தேதி அதிகாலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாசுரங்கள் பாடி வழிபாடு நடத்தப்பட்டு 5.30 மணிக்கு வைகுண்ட வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்பின்னர் காலை 10 மணிக்கு கருட வாகனத்தில் உற்சவர் ருக்குமணி, சத்தியபாமா சமேத வேணுகோபால சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவ்விழாவில் பக்தகோடிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுவாமிக்கு திருமஞ்சணம் செய்ய பால், தயிர், இளநீர், அரிசி மாவு, திரவிய தூள், பன்னீர், சந்தனம் முதலிய அபிஷேக பொருள்களை வழங்க விரும்பும் பக்தர்கள் 7_ந் தேதி பகல் 12 மணிக்குள் திருக்கோயிலில் சேர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

                         ஆண்டாள் கல்யாணம்

விழாவினைத் தொடர்ந்து வரும் 11_ந் தேதி மாலை 6.05 மணிக்கு கூடாரவல்லி முன்னிட்டு திருக்கோயில் வளாகத்தில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது  விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் பொன்.சி.லோகநாதன், தலைமை அர்ச்சகர் விஸ்வநாத் ஆனந்த் மற்றும் விழா உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்