முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாநகரைஅசுத்தப்படுத்தினால் அபராதம் மாநகராட்சி எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      ஈரோடு

ஈரோடு மாநகரை தூய்மையாக்கும் திட்டத்தில், மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு வகைகளில் முயற்சி எடுத்து வருகிறது. ஆனால், மக்கள் ஒத்துழைப்பு சரிவர கிடைப்பதில்லை.

குறிப்பாக பொது இடத்தை அசிங்கப்படுத்துவது அதிகமாகியுள்ளது. இதை தடுக்கும் வகையில், மாநகரின் முக்கிய இடங்களில், சுகாதாரக்கேடு ஏற்படுத்துவோருக்கு, 50 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து, அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது பி.எஸ். பார்க், சூரம்பட்டி நால்ரோடு, பெரியார்நகர் ஆர்ச், கனி மார்க்கெட், மணிக்கூண்டு உள்ளிட்ட பல பகுதிகளில், அரசியல் கட்சியினர் பிரமாண்ட விளம்பர பேனர்கள் வைத்துள்ளனர். அதன் மறைவான இடங்களில் சிறுநீர் கழித்து, மக்கள் அசுத்தம் செய்கின்றனர். இதை தடுக்கும் வகையில், அந்த இடங்களில், உடனடி அபராதம் விதிக்க எச்சரிக்கை விடுத்து, அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி அசுத்தப்படுத்தினால், அவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, துப்புரவு பணியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். விளம்பர பேனர் வைப்பவர்கள் அனுமதிக்காலம் முடிந்ததும், அகற்றினால் இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago