எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருவள்ளுர் மாவட்டம்,பொன்னேரியில் சாராட்சியர் அலுவலகத்தில் 7 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ,மாணவியர்கள் கலந்துக்கொண்ட அமைதி பேரணியும்,விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.
பொன்னேரியில் சாராட்சியர் அலுவலகத்தில் துவங்கிய பேரணியை பொன்னேரி சப்-கலெக்டர் தண்டபாணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.பொன்னேரி அம்பேத்கர் சிலை வழியாக புதிய பேருந்து நிலையம்,தேரடி,அண்ணாசிலை வரை சென்று அங்கு மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.பின் மீண்டும் சாராட்சியர் அலுவலகம் வந்து பேரணி நிறைவடைந்தது.
பேரணியில் உ.நா.அரசு கல்லூரி மற்றும் ஸ்ரீதேவி கலைக்கல்லூரி மாணவ,மாணவியர்கள் கலந்துக் கொண்டு தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பலகைகளை கையிலேந்தி சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி வட்டாட்சியர் செந்தில்நாதன்,சிறப்பு தனி வட்டாட்சியர் தமிழ்செல்வன்,துணை வட்டாட்சியர் ரஜினிகாந்த்,பொன்னேரி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |