முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருட்டு டிவிடி பதிவு செய்ததால் ஆரணி தனியார் திரையரங்கின் ஒளிபரப்பு கருவிகள் பறிமுதல்

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2017      வேலூர்

ஆரணி காஜிவாடை பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில்  திருட்டு டிவிடி பதிவு செய்ததால் திரையரங்கின் ஒளிபரப்பு கருவிகளை  வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து திருட்டு விசிடி தடுப்பு பிரிவு போலீஸார்  நடவடிக்கை எடுத்தனர்.   நடிகரும், தயாரிப்பாளருமான பார்த்திபனின் பையாஸ்கோப் பிலிம் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட கோடிட்ட இடத்தை நிரப்புக என்ற திரைப்படம் ஜன 14 அன்று ரிலீஸ் ஆனது.  இந்நிலையில் இத்திரைப்படத்தினை ஆரணி காஜிவாடை பகுதியில் உள்ள தனியார்  திரையரங்கிலும் இப்படம் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் ஜன 14 அன்று இரவு 9.35 மணி அளவில் திருட்டு விசிடி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் பார்த்தீபன்  சென்னையில் உள்ள போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார்.  இதன்பேரில் வேலூரில் உள்ள திருட்டு விசிடி தடுப்பு பிரிவிற்கு இப்புகார்  வந்ததின் பேரில் விசிடி தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கபிலன் தலைமையிலான  போலீஸார்கள் உதயன், கருப்பண்ணன், சந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர்  வழக்கு பதிவு செய்து வெள்ளிக்கிழமை ஆரணி காஜிவாடை பகுதியில் உள்ள தனியார் திரையரங்கிற்கு சென்று திரைப்படம் ஒளிபரப்ப வைத்திருந்த கருவிகளை பறிமுதல் செய்தும், ஆபரேட்டர் வெங்கடேசன்(50) என்பவரை கைது செய்தனர். மேலும் திரையரங்க உரிமையாளர் சக்தி என்பவரை தேடி வருகின்றனர்.   மேலும் இன்ஸ்பெக்டர் கபிலன் கூறியது, எங்களுக்கு சென்னையில் இருந்து  புகார் வந்ததின்பேரில் விசாரணை செய்ததில் கியூப் நெட்வொர்க் சிஸ்டம்  மூலம் திரைப்படங்கள் ஒளிபரப்பப்படுகிறது. ஒவ்வொரு திரையரங்கிற்கும் தனித்தனி சர்வர் எண்கள் வழங்கப்பட்டு அதன் மூலம் ஒளிபரப்பு ஆகிறது.இந்நிலையில் எந்த தியேட்டரில் திருட்டுதனமாக படங்களை பதிவு செய்தாலும்  அந்த படத்தை வைத்து கியூப் நெட்வொர்க் நிறுவனத்தினர் கண்டுபிடிக்கும் வசதியை ஏற்படுத்தி உள்ளனர். அதன்பேரில் தற்போது விற்பனைக்கு வந்துள்ள கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தின்  திருட்டு டிவிடிக்கள் இந்த திரையரங்கில்  படம் பதிவு செய்யப்பட்டுள்ளதை  கண்டுபிடித்து  அதற்கான சான்றை புகாருடன் இணைத்து கொடுத்ததின்பேரில் இந்த திரையரங்கில்  உள்ள ஒளிபரப்பு கருவிகளை பறிமுதல் செய்து ஆபரேட்டர் வெங்கடேசனை கைது செய்துள்ளோம். மேலும் தலைமறைவாக உள்ள உரிமையாளர் சக்தியை தேடி வருகிறோம். என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்