எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாளை சிறப்பாக நடத்துவது என்றும் ,அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் பாதுகாக்கும் பாசறையாக இருந்து பணியாற்றுவது எனறும் அதிமுக இலக்கிய அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அ.தி.மு.க இலக்கிய அணி ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கழக இலக்கிய அணி செயலாளர் பா. வளர்மதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள், இலக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கழகப் பொதுச் செயலாளர் சசிகலா எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் பாதுகாக்கும் பாசறையாக பணியாற்ற இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை, கழகப் பொதுச் செயலாளர் சசிகலாவின் சீரிய வழிகாட்டுதலோடு, மாநிலம் முழுவதும் பட்டிமன்றம், பல்கலை நிகழ்ச்சிகள், திருக்கோயில்களில் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
7 தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை மெரினா கடற்கரையில் அமையவுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுச் சின்னத்தை, புனித வழிபாட்டுத்தலமாக மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக கலாச்சாரத்தின் அசைக்க முடியாத அடையாளமாக இருந்த தடைகளை தகர்த்தெறிய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அவசர சட்டம் கொண்டுவர பக்கபலமாக இருந்த கழகப் பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், சசிகலாவின் வழிகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் தங்குதடையின்றி நடைபெற ஏற்பாடுகளைச் செய்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசுக்கும், ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க ஒத்துழைத்த மாணவர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் உட்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
21 Feb 2026மதுரை, மதுரையில் 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1536.31 கோடி செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை முதல்வர் ம
-
மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
21 Feb 2026மதுரை, மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம் தி.மு.க., இந்த இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும் என்று நேற்று மதுரையில் நடைபெற்ற தென்மண்டல தி.மு.க.


