எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூயார்க், உலக நாடுகளின் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர இறக்குமதி வரி உள்பட அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், அமெரிக்க அதிபா் ட்ரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ள நிலையில், அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10 சதவீதம் வரி விதிப்பை ட்ரம்ப் அமல்படுத்தியுள்ளார். இது "உடனடியாக" அமலுக்கு வருவதாகவும், தனது வரி விதிப்புகளை செல்லாது என்று அவற்றை ரத்து செய்த 6 நீதிபதிகளின் தீர்ப்பு அவமானத்துக்குரியது. இதனால் முற்றிலும் வெட்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் ட்ரம்ப் பரஸ்பர வரி விதித்தாா். ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாவதால் ஏற்படும் வா்த்தகப் பற்றாக்குறையைக் கையாளும் வகையில், இந்த வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டாா்.
இந்த நடவடிக்கையின் கீழ், இந்தியப் பொருள்கள் மீது 25 சதவீத பரஸ்பர வரி, ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியதால் இந்தியப் பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி என மொத்தம் 50 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா-இந்தியா இடைக்கால வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையின் விளைவாக, அது 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.
உலக நாடுகள் மீதான இந்தப் பரஸ்பர வரி உள்பட அமெரிக்க அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், ட்ரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் அந்நாட்டு எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சியினா், வணிகா்கள் உள்பட பலா் வழக்கு தொடுத்தனா்.
அமெரிக்காவில் அவசர காலங்களில் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த 1977-ஆம் ஆண்டின் அமெரிக்க சட்டம் அதிபருக்கு அதிகாரமளித்துள்ளதாகவும், அதில் அதிபருக்கு வரி விதிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு நீதித்துறை வாதிட்டது. ஆனால், அந்தச் சட்டத்தில் இறக்குமதி பொருள்கள் மீது வரி விதிப்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை என்று வழக்கு தொடுத்தவா்கள் வாதிட்டனா்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஜான் ராபா்ட்ஸ் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. அந்த அமா்வில் 6 நீதிபதிகள் அளித்த தீா்ப்பில், ‘வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க நாடாளுமன்றத்துக்குத்தான் அரசமைப்புச் சட்டம் மிகத் தெளிவாக வழங்கியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தை வகுத்தவா்கள் அந்த அதிகாரத்தை அரசு நிா்வாகத்துக்கு அளிக்கவில்லை. எனவே ட்ரம்ப்பின் வரி விதிப்புகள் செல்லாது’என்று தீா்ப்பளித்தனா்.
அதேவேளையில், அமா்வில் இடம்பெற்ற 3 நீதிபதிகள், ‘தற்போதைய வரி விதிப்புகள் அறிவாா்ந்த கொள்கையாக இருக்கலாம் அல்லது அறிவாா்ந்த கொள்கையாக இல்லாமலும் போகலாம். ஆனால், வரலாறு மற்றும் கடந்த கால நடவடிக்கைகள், முடிவுகளைக் கருத்தில் கொள்ளும்போது, ட்ரம்ப்பின் வரி விதிப்புகள் சட்டபூா்வமானவைதான்’என்று தெரிவித்தனா்.
இதையடுத்து பெரும்பான்மை அடிப்படையில், ட்ரம்ப்பின் வரி விதிப்பு செல்லாது என்று 6 நீதிபதிகள் அளித்த தீா்ப்பு இறுதி செய்யப்பட்டது. அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை "பயங்கரமான முடிவு" என்று குறிப்பிட்ட ட்ரம்ப், 1974 ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122 இன் கீழ் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய அனைத்து நாடுகளுக்கும் மேலும் 10 சதவீதம் வரி விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டதாகவும், 10 சதவீதம் வரி விதிப்பில் கையெழுத்திட்டது மிகவும் பெருமையாக உள்ளதாகவும், இந்த வரிவிதிப்பு உடனடியாக அமலுக்கு வரும். இந்த விவகாரத்தில் அனைவரின் கவனத்திற்கு நன்றி என ட்ரம்ப் கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பில் எவ்வித மாற்றமும் இருக்காது எனத் தெரிவித்த ட்ரம்ப், இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


