முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வறட்சி நிவாரணம் பெற 45,098 விவசாயிகள் தேர்வு: கலெக்டர் கருணாகரன் தகவல்

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      திருநெல்வேலி

நெல்லை

நெல்லை மாவட்டத்தில், 45,098 விவசாயிகள் வறட்சி நிவாரணம் பெறத் தகுதியானவர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவித்தார்.திருவேங்கடம் வட்டம், காரிச்சாத்தான் அருகே பாறைப்பட்டியில் நடைபெற்ற மனு நீதிநாள் முகாமில் தலைமை வகித்து பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து பேசியதாவது-இந்த ஆண்டு வறட்சியால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களைப் பார்வையிட்டு, அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.நெல்லை மாவட்டத்தில் ஏறத்தாழ 45,098 விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டு, நிவாரணம் பெற தகுதி பெற்றவர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 52 ஆயிரம் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் நிவாரணம் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வறட்சியினால் கிராமங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.2016-2017 இல் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 6,218 பேர் பயனடைந்துள்ளனர். வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.25 லட்சம் மானியத்துடன் ரூ. 1 கோடி கடன் வழங்கப்படும். விரைவில் ஸ்மார்ட் அட்டை வழங்கப்படவுள்ளது என்று தெரிவித்தார் .முகாமில், 20 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 20 பேருக்கு பட்டா மாறுதல் ஆகியவற்றுக்கான உத்தரவு நகலை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.இதில், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் ராஜேந்திரன், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கனகராஜ்,திருவேங்கடம் சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் ஜெம்ஸ்வெள்ளத்துரை, குருவிகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்