எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆரணி அடுத்த இலுப்பகுணம் கிராமத்தில் மனைவி மீது சந்தேகம் அடைந்ததால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்த கணவனை போலீஸார் கைது செய்தனர். ஆரணி அடுத்த இலுப்பகுணம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி மகன் ஜஸ்டின்கென்னடி(32), ராணிப்பேட்டை அருகே உள்ள காரைப்பகுதியைச் சேர்ந்த குமார் மகள் சுமதி(30)க்கும் 5 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 மாத கைக்குழந்தை உள்ளது. இந்நிலையில் சுமதி நடத்தையில் சந்தேகமடைந்த ஜஸ்டின்கென்னடி இது குறித்து அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜான்கென்னடி கத்தியை எடுத்துக்கொண்டு சுமதியை வெட்ட சென்றார். சுமதி எழுந்து வீட்டிலிருந்து வெளியே ஓடினார். பின்னால் ஓடிச்சென்று சுமதியை வெட்ட முயன்றார். அப்போது வெளியே படுத்திருந்த ஜான்கென்னடியின் தந்தை அந்தோணி, அண்ணன் ஜான்ஸ் ஆகியோர் ஜான்கென்னடியை பிடித்து இழுத்தனர். அவர்களை கீழே தள்ளிவிட்டு சுமதியை வெட்டினார். மேலும் அந்தோணி, ஜான்ஸ், கைக்குழந்தையையும் கத்தியால் தாக்கினார். இதனால் 3 பேரும் காயமடைந்தனர். காயமடைந்த ஜான்ஸ் காயத்துடனேயே ஜான்கென்னடியை பிடித்துக்கொண்டு களம்பூர் போலீஸில் ஒப்படைத்தார். இதன்பேரில் போலீஸார் ஜஸ்டின்கென்னடியை கைது செய்து சம்பவ இடத்திற்கு சென்று சுமதியின் சடலத்தை ஆரணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமாகி 5 ஆண்டுகளே ஆனதால் ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


