முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தும் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      கடலூர்
Image Unavailable

தூய்மை விழிப்புணர்வை சிறப்பாக ஏற்படுத்தும் பொருட்டு தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தும் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,  தலைமையில் நடைபெற்றது.தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய குடிநீர் வடிகால் வாரிய அமைச்சகத்தால் மார்ச் 1 முதல் 15ந்து தேதி வரை  தூய்மை இருவாரம் அனுசரிக்கப்படுகிறது.  அதில் மார்ச் 10ம் தேதி பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் செயல்படும் மாவட்டங்களில் பெண்களை முன்நிறுத்தி தூய்மை உறுதிமொழி எடுத்தல் பேரணி, நாடகம் மற்றும் ஒவியப்போட்டிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் செயல்படும் கடலூர் மாவட்டத்தில் தூய்மை விழிப்புணர்வை சிறப்பாக ஏற்படுத்தும் பொருட்டு கலெக்டர் டி.பி.ராஜேஷ்,  தலைமையில் இன்று  (07.03.2017) கலெக்டர் அலுவலகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் துறை அலுவலர்களுக்கு ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கலெக்டர் அவர்களால் 08.03.2017 முதல் 15.03.2017 வரையிலான  ஒரு வாரத்திற்கான செயல்திட்டங்கள் குறித்து  கலந்துரையாடல் நடைபெற்றது.  8.3.2017  சர்வதேச பெண்கள் தின விழா அரசு பொது மருத்துவமனை, கடலூர்.2)09.03.2017 தூய்மை விழிப்புணர்வு முகாம்-திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை.310.03.2017 தூய்மை உறுதி மொழி எடுத்தல் மற்றும் மனித சங்கிலி-அனைத்து துறைகள்4)            11.03.2017 மற்றும் 12.03.2017 விழிப்புணர்வு கண்காட்சி.5)                13.03.2017 பொது இடங்களில் மரம் நடுதல்-மாவட்ட சமூக நல அலகு6)4.03.2017 பொது இடங்களை தூய்மைப்படுத்துதல்-திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக   வளர்ச்சி முகமை.7).03.2017 நிறைவு விழா-மாவட்ட சமூக நலத்துறை.            இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, இணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு), குழந்தைகள் நல குழுமம், நேரு யுவகேந்திரா, மாவட்ட குழந்தைகள் பாதூகாப்பு அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர்,  திட்ட ஒருங்கிணைப்பாளர் (ஊhடைன hநடிடiநெ) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago