முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேடியோ சிட்ட எஃப்.எம். 91.9 தொடக்கம்

வெள்ளிக்கிழமை, 10 மார்ச் 2017      மதுரை
Image Unavailable

மதுரை, -: நாட்டின் முதலாவது மற்றும் பழமையான தனியார் பண்பலை வானொலி ஒலிபரப்பு நிறுவனமான ரேடியோ சிட்டி சமீபத்தில் ரேடியோ சிட்டி 91.9 எஃப்.எம்.ஐ மதுரையில் தொடங்கியது. இதன் மூலம் ரேடியோ சிட்டி தனது கால்தடத்தை தென்பிராந்தியத்தில் 6 நிலையங்கள் என விரிவுபடுத்தியுள்ளது.
பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ், இந்தியாவின் முதலாவது மொபைல் ஸ்டுடியோ வாகனமான ரேடியோ சிட்டி 91.9 எஃப்.எம்.ஐ மதுரையில் தொடங்கிவைத்தார். மொபைல் ஸ்டுடியோ வாகனத்தில் இருந்து நேரடியாக ஒலிபரப்பு செய்து ரேடியோ சிட்டி வரலாறு படைத்துள்ளது. 15 தினங்களுக்கு இந்த மொபைல் ஸ்டுடியோ வாகனம் நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் பயணித்து நகரின் அனைத்து பரபரப்புக்களையும் உள்ளடக்கும். தொடக்க விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மீனாட்சியம்மன் கோயிலில் தொடங்கி நகரின் பல பகுதிகளிலும் பல்வேறு நாட்டிய மற்றும் இசைக்குழுவினரின் பாரம்பரிய நடன, இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இது குறித்து கருத்து தெரிவித்த மியூசிக் பிராட்கேஸ்ட் லிமிடெட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி அப்ரஹாம் தாமஸ், “மதுரையில் ரேடியோ சிட்டி 91.9 எஃப்.எம். வானொலி நிலையம் தொடங்கப்படுவது தென்னிந்தியாவில் எங்களது செயல்பாடுகள் விரிவடைவதைக் குறிக்கிறது. ரேடியோ சிட்டி தொடங்கப்பட்டது முதலாகவே இது தென்னிந்தியாவின் பிரபலமான வானொலி நிலையமாக திகழ்வதுடன், இந்தப் பெருமையை மேலும் முன்னெடுத்துச் செல்லும் வகையிலும், எங்களது நேயர்களுக்கான புதிய குறியீட்டை நிர்ணயிக்கும் வகையிலும் நாங்கள் இன்று மதுரை நகரத்தில் ரேடியோ சிட்டி 91.9 நிகழ்ச்சிகளை நேரடியாக ஒலிபரப்புவதற்கான மொபைல் ஸ்டுடியோ வாகனத்தை அறிமுகம் செய்திருக்கிறோம்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்