எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் 5 பணிகள் ரூ.12.33 இலட்சம் மதிப்பீட்டிலும், தடப்பள்ளி வாய்க்கால்களில் 9 பணிகளுக்கு ரூ.31.76 இலட்சம் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் ரூ.44.09 இலட்சம் மதிப்பீட்டில் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஸ் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.எம்.ஆர்.ராஜா (எ) கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர் .சு.ஈஸ்வரன் (பவானிசாகர்) ஆகியோர் முன்னிலையில் 14 குடிமராமத்துப் பணிகளை பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துவங்கி வைத்தார்.
பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர்.கே.ஏ.செங்கோட்டையன் குடிமாராமத்துப் பணிகளை துவக்கி வைத்து தெரிவித்தாவது.
தமிழகத்தில் வறட்சியை எதிந்கொள்ளவும், நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்திடவும் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழ்நாடு அரசு, பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்கும் பண்டைய குடிமராமத்து திட்டத்திற்கு புத்துயிர் அளிக்க ஆணையிட்டார்கள். 30 மாவட்டங்களில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 1519 குடிமராமத்து திட்டப் பணிகளை துவக்கி வைக்கும் விதமாக, காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் கிராமம், மணிமங்கலம் ஏரியினை சீரமைத்திடும் குடிமராமத்து திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்தார்கள்.
குடிமராமத்து திட்டத்தில் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பண்டைய காலங்களில் தமிழகத்தில் உள்ள ஏரிகள் குளங்கள், கண்மாய்கள், நீர்வரத்துக் கால்வாய்களை பொதுமக்களின் பங்களிப்புடன் குடிமக்களால் மராமத்துப் பணிகள் செய்யப்பட்டதால் இத்திட்டம் குடிமராமத்துப் பணிகள் திட்டம் என முன்னோர்களால் அழைக்கப்பட்டது. நீர்வள ஆதாரங்களாக விளங்கும் குளங்கள், ஏரிகள், கால்வாய்களில் குடிமக்களால் மராமத்துப் பணிகள் செய்து நீர்நிலைகளை பராமரிக்கும் பணிகளே குடிமராமத்துப் பணிகள் ஆகும். இந்தப் பணிகள் தமிழக அரசால் சுமார் 42 ஆண்டுகளுக்கு முன்னர் 1975ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன. இந்த குடிமராமத்துப் பணிகள் திட்டம் நடப்பு ஆண்டில் தமிழக அரசால் தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக சுமார் 100 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்வதற்கு ஆணையிடப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, கோவை மண்டலத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நீர்நிலைகளை குடிமராமத்துப் பணிகள் மூலம் சீரமைக்க 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 56 பணிகள் சுமார் 393.29 இலட்சங்கள் (3.93 கோடி) மதிப்பீட்டில் இத்திட்டம் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கீழ்பவானி பாசனத் திட்டக் கால்வாய்களில் 39 பணிகள் ரூபாய் 321.20 இலட்சங்கள் மதிப்பீட்டிலும், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத் திட்டத்தில் 3 பணிகள் ரூபாய் 28.00 இலட்சங்கள் மதிப்பீட்டிலும், தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்திட்டத்தில் 9 பணிகள் ரூபாய் 31.76 இலட்சங்கள் மதிப்பீட்டிலும், அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திட்டத்தில் 5 பணிகள் ரூபாய் 12.33 இலட்சங்கள் மதிப்பீட்டிலும் முதற்கட்டமாக செய்து முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கீழ்பவானி முறைநீர்ப்பாசனத்திற்குட்பட்ட 39 பாசன சபைகள் மூலமாகவும், காலிங்கராயன் பாசனத்திற்குட்பட்ட 3 பாசன சங்கங்கள் மூலமாகவும், தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட 10 சங்கங்கள் மூலமாகவும் அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட 5 பாசன சங்கங்கள் மூலமாகவும் சங்கங்களின் பங்களிப்புடன் பாசனதாரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு வாய்க்கால் பராமரிப்பு பணிக்கும் மதிப்பீடுகள் ரூபாய் 10.00 இலட்சங்களுக்கும் மிகாமல் பாசனதாரர்களின் ஆலோசனையுடன் தயாரிக்கப்பட்டு, வாய்க்காலில் உள்ள முட்செடிகளை அகற்றுதல், கால்வாயை தூர்வாருதல், உடைந்துபோன மதகுகளை சீரமைத்தல், மதகுகளுக்கு கதவுகளை சீரமைத்து பொருத்துதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் ஆகிய பணிகளை குடிமராமத்துப் பணிகளாக செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் யு10 பாசனப் பகுதியில் மட்டும் சுமார் 5924-59 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். இத்திட்டப் பணிகள் செயலாக்கம் செய்யப்படுவதால் தண்ணீர் கடைமடை வரை சேதாரமின்றி சென்றடையும். ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மொத்தம் 56 பணிகள் ரூபாய் 393.39 இலட்சங்கள் (3.93 கோடி) மதிப்பீட்டில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குடிமராமத்துப் பணிகள் ஒரே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் துவங்கப்பட்டுள்ளது. இதுவே முதல்முறையாகும். கிராமப்புற விவசாயிகள் நிலத்தடி நீர் ஆதாரத்தினை பெருக்குவதற்காக குளங்கள் மற்றும் ஏரிகள் தூர்வார வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கை விரைவில் நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இத்திட்டத்தின் கீழ் இப்பணிகள் மூலம் விவசாயிகள் அனைவரும் நன்கு பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
இவ்விழாவில் ஈரோடு பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் வெங்கடாச்சலம், பவானிசாகர் நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் திருச்செந்தில்வேலன், கோபி நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் எஸ்.மோகன்குமார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
பிரேசிலில் வரலாறு காணாத மழை: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது
05 May 2024பிராசிலா : பிரேசிலில் வரலாறு காணாத மழைக்கு 56 பேர் பலியாகினர். பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-
தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது : ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
05 May 2024புதுடில்லி : தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது என்று குற்றஞ்சாட்டிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ., ஒரு போதும் அரசியலம