எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரஅமைப்பு) சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ்; தருமபுரி வட்டம், குருபரஅள்ளி கிராமத்திற்குட்பட்ட ரூ.7.45 இலட்சம் மதிப்பீட்டிலும் விவசாயிகளின் பங்களிப்புத்தொகை 10 சதவீதத்துடன் கூடிய குடிமராமத்து திட்டப்பணி, தருமபுரி வட்டத்திற்குட்பட்ட சத்திரத்தில் ரூ.7.45 இலட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளின் பங்களிப்புத்தொகை 10 சதவீதத்தில் குடிமராமத்து திட்டப்பணி, என மொத்தம் 2 குளங்களில் ரூ.14.90 விவசாயிகளின் பங்களிப்புத்தொகை 20 சதவீதத்துடன் கூடிய குடிமராமத்து திட்டப்பணிகளை இன்று (23.03.2017) துணை கலெக்டர் (மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலம்) ஜி. பஷீர் அகமது அவர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர் சிங்காவேல் அவர்கள் பார்வையிட்டார்கள். செய்தியாளர்கள் சுற்றுப்பயணத்தின் போது உதவி செயற்பொறியாளர் சிங்காரவேல் தெரிவித்ததவாது:- அம்மாவின் அரசு தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு முதல்வர் அவர்கள் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு மூலம் தமிழகம் முழுவதும் ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 13.03.2017 அன்று துவக்கி வைத்துள்ளார்கள். தமிழக அரசு தமிழகத்தில் வறட்சியை எதிர்கொள்ளவும், நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்திடவும் விவசாயிகளின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்கும் பண்டைய குடிமராமத்து திட்டத்தினை செயல்படுத்திட உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் உள்ள குளங்களில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் 21 ஏரிகள் உள்ளன. மேலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் குருபரஅள்ளி மற்றும் சத்திரம் ஆகிய ஏரிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்டப்பணியின் மூலம் ரூ. 1.56 கோடி மதிப்பில் 1406 ஹெக்டர் (3473 ஏக்கர்) விவசாய நிலங்கள் பயனடையும். அதனடிப்படையில் அனைத்து மாவட்டத்திலும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றுதல், ஏரியின் கரையிலும், நீர்த்தேங்கும் பரப்பிலும், வாய்க்கால்களில் உள்ள புல், பூண்டு, முட்புதர்கள் அகற்றுதல், ஏரிக்கரையை வலப்படுத்துதல், ஏரியின் வழங்கு வாய்க்கால்களிலும் மிகுதி நீர் செல்லும் படிந்துள்ள வண்டல்மண்ணை அகற்றுதல், தலைமை மதகு பழுது பார்த்தல் நீர்த்தேங்கும் பரப்பின் எல்லையில் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் தடுக்கும் முகமாக குழி வெட்டவும், அங்கு பனை மரங்களை நடவும் மராமத்து பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் கோடை மழை பெய்யும் பொழுது மழைநீரை வீணாக்காமல் பாதுகாக்க முடியும். இவ்வாறு செய்யும்பொழுது நிலத்தடிநீர் உயர்வது மட்டுமல்லாமல் விவசாய பாசனத்திற்கு இந்நீரை பயன்படுத்தலாம். இத்திட்டத்தின்மூலம் விவசாயிகள் பெரிதும் பயன்அடைவார்கள் என உதவி செயற்பொறியாளர் சிங்காரவேல் அவர்கள் தெரிவித்தார்.செய்தியாளர்களின் பயணத்தின் போது உதவி பொறியாளர் ரத்னவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. சண்முகசுந்தரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) பெ. சதீஸ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம் மு. ஜனார்த்தனன், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026 -
இன்றைய ராசிபலன்
14 Mar 2026


