எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் இராமநாயக்கன் ஏரி வளாகத்தில் உலக தண்ணீர் தினத்தையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பாக தண்ணீர் சேமிப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், தலைமையில் நடைபெற்றது.இதில் ஒசூர் வட்டாட்சியர் புஷன்குமார் அவர்கள் வரவேற்புரையும், ஒசூர் சார் கலெக்டர் மரு.கே.செந்தில்ராஜ் அவர்கள் முன்னிலையுரையும், ஓசூர் நகராட்சி ஆணையாளர் பாலகிருஷ்ணன் சிறப்புரையும் ஆற்றினார்கள். பின்பு ஒசூர் மக்கள் சங்கம் ஏரிகள் பராமரிப்பு குழு தலைவர் லட்சுமணன், வணிகர் சங்க அறக்கட்டளை தலைவர் தாமஸ், வுPளுழுர் தலைவர் பிரசாந்த், கிருஸ்டியா தலைவர் ராமலிங்கம், ஒசியா தலைவர் நடராஜன், ஐஆயு தலைவர் தனசேகரன், மாசுகட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் செந்தூர்பாண்டியன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், பேசும்பொழுது:உலக தண்ணீர் தினமானது மார்ச் - 22 அன்று ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நீரின் தொன்மையை குறித்து ‘நீரின்றி அமையாது உலகு" என வள்ளுவப் பெருந்தகை திருவள்ளுவர் அவர்கள் உணர்த்தியுள்ளார்கள். ஆகவே, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். நம் முன்னோர்கள் ஏரிகள், குளங்கள், வாய்கால் என நீர்நிலைகளை ஏற்படுத்தி தண்ணீரை சேமித்து பயன்படுத்தி வந்ததோடு, நீர் ஆதாரத்தை உயர்த்தவும் காரணமாக இருந்தார்கள். இந்நிலையில் நாமும் ஒவ்வொரு ஊரில் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் கண்மாய்கள் ஆகிய நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். இதற்காக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புறம்போக்கு நிலங்களான ஏரி, குளங்கள் மற்றும் கண்மாய்கள் அனைத்தும் மக்களின் சொத்தாகும். அதனை பாதுகாக்க வேண்டியது நமது அனைவரின் கடமையாகும்.தண்ணீரை சிக்கனமாகவும், சேமிக்கவும் மழைப் பருவத்திற்கு முன்பே சாத்திய கூறுகள் உள்ள இடங்களில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சொட்டுநீர் அமைத்து விவசாயம் செய்யலாம். ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் நீரை பூமிக்கு அடியில் செலுத்தும் வகையில் ஆங்காங்கே தடுப்பணைகள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்; எனவும், நீரின் அவசியத்தையும், தேவையையும் கருத்தில் கொண்டு, தண்ணீரை நாம் ஒவ்வொருவரும் சிக்கனத்தோடு பயன்படுத்த வேண்டும், சேமிக்க வேண்டும் என கலெக்டர் அவர்கள் பேசினார். இந்நிகழ்ச்சியின் போது ஆராதனா சமூக சேவை மைய ஒருங்கிணைப்பாளர் ராதா, மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். விழா நிறைவில் சார் ஆட்சியரின் நேர் முக உதவியாளர் முத்துப்பாண்டி நன்றி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


