எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நாட்டுக்கோழி வளர்ப்பில் செயற்கை வெப்பம் அளித்தல் மற்றும் தீவனபராமரிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கோழி வளர்ப்பில் மிக முக்கியமாக செய்ய வேண்டியது வெப்ப பணி வெப்ப பராமரிப்பு .புறக்கடைகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளின் குஞ்சுகளுக்கு செயற்கை வெப்பம் அளிக்கப்படுவதில்லை. தாய்க்கோழியே தனது இறகுகளினால் மூடி குஞ்சுகளுக்கு தேவையான வெப்பத்தையும் பாதுகாப்பையும் அளிக்கிறது, வணிக நோக்கில் அதிக எண்ணிக்கையில் பராமரிக்கப்படும் கோழிக்குஞ்சுகளுக்கே செயற்கை வெப்பம் அளிக்கப்படுகிறது.
குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்த பிறகு அவற்றினுடைய உடம்பில் உள்ள இறகுகள் முழு வளர்ச்சி அடையும் வரை உடல் வெப்பநிலையை ஒரே சீராக வைத்துக்கொள்ள முடியாத காரணத்தால் செயற்கை வெப்பம் அளிப்பது இன்றியமையாததாகும். முதலில் சுத்தம் செய்யப்பட்ட இடத்தில அடைகாப்பானை அமைக்க வேண்டும். குஞ்சுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப குஞ்சுக்கு வெப்பம் அளிக்கக்கூடிய மின்சார பல்புகளை பொறுத்த வேன்டும். குஞ்சுகளை வளர்க்க ப்ரூடெர் தகடுகள் அல்லது அட்டைகள் அல்லது பந்திப் பாய்களை ஒன்றோடொன்று இணைத்து வட்ட வடிவில் அமைப்பது நல்லது. இந்த அடைக்கப்பனுக்குள் 2 அங்குல உயரத்திற்கு நெல் உமி அல்லது மர இழைப்புச் சுருள் அல்லது கடலை தோல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பரப்ப வேண்டும். கூளத்தின் மீது சுத்தமான பழைய செய்தித் தாள்களை பரப்பிவிடவேண்டும். பொதுவாக குளிர் காலங்களில் 10 நாட்களுக்கும், கோடை காலங்களில் 7 நாட்களுக்கும் செயற்கை வெப்பம் அளித்தால் போதுமானது. முதல் வாரத்தில் குஞ்சுகள் சௌகரியமாக இருக்கும் படி மின் விளக்குகளின் எண்ணிக்கை மற்றும் உயரத்தை சரி செய்யவேண்டும்.
செயற்கை வெப்பம் அளித்திட 60 வாட்ஸ் மின்விளக்குகளை தேவையான உயரத்தில் தொங்கவிடவேண்டும். அடைகாப்பானில் குஞ்சுகளின் தேவைகேற்றார் போல் செயற்கை வெப்பத்தை அதிகரித்தோ, குறைத்தோ அளித்தால் வேண்டும். தேவையான வெப்ப அளவில் குஞ்சுகள் பரவலாக இருக்கும். செயற்கை வெப்பம் அளிக்க்க மின்சாரம் இல்லாத சமயங்களில் கரி அடுப்பின் மீது இரும்பு சட்டிகளை கவிழ்த்து அல்லது பானைகளை வைத்து குஞ்சுகளுக்கு செயற்கை வெப்பத்தை அளிக்கலாம். அடைகாப்பனுக்குள் எந்த நேரமும் 50 சதவீத கோழிகள் தண்ணீர், தீவனம் சாப்பிட்டு கொண்டும் , சுறுசுறுப்பாக சுற்றி திரிந்து கொண்டும் இருக்க வேண்டும்.
தீவன பராமரிப்பு : குஞ்சுகளுக்கு முதல் 5 நாட்களுக்கு தண்ணீருடன் எதிர் உயிரி மருந்தும் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்ஸ் மற்றும் வைட்டமின் எ கலவையும் கலந்து கொடுக்க வேண்டும். கூண்டு முறையில் வளர்க்கும் கோழிகளுக்கு கூண்டின் மேற்பகுதியில் ஒரு குஞ்சுக்கு ஒரு வாட் வீதம் கணக்கிட்டு மின் விளக்கு பொருத்தி குறைந்தது முதல் ஒரு வாரம் வெப்பம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
உடலிலுள்ள தண்ணீர் தொடர்ச்சியாக தோல், சுவாசம் மற்றும் எச்சத்தின் மூலமும் வெளியேறிக்கொண்டு இருப்பதால் அதை ஈடு செய்வதற்கு எந்நேரமும் கோழிகளுக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும். மேலும் தண்ணீர் மற்றும் தீவன உபகரணங்கள் எப்போதும் சுத்தமாக இருத்தல் மிக அவசியம்.
பொதுவாக புறக்கடைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு சமசீரான தீவனம் அளிக்கப்படுவதில்லை. நாட்டுக்கோழிகள் சமையலறை கழிவுகள், சோறு, காய்கறிகள், வெங்காயம், ஆகியவற்றை உண்டு உயிர் வாழ்கின்றன. இதை தவிர வீட்டில் உள்ள உடைந்த மற்றும் உபரியான தானியங்களான நெல், அரிசி,கம்பு, சோளம், கோதுமை, அரிசிகுருணை, தவிடு, ஆகியவற்றை உட்கொள்கின்றன. மேலும் பூச்சி, புழு, கரையான்,எறும்பு, கீரைகள், புல் பூண்டு முதலியவற்றை உட்கொள்கின்றன. இவற்றை உண்பதன் மூலம் நாட்டு கோழிகளுக்கு ஓரளவிற்கு புரத சத்து கிடைத்தாலும் அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைப்பதில்லை.
எனினும் தானியங்கள் , பிண்ணாக்கு, தவிடு,, தாது உப்பு மற்றும் வைட்டமின்கள் கொண்டு தயாரித்த அணைத்து ஊட்ட சத்துகளும் அடங்கிய சமசீர் தீவனம் அளிப்பதன் மூலம் நாட்டு கோழிகள் விரைவில் விற்பனை எடையை அடைவதுடன் முட்டையிடும் திறனும் அதிகரிக்கிறது. முதல் 8 வாரங்களுக்கு குஞ்சு பருவ தீவனத்தை கொடுத்து வளர்க்க வேண்டும், சுட வைத்து ஆறவைத்த சுத்தமான தண்ணீர் அணைத்து நேரங்களிலும் குஞ்சுகளுக்கு கிடைக்குமாறு கவனித்து கொள்ளவேண்டும். வளர் நாட்டு கோழிகளுக்கு கொடுக்கப்படும் தீவனத்தில் எரிசக்தியின் அளவு 2700 கிலோ கலோரியும் , புரதத்தின் அளவு 22 சதவீதம் என்ற அளவில் இருக்க வேண்டும். மேலும் முட்டையிடும் கோழிகளுக்கு தீவனத்தில் 2 சதவீதம் கிளிஞ்சல் அளிக்கப்பட வேண்டும்.
இனப்பெருக்க பராமரிப்பு : இன சேர்க்கைக்கு ஒரு சேவலுக்கு 10 பெட்டைக் கோழிகளை பயன்படுத்தலாம். நல்ல ஆரோக்கியமான அதிக வீரியமுள்ள சேவலையே தேர்வு செய்து இனவிருத்திக்கு பயன் படுத்த வேண்டும். இதனால் நல்ல திரட்சியான குஞ்சுகளை பொரிக்க முடியும். வீரியமுள்ள சேவலைத் தேர்வு செய்து அதனை தனியாகக் காற்றோட்டமுள்ள இடத்தில் பராமரித்து, சரிவிகித உணவு கொடுத்து அதனிடமிருந்து அறிவியல் தொழிநுட்ப முறையில் விந்துவை பெற்று செயற்கை முறை கருவூட்டல் மூலம் அதிக அளவு கருவுற்ற முட்டைகளை உற்பத்தி செய்து, அதிகப்படியான கோழி குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.
பெட்டை கோழிகளுக்கு ஒரு நாளில் இயற்க்கை மற்றும் செயற்கை ஒளி இரண்டும் சேர்ந்து, சுமார் 16 மணி நேரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். பெட்டை கோழிகள் தேவையான செயற்கை ஒளி பெற 100 சதுர அடிக்கு ஒரு 60 வாட்ஸ் மின் விளக்கு பொருத்துவது அவசியம்.
செயற்கை ஒளியைக் காலையில் 2 மணி நேரமும், மாலையில் 2 மணி நேரமும் படிப்படியாக அதிகரித்து கொள்ளலாம். அல்லது நடைமுறையில் மாலையில் மட்டும் இரவு 10 மணி வரை விளக்கொளி அமைக்கலாம். நாட்டுக்கோழிகள் 7 முதல் 8 மாத காலத்தில் முட்டையிட ஆரம்பிக்கின்றன. நாட்டுக்கோழிகள் ஒரு வருடத்தில் சுமார் 60 முதல் 80 முட்டைகள் இடும். தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழிகள் வருடத்திற்கு சுமார் 150 முதல் 200 முட்டை வரை இடும் திறன் கொண்டவை.
உற்பத்தியாகும் அடைமுட்டைகளின் குஞ்சுபொரிப்புத்திறன் குறையாமல் இருக்க அடை முட்டைகளை நாம் பாதுகாக்கவேண்டும். வீட்டின் ஒரு மூலையில் மணல் குவித்து அகன்ற வாயுடைய மண் பானையில் உமியைப் போதியளவு நிரப்பி முட்டைகளை அடுக்க வேண்டும். பானையின் அகன்ற வாயினை மெல்லிய துணி கொண்டு கட்ட வேண்டும்.
அவ்வப்போது பானை மீது குளிர்ந்த நீரை தெளித்து பாதுகாத்து வந்தால் குஞ்சுபொரிக்கும் திறன் அதிகரிக்கும். வணிக நோக்கில் அதிக அடை முட்டைகளை பாதுக்காக்கும் போது முட்டைகளை முட்டை அட்டைகளில் சேமித்து முட்டை அறையின் வெப்பம் 65 டிகிரி பாரன்ஹீட் இருக்கவேண்டும். இதற்க்கு பொதுவாக குளிர்சாதன அறை போதுமானது.
சிறிய அளவில் அடை முட்டைகளைக் குஞ்சு பொரிக்க பயன்படுத்தினாலும் கரு வளர்ந்த முட்டையைக் குஞ்சு பொரிக்க பயன்படுத்துவதே சிறந்ததாகும். மின்சார குண்டு பல்பு அல்லது டார்ச் விளக்கு கொண்டு 7 ஆம் நாள் முட்டையை ஆராய வேண்டும். கரு வளர்ந்த முட்டையாக இருந்தால் ரத்தக்குழாய்கள் சிவப்பு நிறத்தில் சிலந்தி வலை போன்ற அமைப்புடன் காணப்படும்.
நாட்டுக்கோழிகள் இயற்கையாக முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொரிப்பது போன்றே செயற்கையாக வெப்பம் மற்றும் ஈரப்பதம் முட்டைகளுக்கு கொடுத்து குஞ்சு பொறிக்க குஞ்சு பொரிப்பான்கள் தற்போது அதிக அளவில் பயன்படுத்தபட்டு வருகிறது. 40 முதல் 1 லட்சம் முட்டைகள் வரை வைக்கக்கூடிய குஞ்சு பொரிப்பான்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர்: மதுரை ஐகோர்ட் கருத்து
16 Sep 2025சென்னை : மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
தமிழக முழு நேர டி.ஜி.பி. தோ்வு செய்ய செப்.26 டெல்லியில் யு.பி.எஸ்.சி. கூட்டம்
16 Sep 2025சென்னை : தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐ.பி.எஸ்.
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
வைஷாலிக்கு முதல்வர் வாழ்த்து
16 Sep 2025ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) அசத்தியுள்ளார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை, யு.ஏ.இ. வெற்றி
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை நடந்த 2 போட்டிகளில் இலங்கை, யு.ஏ.இ. வெற்றிப்பெற்றன. அடுத்த சுற்று வாய்பை இழந்தது ஓமன் வெளியேறியது.
-
காசா மீதான ராணுவ விரிவாக்கம்: பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் உத்தரவு
16 Sep 2025காசா : காசா மீதான ராணுவ விரிவாக்கம் தொடர்பாக பாலஸ்தீனர்கள் வெளியேற இஸ்ரேல் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
-
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்: தமிழக பா.ஜ.க. முக்கிய ஆலோசனை
16 Sep 2025சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை
16 Sep 2025வடகொரியா, ஆங்கில சொற்களை உச்சரிக்க அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை
16 Sep 2025வடகொரியா : ஆங்கில சொற்களை உச்சரிக்க அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது : சென்னை பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். ஆவேசம்
16 Sep 2025சென்னை : அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.