எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நாட்டுக்கோழி வளர்ப்பில் செயற்கை வெப்பம் அளித்தல் மற்றும் தீவனபராமரிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கோழி வளர்ப்பில் மிக முக்கியமாக செய்ய வேண்டியது வெப்ப பணி வெப்ப பராமரிப்பு .புறக்கடைகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளின் குஞ்சுகளுக்கு செயற்கை வெப்பம் அளிக்கப்படுவதில்லை. தாய்க்கோழியே தனது இறகுகளினால் மூடி குஞ்சுகளுக்கு தேவையான வெப்பத்தையும் பாதுகாப்பையும் அளிக்கிறது, வணிக நோக்கில் அதிக எண்ணிக்கையில் பராமரிக்கப்படும் கோழிக்குஞ்சுகளுக்கே செயற்கை வெப்பம் அளிக்கப்படுகிறது.
குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்த பிறகு அவற்றினுடைய உடம்பில் உள்ள இறகுகள் முழு வளர்ச்சி அடையும் வரை உடல் வெப்பநிலையை ஒரே சீராக வைத்துக்கொள்ள முடியாத காரணத்தால் செயற்கை வெப்பம் அளிப்பது இன்றியமையாததாகும். முதலில் சுத்தம் செய்யப்பட்ட இடத்தில அடைகாப்பானை அமைக்க வேண்டும். குஞ்சுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப குஞ்சுக்கு வெப்பம் அளிக்கக்கூடிய மின்சார பல்புகளை பொறுத்த வேன்டும். குஞ்சுகளை வளர்க்க ப்ரூடெர் தகடுகள் அல்லது அட்டைகள் அல்லது பந்திப் பாய்களை ஒன்றோடொன்று இணைத்து வட்ட வடிவில் அமைப்பது நல்லது. இந்த அடைக்கப்பனுக்குள் 2 அங்குல உயரத்திற்கு நெல் உமி அல்லது மர இழைப்புச் சுருள் அல்லது கடலை தோல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பரப்ப வேண்டும். கூளத்தின் மீது சுத்தமான பழைய செய்தித் தாள்களை பரப்பிவிடவேண்டும். பொதுவாக குளிர் காலங்களில் 10 நாட்களுக்கும், கோடை காலங்களில் 7 நாட்களுக்கும் செயற்கை வெப்பம் அளித்தால் போதுமானது. முதல் வாரத்தில் குஞ்சுகள் சௌகரியமாக இருக்கும் படி மின் விளக்குகளின் எண்ணிக்கை மற்றும் உயரத்தை சரி செய்யவேண்டும்.
செயற்கை வெப்பம் அளித்திட 60 வாட்ஸ் மின்விளக்குகளை தேவையான உயரத்தில் தொங்கவிடவேண்டும். அடைகாப்பானில் குஞ்சுகளின் தேவைகேற்றார் போல் செயற்கை வெப்பத்தை அதிகரித்தோ, குறைத்தோ அளித்தால் வேண்டும். தேவையான வெப்ப அளவில் குஞ்சுகள் பரவலாக இருக்கும். செயற்கை வெப்பம் அளிக்க்க மின்சாரம் இல்லாத சமயங்களில் கரி அடுப்பின் மீது இரும்பு சட்டிகளை கவிழ்த்து அல்லது பானைகளை வைத்து குஞ்சுகளுக்கு செயற்கை வெப்பத்தை அளிக்கலாம். அடைகாப்பனுக்குள் எந்த நேரமும் 50 சதவீத கோழிகள் தண்ணீர், தீவனம் சாப்பிட்டு கொண்டும் , சுறுசுறுப்பாக சுற்றி திரிந்து கொண்டும் இருக்க வேண்டும்.
தீவன பராமரிப்பு : குஞ்சுகளுக்கு முதல் 5 நாட்களுக்கு தண்ணீருடன் எதிர் உயிரி மருந்தும் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்ஸ் மற்றும் வைட்டமின் எ கலவையும் கலந்து கொடுக்க வேண்டும். கூண்டு முறையில் வளர்க்கும் கோழிகளுக்கு கூண்டின் மேற்பகுதியில் ஒரு குஞ்சுக்கு ஒரு வாட் வீதம் கணக்கிட்டு மின் விளக்கு பொருத்தி குறைந்தது முதல் ஒரு வாரம் வெப்பம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
உடலிலுள்ள தண்ணீர் தொடர்ச்சியாக தோல், சுவாசம் மற்றும் எச்சத்தின் மூலமும் வெளியேறிக்கொண்டு இருப்பதால் அதை ஈடு செய்வதற்கு எந்நேரமும் கோழிகளுக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும். மேலும் தண்ணீர் மற்றும் தீவன உபகரணங்கள் எப்போதும் சுத்தமாக இருத்தல் மிக அவசியம்.
பொதுவாக புறக்கடைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு சமசீரான தீவனம் அளிக்கப்படுவதில்லை. நாட்டுக்கோழிகள் சமையலறை கழிவுகள், சோறு, காய்கறிகள், வெங்காயம், ஆகியவற்றை உண்டு உயிர் வாழ்கின்றன. இதை தவிர வீட்டில் உள்ள உடைந்த மற்றும் உபரியான தானியங்களான நெல், அரிசி,கம்பு, சோளம், கோதுமை, அரிசிகுருணை, தவிடு, ஆகியவற்றை உட்கொள்கின்றன. மேலும் பூச்சி, புழு, கரையான்,எறும்பு, கீரைகள், புல் பூண்டு முதலியவற்றை உட்கொள்கின்றன. இவற்றை உண்பதன் மூலம் நாட்டு கோழிகளுக்கு ஓரளவிற்கு புரத சத்து கிடைத்தாலும் அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைப்பதில்லை.
எனினும் தானியங்கள் , பிண்ணாக்கு, தவிடு,, தாது உப்பு மற்றும் வைட்டமின்கள் கொண்டு தயாரித்த அணைத்து ஊட்ட சத்துகளும் அடங்கிய சமசீர் தீவனம் அளிப்பதன் மூலம் நாட்டு கோழிகள் விரைவில் விற்பனை எடையை அடைவதுடன் முட்டையிடும் திறனும் அதிகரிக்கிறது. முதல் 8 வாரங்களுக்கு குஞ்சு பருவ தீவனத்தை கொடுத்து வளர்க்க வேண்டும், சுட வைத்து ஆறவைத்த சுத்தமான தண்ணீர் அணைத்து நேரங்களிலும் குஞ்சுகளுக்கு கிடைக்குமாறு கவனித்து கொள்ளவேண்டும். வளர் நாட்டு கோழிகளுக்கு கொடுக்கப்படும் தீவனத்தில் எரிசக்தியின் அளவு 2700 கிலோ கலோரியும் , புரதத்தின் அளவு 22 சதவீதம் என்ற அளவில் இருக்க வேண்டும். மேலும் முட்டையிடும் கோழிகளுக்கு தீவனத்தில் 2 சதவீதம் கிளிஞ்சல் அளிக்கப்பட வேண்டும்.
இனப்பெருக்க பராமரிப்பு : இன சேர்க்கைக்கு ஒரு சேவலுக்கு 10 பெட்டைக் கோழிகளை பயன்படுத்தலாம். நல்ல ஆரோக்கியமான அதிக வீரியமுள்ள சேவலையே தேர்வு செய்து இனவிருத்திக்கு பயன் படுத்த வேண்டும். இதனால் நல்ல திரட்சியான குஞ்சுகளை பொரிக்க முடியும். வீரியமுள்ள சேவலைத் தேர்வு செய்து அதனை தனியாகக் காற்றோட்டமுள்ள இடத்தில் பராமரித்து, சரிவிகித உணவு கொடுத்து அதனிடமிருந்து அறிவியல் தொழிநுட்ப முறையில் விந்துவை பெற்று செயற்கை முறை கருவூட்டல் மூலம் அதிக அளவு கருவுற்ற முட்டைகளை உற்பத்தி செய்து, அதிகப்படியான கோழி குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.
பெட்டை கோழிகளுக்கு ஒரு நாளில் இயற்க்கை மற்றும் செயற்கை ஒளி இரண்டும் சேர்ந்து, சுமார் 16 மணி நேரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். பெட்டை கோழிகள் தேவையான செயற்கை ஒளி பெற 100 சதுர அடிக்கு ஒரு 60 வாட்ஸ் மின் விளக்கு பொருத்துவது அவசியம்.
செயற்கை ஒளியைக் காலையில் 2 மணி நேரமும், மாலையில் 2 மணி நேரமும் படிப்படியாக அதிகரித்து கொள்ளலாம். அல்லது நடைமுறையில் மாலையில் மட்டும் இரவு 10 மணி வரை விளக்கொளி அமைக்கலாம். நாட்டுக்கோழிகள் 7 முதல் 8 மாத காலத்தில் முட்டையிட ஆரம்பிக்கின்றன. நாட்டுக்கோழிகள் ஒரு வருடத்தில் சுமார் 60 முதல் 80 முட்டைகள் இடும். தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழிகள் வருடத்திற்கு சுமார் 150 முதல் 200 முட்டை வரை இடும் திறன் கொண்டவை.
உற்பத்தியாகும் அடைமுட்டைகளின் குஞ்சுபொரிப்புத்திறன் குறையாமல் இருக்க அடை முட்டைகளை நாம் பாதுகாக்கவேண்டும். வீட்டின் ஒரு மூலையில் மணல் குவித்து அகன்ற வாயுடைய மண் பானையில் உமியைப் போதியளவு நிரப்பி முட்டைகளை அடுக்க வேண்டும். பானையின் அகன்ற வாயினை மெல்லிய துணி கொண்டு கட்ட வேண்டும்.
அவ்வப்போது பானை மீது குளிர்ந்த நீரை தெளித்து பாதுகாத்து வந்தால் குஞ்சுபொரிக்கும் திறன் அதிகரிக்கும். வணிக நோக்கில் அதிக அடை முட்டைகளை பாதுக்காக்கும் போது முட்டைகளை முட்டை அட்டைகளில் சேமித்து முட்டை அறையின் வெப்பம் 65 டிகிரி பாரன்ஹீட் இருக்கவேண்டும். இதற்க்கு பொதுவாக குளிர்சாதன அறை போதுமானது.
சிறிய அளவில் அடை முட்டைகளைக் குஞ்சு பொரிக்க பயன்படுத்தினாலும் கரு வளர்ந்த முட்டையைக் குஞ்சு பொரிக்க பயன்படுத்துவதே சிறந்ததாகும். மின்சார குண்டு பல்பு அல்லது டார்ச் விளக்கு கொண்டு 7 ஆம் நாள் முட்டையை ஆராய வேண்டும். கரு வளர்ந்த முட்டையாக இருந்தால் ரத்தக்குழாய்கள் சிவப்பு நிறத்தில் சிலந்தி வலை போன்ற அமைப்புடன் காணப்படும்.
நாட்டுக்கோழிகள் இயற்கையாக முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொரிப்பது போன்றே செயற்கையாக வெப்பம் மற்றும் ஈரப்பதம் முட்டைகளுக்கு கொடுத்து குஞ்சு பொறிக்க குஞ்சு பொரிப்பான்கள் தற்போது அதிக அளவில் பயன்படுத்தபட்டு வருகிறது. 40 முதல் 1 லட்சம் முட்டைகள் வரை வைக்கக்கூடிய குஞ்சு பொரிப்பான்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
சர்வதேச அளவில் ஒரே நாளில் தங்கம் -வெள்ளி விலை வீழ்ச்சி
22 Oct 2025மும்பை : தங்கம் விலை நேற்று ஒரே நாளில் 6.3% சரிந்தது. இதேபோல் ஏற்கெனவே சரிந்து கொண்டிருக்கும் வெள்ளி விலையும் நேற்று 8.7% சரிவை சந்தித்தது.
-
குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு
22 Oct 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது.
-
ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கு மேல் சரிந்த தங்கம் விலை
22 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,700-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனையான ந
-
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
22 Oct 2025சென்னை : வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பம்பையில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஜனாதிபதி முர்மு சாமி தரிசனம்
22 Oct 2025திருவனந்தபுரம், 4 நாட்கள் சுற்றுப்பயணமாக கேரளா வந்துள்ள ஜனாதிபதி திரெளபதி முர்மு பம்பையில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு
22 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழையால் புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரித்துள்ளது.
-
லோக்பால் உறுப்பினர்களுக்கு ரூ. 5 கோடியில் சொகுசு கார்கள் வாங்க டெண்டர்
22 Oct 2025மும்பை : ஊழலை ஒழிக்கும் லோக்பால் உறுப்பினர்களுக்கு சொகுசு கார் வாங்கி கொடுப்பதா என சரத்பவார் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
-
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயல் சின்னம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக கரையை கடக்கும் 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
22 Oct 2025சென்னை, வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறாது என்றும் இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே வடதமிழ்நாடு – புத
-
கனமழையால் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
22 Oct 2025திருவாரூர் : கனமழையால் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
-
உங்களது உழைப்பு ஆச்சரியப்படுத்துகிறது: மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினி
22 Oct 2025சென்னை : உங்களது உழைப்பும், ஆளுமையும் ஆச்சரியப்படுத்துகிறது என ரஜினி தெரிவித்ததாக மாரி செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.
-
தங்க நகைகளை வீட்டில் எவ்வளவு வைக்கலாம்..? வெளியானது புதிய தகவல்கள்
22 Oct 2025புதுடெல்லி, வீட்டில் எவ்வளவு தங்க நகைகள் வைத்திருக்கலாம் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.
-
அடையாறு, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறப்பு
22 Oct 2025சென்னை : அடையாறு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து இந்திய அணி ஒருநாள் தொடரை சமன் செய்யுமா? - அடிலெய்டில் இன்று 2-வது போட்டியில் மோதல்
22 Oct 2025அடிலெய்டு : ஆஸி.,க்கு பதிலடி கொடுத்து இந்திய அணி ஒருநாள் தொடரை சமன் செய்யுமா?
-
பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு
22 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 2-வது நாளாக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
-
சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு
22 Oct 2025சென்னை : சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.
-
கடலூரில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் பலி: அமைச்சர் ஆறுதல்
22 Oct 2025கடலூர் : கடலூர் அடுத்த ஆண்டார் முள்ளி பள்ளத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அசோதை. இவர்களது மகள் ஜெயா.
-
நெல் மூட்டைகள் தேங்க மத்திய அரசே காரணம்: அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
22 Oct 2025தஞ்சாவூர், விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான் நெல்
-
கரூர் கூட்டநெரிசல் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உதவ ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்
22 Oct 2025கரூர் : கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உதவ 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் திடீர் பரபரப்பு
22 Oct 2025பத்தனம்திட்டா : ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டரின் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
22 Oct 2025தர்மபுரி : ஒகேனக்கல் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று புயலாக மாற வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம் தகவல்
22 Oct 2025சென்னை, காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாகவோ, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ மாற வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திருச்சி காவிரி - கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
22 Oct 2025திருச்சி : காவிரி மற்றும் கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
சோனி, எக்கோ ரெக்கார்டிங் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா ஐகோர்ட்டில் மனு
22 Oct 2025சென்னை : சோனி மியூசிக் நிறுவனம், எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் பிரபல இசையமைப்பாள
-
அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
22 Oct 2025சென்னை : அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்காமல் இருக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு: அனைத்து மாவட்டங்களிலும் எச்சரிக்கையாக இருக்கிறோம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
22 Oct 2025சென்னை, பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளனர் என்று தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி, அனைத்து மாவட்டங்கள