எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நாட்டுக்கோழி வளர்ப்பில் செயற்கை வெப்பம் அளித்தல் மற்றும் தீவனபராமரிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கோழி வளர்ப்பில் மிக முக்கியமாக செய்ய வேண்டியது வெப்ப பணி வெப்ப பராமரிப்பு .புறக்கடைகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளின் குஞ்சுகளுக்கு செயற்கை வெப்பம் அளிக்கப்படுவதில்லை. தாய்க்கோழியே தனது இறகுகளினால் மூடி குஞ்சுகளுக்கு தேவையான வெப்பத்தையும் பாதுகாப்பையும் அளிக்கிறது, வணிக நோக்கில் அதிக எண்ணிக்கையில் பராமரிக்கப்படும் கோழிக்குஞ்சுகளுக்கே செயற்கை வெப்பம் அளிக்கப்படுகிறது.
குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்த பிறகு அவற்றினுடைய உடம்பில் உள்ள இறகுகள் முழு வளர்ச்சி அடையும் வரை உடல் வெப்பநிலையை ஒரே சீராக வைத்துக்கொள்ள முடியாத காரணத்தால் செயற்கை வெப்பம் அளிப்பது இன்றியமையாததாகும். முதலில் சுத்தம் செய்யப்பட்ட இடத்தில அடைகாப்பானை அமைக்க வேண்டும். குஞ்சுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப குஞ்சுக்கு வெப்பம் அளிக்கக்கூடிய மின்சார பல்புகளை பொறுத்த வேன்டும். குஞ்சுகளை வளர்க்க ப்ரூடெர் தகடுகள் அல்லது அட்டைகள் அல்லது பந்திப் பாய்களை ஒன்றோடொன்று இணைத்து வட்ட வடிவில் அமைப்பது நல்லது. இந்த அடைக்கப்பனுக்குள் 2 அங்குல உயரத்திற்கு நெல் உமி அல்லது மர இழைப்புச் சுருள் அல்லது கடலை தோல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பரப்ப வேண்டும். கூளத்தின் மீது சுத்தமான பழைய செய்தித் தாள்களை பரப்பிவிடவேண்டும். பொதுவாக குளிர் காலங்களில் 10 நாட்களுக்கும், கோடை காலங்களில் 7 நாட்களுக்கும் செயற்கை வெப்பம் அளித்தால் போதுமானது. முதல் வாரத்தில் குஞ்சுகள் சௌகரியமாக இருக்கும் படி மின் விளக்குகளின் எண்ணிக்கை மற்றும் உயரத்தை சரி செய்யவேண்டும்.
செயற்கை வெப்பம் அளித்திட 60 வாட்ஸ் மின்விளக்குகளை தேவையான உயரத்தில் தொங்கவிடவேண்டும். அடைகாப்பானில் குஞ்சுகளின் தேவைகேற்றார் போல் செயற்கை வெப்பத்தை அதிகரித்தோ, குறைத்தோ அளித்தால் வேண்டும். தேவையான வெப்ப அளவில் குஞ்சுகள் பரவலாக இருக்கும். செயற்கை வெப்பம் அளிக்க்க மின்சாரம் இல்லாத சமயங்களில் கரி அடுப்பின் மீது இரும்பு சட்டிகளை கவிழ்த்து அல்லது பானைகளை வைத்து குஞ்சுகளுக்கு செயற்கை வெப்பத்தை அளிக்கலாம். அடைகாப்பனுக்குள் எந்த நேரமும் 50 சதவீத கோழிகள் தண்ணீர், தீவனம் சாப்பிட்டு கொண்டும் , சுறுசுறுப்பாக சுற்றி திரிந்து கொண்டும் இருக்க வேண்டும்.
தீவன பராமரிப்பு : குஞ்சுகளுக்கு முதல் 5 நாட்களுக்கு தண்ணீருடன் எதிர் உயிரி மருந்தும் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்ஸ் மற்றும் வைட்டமின் எ கலவையும் கலந்து கொடுக்க வேண்டும். கூண்டு முறையில் வளர்க்கும் கோழிகளுக்கு கூண்டின் மேற்பகுதியில் ஒரு குஞ்சுக்கு ஒரு வாட் வீதம் கணக்கிட்டு மின் விளக்கு பொருத்தி குறைந்தது முதல் ஒரு வாரம் வெப்பம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
உடலிலுள்ள தண்ணீர் தொடர்ச்சியாக தோல், சுவாசம் மற்றும் எச்சத்தின் மூலமும் வெளியேறிக்கொண்டு இருப்பதால் அதை ஈடு செய்வதற்கு எந்நேரமும் கோழிகளுக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும். மேலும் தண்ணீர் மற்றும் தீவன உபகரணங்கள் எப்போதும் சுத்தமாக இருத்தல் மிக அவசியம்.
பொதுவாக புறக்கடைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு சமசீரான தீவனம் அளிக்கப்படுவதில்லை. நாட்டுக்கோழிகள் சமையலறை கழிவுகள், சோறு, காய்கறிகள், வெங்காயம், ஆகியவற்றை உண்டு உயிர் வாழ்கின்றன. இதை தவிர வீட்டில் உள்ள உடைந்த மற்றும் உபரியான தானியங்களான நெல், அரிசி,கம்பு, சோளம், கோதுமை, அரிசிகுருணை, தவிடு, ஆகியவற்றை உட்கொள்கின்றன. மேலும் பூச்சி, புழு, கரையான்,எறும்பு, கீரைகள், புல் பூண்டு முதலியவற்றை உட்கொள்கின்றன. இவற்றை உண்பதன் மூலம் நாட்டு கோழிகளுக்கு ஓரளவிற்கு புரத சத்து கிடைத்தாலும் அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைப்பதில்லை.
எனினும் தானியங்கள் , பிண்ணாக்கு, தவிடு,, தாது உப்பு மற்றும் வைட்டமின்கள் கொண்டு தயாரித்த அணைத்து ஊட்ட சத்துகளும் அடங்கிய சமசீர் தீவனம் அளிப்பதன் மூலம் நாட்டு கோழிகள் விரைவில் விற்பனை எடையை அடைவதுடன் முட்டையிடும் திறனும் அதிகரிக்கிறது. முதல் 8 வாரங்களுக்கு குஞ்சு பருவ தீவனத்தை கொடுத்து வளர்க்க வேண்டும், சுட வைத்து ஆறவைத்த சுத்தமான தண்ணீர் அணைத்து நேரங்களிலும் குஞ்சுகளுக்கு கிடைக்குமாறு கவனித்து கொள்ளவேண்டும். வளர் நாட்டு கோழிகளுக்கு கொடுக்கப்படும் தீவனத்தில் எரிசக்தியின் அளவு 2700 கிலோ கலோரியும் , புரதத்தின் அளவு 22 சதவீதம் என்ற அளவில் இருக்க வேண்டும். மேலும் முட்டையிடும் கோழிகளுக்கு தீவனத்தில் 2 சதவீதம் கிளிஞ்சல் அளிக்கப்பட வேண்டும்.
இனப்பெருக்க பராமரிப்பு : இன சேர்க்கைக்கு ஒரு சேவலுக்கு 10 பெட்டைக் கோழிகளை பயன்படுத்தலாம். நல்ல ஆரோக்கியமான அதிக வீரியமுள்ள சேவலையே தேர்வு செய்து இனவிருத்திக்கு பயன் படுத்த வேண்டும். இதனால் நல்ல திரட்சியான குஞ்சுகளை பொரிக்க முடியும். வீரியமுள்ள சேவலைத் தேர்வு செய்து அதனை தனியாகக் காற்றோட்டமுள்ள இடத்தில் பராமரித்து, சரிவிகித உணவு கொடுத்து அதனிடமிருந்து அறிவியல் தொழிநுட்ப முறையில் விந்துவை பெற்று செயற்கை முறை கருவூட்டல் மூலம் அதிக அளவு கருவுற்ற முட்டைகளை உற்பத்தி செய்து, அதிகப்படியான கோழி குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.
பெட்டை கோழிகளுக்கு ஒரு நாளில் இயற்க்கை மற்றும் செயற்கை ஒளி இரண்டும் சேர்ந்து, சுமார் 16 மணி நேரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். பெட்டை கோழிகள் தேவையான செயற்கை ஒளி பெற 100 சதுர அடிக்கு ஒரு 60 வாட்ஸ் மின் விளக்கு பொருத்துவது அவசியம்.
செயற்கை ஒளியைக் காலையில் 2 மணி நேரமும், மாலையில் 2 மணி நேரமும் படிப்படியாக அதிகரித்து கொள்ளலாம். அல்லது நடைமுறையில் மாலையில் மட்டும் இரவு 10 மணி வரை விளக்கொளி அமைக்கலாம். நாட்டுக்கோழிகள் 7 முதல் 8 மாத காலத்தில் முட்டையிட ஆரம்பிக்கின்றன. நாட்டுக்கோழிகள் ஒரு வருடத்தில் சுமார் 60 முதல் 80 முட்டைகள் இடும். தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழிகள் வருடத்திற்கு சுமார் 150 முதல் 200 முட்டை வரை இடும் திறன் கொண்டவை.
உற்பத்தியாகும் அடைமுட்டைகளின் குஞ்சுபொரிப்புத்திறன் குறையாமல் இருக்க அடை முட்டைகளை நாம் பாதுகாக்கவேண்டும். வீட்டின் ஒரு மூலையில் மணல் குவித்து அகன்ற வாயுடைய மண் பானையில் உமியைப் போதியளவு நிரப்பி முட்டைகளை அடுக்க வேண்டும். பானையின் அகன்ற வாயினை மெல்லிய துணி கொண்டு கட்ட வேண்டும்.
அவ்வப்போது பானை மீது குளிர்ந்த நீரை தெளித்து பாதுகாத்து வந்தால் குஞ்சுபொரிக்கும் திறன் அதிகரிக்கும். வணிக நோக்கில் அதிக அடை முட்டைகளை பாதுக்காக்கும் போது முட்டைகளை முட்டை அட்டைகளில் சேமித்து முட்டை அறையின் வெப்பம் 65 டிகிரி பாரன்ஹீட் இருக்கவேண்டும். இதற்க்கு பொதுவாக குளிர்சாதன அறை போதுமானது.
சிறிய அளவில் அடை முட்டைகளைக் குஞ்சு பொரிக்க பயன்படுத்தினாலும் கரு வளர்ந்த முட்டையைக் குஞ்சு பொரிக்க பயன்படுத்துவதே சிறந்ததாகும். மின்சார குண்டு பல்பு அல்லது டார்ச் விளக்கு கொண்டு 7 ஆம் நாள் முட்டையை ஆராய வேண்டும். கரு வளர்ந்த முட்டையாக இருந்தால் ரத்தக்குழாய்கள் சிவப்பு நிறத்தில் சிலந்தி வலை போன்ற அமைப்புடன் காணப்படும்.
நாட்டுக்கோழிகள் இயற்கையாக முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொரிப்பது போன்றே செயற்கையாக வெப்பம் மற்றும் ஈரப்பதம் முட்டைகளுக்கு கொடுத்து குஞ்சு பொறிக்க குஞ்சு பொரிப்பான்கள் தற்போது அதிக அளவில் பயன்படுத்தபட்டு வருகிறது. 40 முதல் 1 லட்சம் முட்டைகள் வரை வைக்கக்கூடிய குஞ்சு பொரிப்பான்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
போப் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
09 May 2025புதுடில்லி, புனித போப் பதினான்காம் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-05-2025
09 May 2025 -
பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்
09 May 2025ஸ்ரீநகர், பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் : துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் தகவல்
09 May 2025வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் போருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் தெரிவித்திருக்கிறார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பேரணி
09 May 2025சென்னை, பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இன்று (மே.10) சென்னையில் தனது தலைமையில்
-
விமானநிலையங்கள் பாதுகாப்பு: அமித்ஷா தலைமையில் ஆய்வுக்கூட்டம்
09 May 2025புதுடெல்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிவரும் ராணுவ மோதல்களுக்கு மத்தியில், நாட்டிலுள்ள விமானநிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் பாதுகாப்பு நிலைமை குறித்து உள்துறை
-
பாகிஸ்தானுக்கு 3 நாடுகள் ஆதரவு: பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்
09 May 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானுக்கு சீனா, துருக்கி, அஜர்பைஜான் தெளிவான ஆதரவை வழங்க முன்வந்துள்ளன என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
-
24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
09 May 2025சென்னை, தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி, பஞ்சப்பூரில் ரூ. 408.36 கோடியில் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
09 May 2025திருச்சி, திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 40 ஏக்கரில் ரூ.408.36 கோடியில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்
-
திருச்சியில் ரூ.276.95 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
09 May 2025திருச்சி, திருச்சியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், 50 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்திடுங்கள்: கட்சியினருக்கு இ.பி.எஸ். வேண்டுகோள்
09 May 2025சென்னை, எதிர்வரும் எனது பிறந்த நாளை முன்னிட்டு, கட்சியினர் என்னை நேரில் வந்து சந்திப்பதையும், எந்தவிதமான கொண்டாட்டங்களையும் தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
-
போர்ப் பதற்றம் எதிரொலி: பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை
09 May 2025புதுடில்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் மக்கள், ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களில் என்ன செய்யலாம்?
-
எதிரிகளால் பேரிழப்பு: உலக வங்கியிடம் கூடுதல் கடன் கோரிய பாகிஸ்தான்
09 May 2025பாகிஸ்தான் : உலக வங்கயிடம் இருந்து பாகிஸ்தான் அரசு கூடுதல் கடன் கோரியுள்ளது.
-
மேலும் அதிகரிக்கும் போர் பதற்றம்: பாதுகாப்பு வளையத்துக்குள் டெல்லி - தீவிர கண்காணிப்பு
09 May 2025புதுடெல்லி, மேலும் அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
-
ஜூன் 15ம் தேதி முதல் புதிய மினி பேருந்து திட்டம்
09 May 2025சென்னை : புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூன் 15ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
-
இந்தியா-பாக் போர்ப்பதற்றம் எதிரொலி: ஐ.பி.எல். போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தம் : பி.சி.சி.ஐ. அதிகாரபூர்வ அறிவிப்பு
09 May 2025மும்பை : இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதை அடுத்து ஐ.பி.எல்.
-
மதுரை மீனாட்சியம்மன் கோவில் திருத்தேரோட்டம் கோலாகலம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
09 May 2025மதுரை : மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழாவின் திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து 11ஆம் நாள் நிகழ்வாகத் திருத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஹர ஹர சிவா என்ற பக்த
-
வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 8-ம் தேதி கடைசி நாள்
09 May 2025சென்னை : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு நேற்றுமுன்தினம் (மே 9) தொடங்கிய
-
வீரர்களை அழைத்துவர சிறப்பு ரயில்
09 May 2025இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தர்மசாலா திடலில் பஞ்சாப் கிங்ஸ் - டில்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டி வியாழக்கிழமை இரவு பாதியி
-
புதிய போப் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
09 May 2025வாடிகன் : கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் 26-ம் தேதி ரோம் நகரில் அடக்கம் செய்யப்பட்டது.
-
தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
09 May 2025புதுடெல்லி, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிட கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
ஜம்மு - காஷ்மீரில் கல்வி பயிலும் தமிழக மாணவர்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை
09 May 2025சென்னை, ஜம்மு காஷ்மீரில் தற்போதைய நிலைமை சீரானவுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயின்று வரும் 52 தமிழக மாணவர்களை மீண்டும் தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான உரிய நடவடிக்கை
-
இனிமேல் நம்முடைய பாதை சிங்கப்பாதையாக இருக்கும் திருச்சி அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 May 2025திருச்சி, இனிமேல் நாம் செல்லும் பாதை சிங்கப்பாதையாக இருக்கும். மேலும், நாட்டிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது என்று திருச்சி அரசு விழாவில் முதல்வர் மு.க.
-
தாக்குதல் முயற்சி முறியடிப்பு; பாதுகாப்பு படைகளுக்கு உமர் அப்துல்லா பாராட்டு
09 May 2025ஸ்ரீநகர், 'பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சிகள் நமது படைகளால் முறியடிக்கப்பட்டன' என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
-
இந்தியா பதிலடியில் பாக்., ராணுவ தளங்கள் சேதம்
09 May 2025புதுடில்லி, இந்தியா அளித்த பதிலடியில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள், முகாம்கள் சேதமடைந்துள்ளது தெரியவந்துள்ளது.