எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு அருட்காட்சியகம், செங்கல்பட்டு மாவட்ட சித்த வைத்திய சங்கம் மற்றும் சட்ட நாதர் சித்தர் சார் கழகம் இணைந்து நடத்தும் சித்தர்கள் சிறப்பு தினவிழா மாநாடு ஓட்டல் தமிழ்நாடு வளாகம் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டினை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தொடங்கி வைத்தார்.
சித்தர்கள்
இம்மாநாட்டில் பேசிய மாவட்ட கலெக்டர் அவர்கள் முற்காலம் தொட்டு சிறப்பு மிக்க இந்த காஞ்சி மாநகரம் சமணம், புத்தம், சைவம், வைணவம் என அனைத்து மதங்களும் வளர்ந்த வரலாற்று இடமாகும். இந்நகரம் நாளந்தா பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த தர்மபாலர் மற்றும் போதிதர்மர் போன்ற சான்றோர்கள் வாழ்ந்த இடமாகும்.
18 சித்தர்கள் தங்களது முயற்சியால் இயற்கையான முறையில் உருவாக்கிய பல மூலிகைகள் நமக்கு கிடைத்த அரும்பொருள்களாகும். சித்தர்களை அறிஞர்கள், மேதைகள், விஞ்ஞானிகள், மெய்ஞானிகள் என்று எப்படி வேண்டுமானலும் அழைக்கலாம் அவ்வளவு திறமை வாய்ந்தவர்கள், உதாரணமாக மூலை வடிவம் உடைய இலையான வல்லரை கீரை நினைவாற்றலை பெருக்கும் அதனால் தான் சித்தர்கள் சரஸ்வதி என வல்லரைக் கீரையை அழைத்தனர். மூட நம்பிக்கைகளையும் அறிவுக்கு பொருந்தாதவற்றையும் எதிர்த்த சீத்தர்கள் என் பார்வைக்கு சீர் திருத்தவாதிகளே குறிப்பாக கடுவெளி சித்தர் மற்றும் இடைக்கழிநாட்டு சித்தர் ஆகியோர் இந்த காஞ்சி மாநகரைச் சார்ந்தவர்கள் என்பதில் நாம் பெருமைபட வேண்டும் நண்பர்களே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நமது சித்தர்கள் வான வாஸ்திரம் பூமியின் தட்பவெப்பநிலை, மழை, புயல், ஆகியவற்றை கணித்து முறையாக பின்பற்றினர்.
சித்தர்கள் ஜோதிடவியலிலும் சிறந்தவர்கள் கேரளாவில் நோய்களுக்கு மணி, மந்திர, அவுசதம் என்ற 3 என்றாலும் சிகிச்சை அளிப்பதை இன்றும் நீங்கள் பார்க்கலாம். அருணகிரியாரின் மெய்ஞானத் தமிழில் மூழ்கி திளைத்த வள்ளலாரும் தாயுமானவரும் சித்தர்களை முன் வைத்து எண்ணத்தக்ககவர்கள் என்பதை யாரும் மறக்க முடியாது. அரிய பல சித்த மருத்துவ குறிப்புகள் நமக்கு கிடைக்காமல் போனதற்கு நம்மிடையே முறையான ஆவணப்படுத்துதல் இல்லாமல் போனதே காரணம் பல நோய்களுக்கு சித்தர்கள் மருந்துகளை உண்டாக்கியுள்ளனர். அவைகள் நமக்கு கிடைத்திருந்தால் மருத்துவ உலகில் தமிழர்கள் தனி இடம் பிடித்திருப்பர். தமிழகம் முழுவதிலிரும் இருந்து வந்திருக்கும் சித்த மருத்துவர்களை காணும் போது நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
"உணவே மருந்து" என்ற தமிழர்களின் தாரக மந்திரத்தை யாரலும் மறக்க முடியாது அது போல சித்தர்களையும் யாராலும் வெறுக்க முடியாது இது போன்ற தமிழர்களின் பாரம்பரியம் மிக்க நிகழ்ச்சிகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அரிய வகை மூலிகைகள் மற்றும் இயற்கை முறையில் உணவு ஆகியவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி நோயற்ற வாழ்க்கையை வாழவும் நம் முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை பின்பற்றவும் இது போன்ற நிகழ்ச்சிகள் பெரும் பங்கு வகிக்கும். மேலும், அரிய இந்த மனித உடலை பேணி காப்பது சித்த மருத்துவம் அரிய பல பொக்கிஷங்களை பேணிகாப்பது அருங்காட்சியகம் அப்படிப்பட்ட இந்த இடத்தில் இந்நிகழ்ச்சி நடத்திட ஏற்பாடு செய்த அருங்காட்சியக காப்பாட்சியர் பணியாளர்கள் மற்றும் அனைத்து சித்த மருத்துவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுமக்கள், மாணவர்கள், தாய்மார்கள் இந்த நிகழ்வை பயன்படுத்தி நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், மாநாட்டுக் குழு தலைவர்.மரு.வி.ஜோதி பிரகாசம், செங்கல்பட்டு மாவட்ட சித்த வைத்தியர் சங்கம் மரு.ஆர்.நடராஜன், அரசு அருங்காட்சியகம், காப்பாட்சியர் சு.உமாசங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 20 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
டி-20-யில் 100 விக்கெட்: அர்ஷ்தீப் சிங் புதிய மைல்கல்
20 Sep 2025அபுதாபி, டி-20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா சி.எம். சார்? - விஜய் கேள்வி
20 Sep 2025நாகை, வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீதா என்று முதல்வருக்கு விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
சென்னை குடிநீர் செயலியை முதல்வர் தொடங்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, சென்னையில் குடிநீர் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
-
பிரதமர் பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா? - த.வெ.க. தலைவர் கேள்வி
20 Sep 2025நாகை, பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ஓமன் அணிக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்தது: சூர்யகுமார்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடைசி லீக் ஆட்டம்...
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சிறப்பாக பந்து வீசியது: ஓமன் அணிக்கு சாம்சன் புகழாரம்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓமன் மிகவும் சிறப்பாக பந்து வீசியதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
2026 தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி..! நாகையில் விஜய் பரபரப்பு பேச்சு
20 Sep 2025நாகை, 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. என்று விஜய் தெரிவித்துள்ளார்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டம்
20 Sep 2025வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.