எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நினைவாற்றல் ஐம்புலன்களில் இருந்து வரும் உணர்வுகள் மூளையை அடைகின்றன. மூளை அவற்றை வகைப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்த உணர்வுகள் மூளையிலேயே தங்கி இருந்தால் அவை நினைவுகளாக மாறிவிடுகின்றன. தேவை ஏற்படும்போது இந்த நினைவுகளை மீட்டெடுக்கமுடியும். தக்க பயிற்சிகளின் மூலம் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். சரியில்லாத நினைவாற்றல் என்று ஒன்று இல்லை. நினைவாற்றல் என்பது ஒரு திறமை. நமது நினைவாற்றலுக்கு மூளை இன்றியமையாதது. ஏந்த ஒரு மருந்தோ மூலிகையோ மூளைத்திறனை அதிகப்படுத்திவிடாது. தவறான மருந்துகள் நினைவாற்றலை பாதிக்கத்தான் செய்கின்றன.
நினைவாற்றலை குறுகிய கால நினைவாற்றல், நீண்டகால நினைவாற்றல் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். நமது மூளை அன்றாடம் ஆயிரக்கணக்கான தகவல்களைப் பெறுகிறது. அத்தனை தகவல்களையும் மூளையிலேயே சேமித்து வைக்கவேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. அவசியமான காலத்திற்கு மட்டுமே அந்த தகவல்கள் மூளையில் சேமித்துவைக்கப்படுகின்றன. பணி முடிந்ததும் அந்த தகவல்கள் மறக்கப்பட்டு விடுகின்றன. இதுவே குறுகியகால நினைவாற்றல்.
நாம் செய்யும் தொழிலுக்குத் தேவையானவை, நம்முடைய மனதை மிகவும் கவர்ந்தவை அல்லது பாதித்தவை, மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்தவை ஆகிய தகவல்கள் நம்முடைய மூளையில் நீண்டகால நினைவுகளாக தங்கிவிடுகின்றன. நீண்டகால நினைவுகளில் இருந்து தகவல்களை மீட்டெப்பதற்கு மூளை சிலநேரங்களில் சிரமப்படுவதை நாம் உணரமுடியும்.
ஞாபகம் ஒரு வியாதி, மறதி ஒரு வரம் என்று கூறுவார்கள். ஆனால் மாணவர்கள் படித்த பாடங்களை நினைவில் கொள்ள ஞாபக சக்தியை அதிகப்படுத்த வேண்டும். மனித மூளை 75 சதவீதம் நீரினால் நிரப்பப்பட்டுள்ளது. நாம் பார்க்கும், கேட்கும், உணரும், சுவைக்கும் மற்றும் நுகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும். இது நமது மனதில் குறைந்த நேரமே இருக்கும். உடனே மறைந்துவிடும். இதை நினைவில் கொள்ள ஆர்வத்துடன் கவனமாக செயல்படவேண்டும். திரும்பத்திரும்ப நினைத்துப்பார்த்து ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் அதிக வெப்பமான சூழ்நிலை மற்றும் வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ள இடங்களை தவிர்க்கவேண்டும். இதனால் நமது உடல்சோர்வு ஏற்பட்டு மூளையின் செயல் குறைந்துவிடும். அதிகநேரம் விளையாட்டில் ஈடுபட்டிருக்கவும் கூடாது. இதனால் நமது மூளையின் திறன் அல்லது கற்கும் திறன் குறைந்து உடல் சோர்வு ஏற்பட்டுவிடுகிறது. சிறிது நேரம் உடல்பயிற்சி மூலம் நினைவாற்றலை அதிகப்படுத்தவும் முடியும். மெது ஓட்டம் மற்றும் நீச்சல் பயிற்சி செய்வதன் மூலம் நினைவாற்றல் அதிகப்படும். இவ்வகையான உடல்பயிற்சியை அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் தினமும் சிறிது நேரம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.
நல்ல சூழ்நிலைகளில் வாழ்ந்து படிக்கும் மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகப்படவும் வாய்ப்புள்ளது. நினைவாற்றலை அதிகப்படுத்த நல்ல ஆழ்ந்த தூக்கம் தேவை. இரவு நேர தூக்கத்தில் குறைந்தது ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். நல்ல தூக்கம் நமது உடலுக்கும் மனதுக்கும் நல்ல ஆரோக்கியத்தைத் தரும். மேலும் நினைவாற்றலும் 30 முதல் 40 சதவிகிதம் அதிகமாகிறது.
ஒரு செயலை செய்வதற்கு விருப்பமும் ஆர்வமும் இருக்க வேண்டும். எழுத்துக்களை பார்த்து மனதில் பதியவைப்பதைவிட படங்களை பார்த்து மனதில் பதிய வைப்பது மிகவும் எளிது. மேலும் ஒரே நேரத்தில் பல வேலைகளை கவனமாக செய்யும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் நினைவாற்றல் அதிகப்படும்.
நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு
1. தன்னம்பிக்கை,
2. ஆர்வம்,
3. செயல் ஊக்கம்,
4. விழிப்புணர்வு,
5. புரிந்துகொள்ளல்
6. உடல் நலம் ஆகியவை காரணமாக இருக்கின்றன.
1. தன்னம்பிக்கை : என்னால் பாடங்களை நன்றாக படித்து நினைவில் வைத்துக்கொள்ளமுடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது. எனக்கு நினைவாற்றல் நன்றாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்.
2. ஆர்வம் : எந்த ஒரு விசயத்தையும் ஆர்வத்துடன் கவனித்தாலோ அல்லது செயல்பட்டாலோ நமது நினைவில் நன்றாக பதியும். மேலும் ஆர்வம் இல்லாவிட்டாலும் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட்டு நினைவில் பதியவைத்தால் நமது மனதில் நன்றாக பதியும்.
3. செயல் ஊக்கம் : இந்த பாடங்களை அல்லது விசயங்களை ஏன் கற்க வேண்டும், எவ்வகையில் இவை நமக்கு பயன் தரும் என்று நம்மோடு அந்த விசயங்களை இணைத்துக்கொண்டு செய்தால் நம் மனதில் நன்றாக பதியும்.
4. விழிப்புணர்வு : மனம் விழிப்பு நிலையில் இருக்கும்பொழுது கவனமும், ஒருமைப்பாடும் மிகச்சிறந்து இருக்கும்
5. புரிந்துகொள்ளல் : புரிந்துகொண்டு செய்யும் செயல்கள் நம் மனதில் நன்றாக பதியும். மாணவர்கள் பாடங்களை புரிந்துகொண்டு படித்தால் நினைவில் நன்றாக நிற்கும்.
6. உடல் ஆரோக்கியம் : உடல் ஆரோக்கியமாக இருக்கும் போது நினைவாற்றல் நன்றாக இருக்கும். ஆரோக்கியமான உடலில் மூளைக்கு நிறைய இரத்த ஓட்டம், காற்றோட்டம் சென்று மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். தக்க உணவு, சரியான உறக்கம், முறையான பயிற்சிகள் மூலம் உடலை நன்கு பேணிப் பாதுகாத்தால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.
நினைவாற்றல் அதிகரிக்க சில உணவு முறைகள் : தினமும் உணவில் சீரகம் மற்றும் மிளகு கண்டிப்பாக இடம் பெற வேண்டும். இவை குழந்தைகளின் மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன. பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு, குளுட்டாமிக் அமிலம் ஆகியவை உள்ளது. ஆகையால் நினைவாற்றலை அதிகப்படுத்திக்கொள்ளவும் நரம்புகளைப் பல்பபடுத்திக்கொள்ளவும் உதவுகிறது. நினைவாற்றலை அதிகரிக்க வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இது நினைவாற்றலை அதிகரிக்கும். பப்பாளிப்பழம், நெல்லிக்காய், வேர்க்கடலை ஆகியவற்றை சாப்பிடுவதால் நினைவாற்றல் பலப்படும். அக்ரூட் பருப்புகளுடன் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் சாப்பிடுவதால் மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். பசலைக்கீரையை வாரம் ஒரு நாள் உணவில் சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்.
தொகுப்பு: கே.சுரேஷ், சேலம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
இந்தியாவில் 30 கோடி மக்களை நிலநடுக்கம் தாக்கும் அபாயம் : அதிர்ச்சி தகவல் வெளியீடு
21 Apr 2025வாஷிங்டன் : உலகில் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக இமயமலை உள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம்: தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்தை கடந்தது
21 Apr 2025சென்னை, தங்கம் விலை மற்றொரு புதிய உச்சமாக நேற்று (ஏப்.21) ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனையானது.
-
10-ம் வகுப்பு வினாத்தாளில் குழப்பம்: மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு
21 Apr 2025சென்னை, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில் குழப்பம் ஏற்பட்டதையடுத்து மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
பெல்ஜியம் கார் ரேஸில் 2-ம் இடம் பிடித்த அஜித் அணிக்கு பிரபலங்கள் வாழ்த்துகள்
21 Apr 2025சென்னை : பெல்ஜியம் நாட்டில் உள்ள புகழ்பெற்ற Spa Francorchamps சர்கியூட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் அணி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
போப் பிரான்சிஸ் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
21 Apr 2025சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வந்தவர் போப் பிரான்சிஸ் (வயது 88).
-
போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
21 Apr 2025சென்னை, கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவுக்கு வைகோ, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
சீர்திருத்தங்களை ஆதரித்தவர்: போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்
21 Apr 2025வாடிகன், கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவர் போப் பிரான்சிஸின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: நிர்மலா சீதாராமன் அமெரிக்கா பயணம்
21 Apr 2025புதுடெல்லி : வர்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தை முயற்சிகளை இந்தியா துரிதப்படுத்த உள்ளது.
-
பிரபுவின் கோரிக்கை ஏற்பு: நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்
21 Apr 2025சென்னை : நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்துள்ளது.
-
போப் பிரான்சிஸ் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
21 Apr 2025சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வந்தவர் போப் பிரான்சிஸ் (வயது 88).
-
ஏற்கனவே மேல குற்றம் சொல்றாங்க: மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு வேற உத்தரவு போடணுமா? சுப்ரீம் கோர்ட்
21 Apr 2025டெல்லி : ஏற்கனவே மேல குற்றம் சொல்றாங்க, இதுல மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு வேற உத்தரவு போடணுமா? என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், இ.பி.எஸ். காரசார விவாதம்
21 Apr 2025சென்னை, பா.ஜ.க. உடன் கூட்டணி அமைத்திருக்கும் அ.தி.மு.க., நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணியில் இருப்போம் என்ற கண்டிஷனைப் போட்டு தொடர அருகதை இருக்கிறதா?
-
ஏமனில் அமெரிக்கா தாக்குதல்: 12 பேர் பலி - 30 பேர் படுகாயம்
21 Apr 2025சனா : ஏமனில் உள்ள ராஸ் இசா எரிபொருள் துறைமுகத்தை தாக்கியது. இதில் 74 பேர் கொல்லப் பட்டதைத் தொடர்ந்து தற்போதைய தாக்குதல் நடந்துள்ளது.
-
எங்களுடைய இழப்பில் ஆதாயம் தேட வேண்டாம் : உலக நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை
21 Apr 2025பெய்ஜிங் : எங்களுடைய இழப்பில் ஆதாயம் தேட வேண்டாம் என உலக நாடுகளை சீனா எச்சரித்துள்ளது.
-
தமிழில் பெயர் பலகை வைக்கா விட்டால் அபராதம் அதிகரிப்பு: அமைச்சர் சாமிநாதன்
21 Apr 2025சென்னை, தமிழில் பெயர்பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 50 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ள
-
புதிய போப் எப்படி தேர்வு செய்யப்படுவார்?
21 Apr 2025வாடிகன் : புதிய போப் எப்படி தேர்வு செய்யப்படுவார்? விதிமுறைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
மாநில சுயாட்சிக்கான போராட்டம் அனைத்து மாநிலங்களுக்குமானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
21 Apr 2025சென்னை, கூட்டாட்சியியலின் சமநிலையை உறுதிசெய்வது ஒரு கோரிக்கை மட்டுமல்ல, அது அரசியலமைப்புச் சட்டம் விதிக்கும் கடமை.
-
5 நாட்களுக்கு வெயில் மேலும் அதிகரிக்கும்: வானிலை மையம்
21 Apr 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பாக். கிரிக்கெட் வாரியம் மறுப்பு
21 Apr 2025செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 26 வரை இந்தியாவில் ஐ.சி.சி.
-
எங்களுக்கு எதிராக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வோரை நாங்கள் எதிர்க்கிறோம் - சீனா
21 Apr 2025சீனா : சீனாவுடன் வர்த்தகத்தை நிறுத்தும்படி மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளது.
-
ஜார்கண்டில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை
21 Apr 2025ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தில் 6 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
-
கேரளாவிற்கு எதிராக எதிர்மறையான நிலை: மத்திய அரசு மீது பினராயி குற்றச்சாட்டு
21 Apr 2025திருவனந்தபுரம் : கேரளாவிற்கு எதிராக எதிர்மறையான நிலையில் மத்திய அரசு உள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டியுள்ளார்.
-
தலைக்கவசம் அணியாத காவலர்கள் இடைநீக்கம்: டி.ஜி.பி. உத்தரவு
21 Apr 2025சென்னை : தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டும் காவலர்களை உடனடியாக இடைநீக்கம் செய்ய தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-04-2025
22 Apr 2025 -
அடுத்த சீசனுக்கு ஆடும் லெவனை தயார் செய்ய வேண்டும்: கேப்டன் தோனி
21 Apr 2025மும்பை : நடப்பு ஐ.பி.எல். சீசனில் 6-வது தோல்வியை பதிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.