எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், திருப்பூர் அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவப் பெருமாள் திருக்கோயில்கள் தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது.
தேர்திருவிழா
திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டம், திருப்பூர் மாநகரில் அமைந்துள்ள அருள்மிகு. விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவப் பெருமாள் திருக்கோயில்கள் தேர் திருவிழா 07.06.2017 மற்றும் 08.06.2017 ஆகிய நாட்களில் நடைபெறுவதை முன்னிட்டு இந்த திருக்கோயில்களுக்கு பெருமளவில் பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மேற்படி விழாவின் போது எவ்வித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் உரிய காவல் பாதுகாப்பு வழங்குவதுடன் இவ்விழாவின் போது கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே கூட்ட நெரிசலை தடுக்கும் விதமாக ஓர் ஒழுங்கு வரிசை ஏற்படுத்தி தேவைக்கேற்ப காவலர்கள், ஊர்காவல் படையினர் ஆகியோரை பணியில் அமர்த்தி சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளல். மேற்படி விழாவின் போது கோயில்களுக்கு வாகனங்களில் வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த போதிய அளவில் இடவசதி செய்தல். மேலும், வாகன போக்குவரத்தினை மாற்றி அமைப்பது தொடர்பாகவும், உரிய நடவடிக்கையினை மாநகர காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டும்.
பக்தர்கள் கூடும் இடம்
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திருக்கோயில்களின் தேர் திருவிழாவின் போது கோயில்களின் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திடவும், திருக்கோயிலில் பக்தர்கள் கூடுகின்ற அனைத்து இடங்களையும் சுத்தம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளல். தேரோடும் வீதிகளை செப்பனிடுதல், தடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்தல், திருக்கோயில் வளாகத்தில் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகள் ஆங்காங்கே வைத்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கல் மற்றும் தண்ணீர் வசதியுடன் கூடிய தற்காலிகமாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தேவையான கழிப்பறைகள் தனித்தனியாக அமைத்தல் மற்றும் தேவையான குப்பைத்தொட்டிகள் வைக்க வேண்டும். அப்பகுதிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதையில் ஆக்கிரமணம் ஏற்படாது, காவல் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருடன் இணைந்து கண்காணித்தல். மேலும், திருக்கோயில்களை சுற்றியுள்ள வீதிகளில் போதிய அளவு மின் விளக்குகள் மற்றும் குடிநீர் வசதிகள் மேற்கொள்ளல். திருக்கோயில்களை சுற்றியுள்ள தெருக்களை செப்பனிடவும் வேண்டும்.
சிறப்பு பேருந்துகள்
மேலும், மண்டல மேலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருப்பூர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர், திருப்பூர்(தெற்கு) திருக்கோயில்களின் தேர் திருவிழாவினை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வரும் பொதுமக்கள் கோவிலுக்கு சிரமமின்றி வந்திட ஏதுவாக, சூழ்நிலைக்கேற்ப தேவையான அளவு சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இணை இயக்குநர், (மருத்துவம் மற்றும் சுகாதாரம்) திருக்கோயில் தேர் திருவிழாவினை முன்னிட்டு, பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் பொது சுகாதாரம் பேணுதல் மற்றும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவு மருந்துகள் இருப்பு வைப்பதோடு, மருத்துவர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் பணியில் இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளல். தேரோட்டத்தின் போது உரிய மருத்துவர்கள் குழுவினருடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று உடன் சுற்றி வரவேண்டும். தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தேர் திருவிழாவினை முன்னிட்டு தீ விபத்து ஏற்படாமல் தடுத்திடும் நோக்கில் தீயணைப்பு வாகனம் இரண்டு தயார் நிலையில் தண்ணீருடன் கோயில்களுக்கு அருகில் நிறுத்த வேண்டும்.
மின்தை ஏற்படா வண்ணம்
தமிழ்நாடு மின்சார வாரியத்தினர் திருக்கோயில்கள் தேர் திருவிழாவினை முன்னிட்டு 07.06.2017 மற்றும் 08.06.2017 வரை அப்பகுதியில் மின்தடை ஏற்படா வண்ணம் உரிய ஏற்பாடுகள் செய்தல். தேரோட்டத்தின் போது ரதவீதிகளில் குறுக்காகச் செல்லும் மின்கம்பிகளை தற்காலிகமாக தளர்த்திக்கொடுக்க வேண்டும். தேரோட்டம் முடிந்ததும் மீண்டும் மின் இணைப்பு கொடுக்க வேண்டும். இத்தேர்திருவிழாவிற்கு பெருமளவில் மக்கள் கூட வாய்ப்புள்ளது என்பதால், அப்பகுதியில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்சார கம்பிகள் உறுதி தன்மையை தணிக்கை செய்து எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நிகழா வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினர் தேர் திருவிழாவினை முன்னிட்டு தேரோடும் வீதிகளில் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள விளம்பர பலகைகள் அகற்றப்படவேண்டும் மற்றும் தேரோடும் சாலைகளில் உள்ள குழிகளை தார் போட்டு நிரப்பி செப்பனிட்டு மராமத்து பணிகள் செய்ய வேண்டும்.
கூட்ட நெரிசல்
இந்து சமய அறநிலைத்துறையினர் தேர் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு இடையே கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்யும் வகையில் உரிய மூங்கில் தடுப்புகளை பொதுப்பணித்துறை மற்றும் காவல் துறையினருடன் இணைந்து மேற்கொள்ளல். பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி சுவாமி தரிசனம் செய்ய உரிய அனைத்து ஏற்பாடுகள் செய்தல் மற்றும் அனைத்து பணிகளையும் கண்காணித்திட வேண்டும். திருப்பூர் சார் கலெக்டர், அனைத்து துறை சார்ந்த பணிகளையும் ஒருங்கிணைத்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு மேற்படி திருப்பூர் தெற்கு வட்டம் மற்றும் மாநகரில் அமைந்துள்ள அருள்மிகு.விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவப் பெருமாள் திருக்கோயில்கள் தேர் திருவிழாவினை சீரிய முறையில் நடத்திட உரிய ஏற்பாடுகள் செய்து தேர்திருவிழாவினை சிறப்பான முறையில் நடத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஹர்சினி,திருப்பூர் மாநகர பொறியாளர் ரவி, மாநகர் நல அலுவலர் மரு. பூபதி, காவல் துறை, போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
கரூர் நெரிசல் சம்பவத்தை எடுத்த அ.தி.மு.க.வினர்: துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர்கள்
15 Oct 2025சென்னை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர்கள் பேசியதாவல் அ.தி.மு.க.வினர் வெளிநாடப்பு செய்தனர்.
-
தங்கம் விலை மேலும் உயர்வு
15 Oct 2025சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,860-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94,880-க்கும் விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-10-2025.
15 Oct 2025 -
ஒருநாள் - டி-20 போட்டி தொடர்: ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி
15 Oct 2025மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி-202 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் நேற்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர்.
-
நாளை வெளியாகும் டியூட்
15 Oct 2025அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’.
-
விக்ரம் பிரபு அக்ஷய் குமார் கூட்டணியில் உருவாகும் சிறை
15 Oct 2025செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ SS லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு & L.K அக்ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், உண்மைச்
-
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
15 Oct 2025சென்னை : செப்.27-ம் தேதி மதியம் 12 மணிக்கு த.வெ.க.
-
விளையாட்டு பல்கலை. சட்ட மசோதா: சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
15 Oct 2025புதுடெல்லி : உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தொடர்பாக கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு த
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: அ.தி.மு.க.விற்கு முதல்வர் பாராட்டு
15 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த அதே இடத்தில் அதற்கு இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க.
-
நாளை தீபாவளி தினத்தன்று வெளியாகும் டீசல்
15 Oct 2025தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டீசல்'.
-
ஆந்திர மாநிலத்தில் ரூ.13,430 கோடியில் திட்ட பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்
15 Oct 2025ஆந்திரா, பிரதமர் மோடி இன்று ஆந்திராவில் ரூ.13,430 கோடி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
-
முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கும் வடமாநில பயணிகள் மீது நடவடிக்கை : தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு
15 Oct 2025சென்னை : முன்பதிவு பெட்டிகளில் வட மாநில பயணிகள் பயணிப்பதையடுத்து அவர்களுக்கு தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
மைலாஞ்சி பட இசை வெளியீட்டு விழா
15 Oct 2025அஜயன் பாலா இயக்கத்தில் மாடம் பட நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் படம் மைலாஞ்சி இப்படத்தில் அவருக்கு ஜோடியாக க்ருஷா குரூப் நடித்திருக்கிறார்.
-
தண்ணீரிலும், தரையிலும் பயணிக்கும் பேரிடர் வாகனங்கள் வாங்கப்படும் : அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
15 Oct 2025சென்னை : தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் பேரிடர் வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
கரூர் நெரிசல் சம்பவத்தில் சுப்ரீம் கோர்ட் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
15 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கும் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ள
-
கென்யா முன்னாள் பிரதமர் கேரளாவில் மரணம்
15 Oct 2025திருவனந்தபுரம் : கென்யா முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா கேரளாவில் மரணம் அடைந்தார்.
-
வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் தீ விபத்து; 16 தொழிலாளர்கள் பலி
15 Oct 2025டாக்கா : வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
-
உலக கோப்பையில் தொடர் தோல்வி: உஜ்ஜைனி கோவிலில் சாமி தரிசனம் செய்த இந்திய அணி
15 Oct 2025உஜ்ஜைனி : உலக கோப்பையில் தொடர் தோல்வியை அடுத்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனியின் மகாகாலேஷ்வர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய
-
இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஆறு பாலஸ்தீனியர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவால் சுட்டுக்கொலை
15 Oct 2025காசா சிட்டி : இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக 6 பாலஸ்தீனியர்களை பொதுவெளியில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுட்டுக்கொன்றனர்.
-
தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை 500 கோடி ரூபாயை தாண்ட வாய்ப்பு
15 Oct 2025சென்னை : தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்ட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பாக்ஸ்கான் நிறுவன முதலீடு விவகாரம்: தமிழக அரசுக்கு அ.தி.மு.க. கண்டனம்
15 Oct 2025சென்னை : தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் முதலீடு தொடர்பாக முதல்வருக்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
-
எங்கள் கட்சிக்கு அனுமதி மறுத்த இடத்தில் த.வெ.க.வுக்கு அனுமதி : சட்டசபையில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
15 Oct 2025சென்னை : எங்கள் கட்சிக்கு அனுமதி மறுத்த இடத்தில் த.வெ.க.வுக்கு அனுமதி கொடுத்தனர் என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டாக கூறினார்.
-
த.வெ.க. சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த விஜய் உத்தரவு
15 Oct 2025சென்னை : கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழக அரசின் நடவடிக்கையால் ஆம்னி பஸ் கட்டணம் குறைப்பு
15 Oct 2025சென்னை : 4 மடங்கு உயர்ந்த ஆம்னி பஸ் கட்டணம் தமிழக அரசின் நடவடிக்கையால் குறைக்கப்பட்டுள்ளது.
-
தீபாவளிக்கு பண்டிகைக்கு டெல்லியில் பட்டாசுகளை விற்பதற்கு, வெடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி
15 Oct 2025புதுடெல்லி : டெல்லியில் தீபாவளிக்கு பசுமை பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.