முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாட்டிறைச்சி விவகாரம்: மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நோட்டிஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட் வழக்கின் விசாரணையை ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

பலத்த எதிர்ப்பு

சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு சமீபத்தில் அறிவிக்கை வெளியிட்டது. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எதிர்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தின. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் இதை அமல்படுத்தமாட்டோம் என்று தெரிவித்தன. நாடு முழுவதும் போராட்டம் தீவிரமானது. மாட்டிறைச்சி விவகாரத்தில் கேரள சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசுக்கு நோட்டீஸ்

இதற்கிடையில், இறைச்சிக்காக மாடுகளை விற்க விதிக்கப்பட்டிருந்த மத்திய அரசின் தடை உத்தரவுக்கு எதிராக ஐதராபாத்தை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. அப்போது, மாட்டிறைச்சி தொடர்பான மத்திய அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட்,  இந்த விவகாரத்தில் 2 வாரத்துக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று நோட்டிஸ் அனுப்பியது. மேலும் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து